Showing posts with label Wounded tigers. Show all posts
Showing posts with label Wounded tigers. Show all posts

Sunday, June 22, 2008

கனடாவில் உலகதமிழர் இயக்கம் புரிந்த காடைத்தனங்கள்

கனடாவில் தடை செய்தவர்களே! தடைசெய்யப்பட்டுவிட்டார்கள்

ரொரன்ரோவில் இருந்து ஞானச்சந்திரன் ஞானவேல்; விக்னேஸ்; இராஐரட்னம்

கனேடிய அரசினால் உலகத்தமிழர் இயக்கம்; தடை செய்யப்பட்டதிற்கான முழுப்பொறுப்பையும் உலகத்தமிழர் இயக்கமே பொறுப்பு ஏற்கவேண்டும். சுருங்ககூறினால் தங்கள் தலையிலேயே தாங்கள் மண்ணை அள்ளிபோட்டு இருக்கிறார்கள். இவர்களினால் கடந்தகாலங்களில் கனேடியத்தமிழர்கள் மீதுமேற்கொள்ளப்பட்ட தடைகளும் அடாவடித் தனங்களும் வன்முறைகளும்தான் இவர்களின் தடைக்கு மூலகாரணமாகும்.

1989ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு தமது சர்வதிகார ஆதிக்கத்தை கனடாவிலும் காட்ட ஆரம்பித்தனா.; தாயகம் என்ற பத்திரிகை பலரின் அபிமானத்தை பெற்ற பத்திரிகையாகவும் உள்ளதை உள்ளபடி எழுதியும் வந்தது உண்மையை எழுதியபடியால் உலகத்தமிழர் இயக்கத்திற்கு இது பிடிக்கவில்லை. தமிழ்வர்த்தக நிலையங்களுக்கு சென்ற உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள்; இப்பத்திரிகை தம்மால் தடை செய்யப்பட்டிருக்கிறது இதனை விற்ககூடாது என எச்சரிக்கை செய்தனர். ஆனால் சில வர்த்தகர்கள் அதனையும் மீறி விற்பனை செய்தனர். இதனால் கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது பத்திரிகையை விநியோகம் செய்தவர்கள் உலகத்தமிழர் இயக்க உறுப்பினரான முன்னாள் வைத்தீஸ்வரா கல்லுரியில் கல்வி பயின்ற உமாமகேஸ்வரன் குழுவினரால் தாக்கப்பட்டனர். அதன் பின் தாயகம் பத்திரிகை வெளிவராமல் போய்விட்டது இந்த கனேடிய ஜனநாயகநாட்டில் ஒரு பத்திரிகை தான் விரும்பியதை எழுதும் உரிமை மறுக்கப்பட்டு தாயகம் பத்திரிகை உலகத்தமிழர் இயக்கத்தினால் தடைசெய்யப்பட்டது

வானொலி அறிவிப்பாளரும் இயக்குனருமான இளையபாரதி முன்பு சங்கமம் என்ற பெயரில் வானொலி ஒன்றை நடாத்தி வந்தார். உலகத்தமிழர் இயக்கத்தினர் தமிழ்திரைப்படங்களை இறக்குமதி செய்து காண்பித்து வந்தனர். தமது திரைப்பட விளம்பரத்தை அன்று அவசரமாக ஒலிபரப்பவேண்டும் என உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் இளையபாரதியிடம் கேட்டபோது இன்று நேரம்காணாது நாளை ஒலிபரப்புகிறேன் என்றார் இளையபாரதி. ஆனால் இவர்கள் விடவில்லை நிலைமை பெரியதர்க்கமாகமாறியது பின்னர் அன்று இரவு கைத்துப்பாக்கியுடன உலகத்தமிழர் இயக்க அரியாலைஅசோகன் உட்பட சென்ற மூன்றுபேர்; அவரின் வீட்டுக்குச் சென்று இளையபாரதியை அழைத்திருக்கிறார்கள். அவர் வெளியில் வரவில்லை வீட்டுக்கதவிற்கு துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றார்கள். போயும் போயும் ஓரு விளம்பர விடயத்திற்காக துப்பாக்கி தூக்கியவர்கள்; என்றால் அந்தநேரத்தில் உலகத்தமிழர் இயக்கத்தின் அடாவடித்தனம் எப்படி இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

பத்திரிகையாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் மஞ்சரி என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். இவர் புலிகள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றுக்காக இவர் மனைவியுடன் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்புகையில் உலகத்தமிழர் இயக்க உறுப்பினரான வல்வெட்டித்துறை ரஞ்சன் குழுவினரால் மனைவி முன்னாலேயே வீதியில் வைத்து மிருகத்தனமாக தாக்கப்பட்டார். பின்பு மஞ்சரி பத்திரிகையும் தடைசெய்யப்பட்டுவிட்டது கனேடிய ஜனநாயகநாட்டில் ஒரு பத்திரிகை தான் விரும்பியதை எழுதும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது தமிழ் பத்திரிகையும் உலகத்தமிழர் இயக்கத்தினால்; தடைசெய்யப்பட்டது

ஸ்காபுரோவில் உள்ள சில தமிழர்கள் மிகவும் கஸ்டப்பட்டு பெரிய கட்டிடம் ஒன்றை வாடகைக்கு பெற்று கனடா கந்தசாமி கோவிலை ஆரம்பித்தார்கள். கோவில் நல்ல வருமானத்துடன் இயங்கிக்கொண்டிருந்தது கோவில் வருமானம் உலகத்தமிழர் இயக்கத்தின் கழுகுக் கண்ணில்பட்டது நேரடியாகவே உலகத்தமிழர் இயக்கத்தினால் கோவில் பறிக்கப்பட்டு; குருக்களும் நிர்வாகமும் வெளியேற்றப்பட்டு உலகத்தமிழர் இயக்க தொகுதிப்பொறுப்பாளர் கரனின் உறவினர்களால் கோவில் நிர்வகிக்கப்பட்டது தற்போது அந்த உறுப்பினர் பெற்றோல் நிலையத்திற்கும் வர்த்தகநிலையத்திற்கும் சொந்தக்காரர் ;.உறவினர்களும் திடீர்; பணக்காரர் ஆகிவிட்டார்கள் கரன் இப்போது விலகிவிட்டார். கோவில் பறிக்கப்பட்ட நேரத்தில் பல கனேடியத்தமிழர்களின் கண்டனத்திற்கு உலகத்தமிழர் இயக்கம் ஆளானது என்பதை தமிழ்வானொலி ஒன்றில் கலந்துகொண்ட நேயர்களின் மனக்குமுறல்களில் இருந்து அறிய முடிந்தது. வெளியேற்றப்பட்ட குருக்கள் வானொலியில் அழுதுகொண்டே கூறினார் ஏன் என்னை வெளியேற்றினீர்கள்? கட்டாயம் உலகத்தமிழர் இயக்கம் எனக்கு காரணம் சொல்லவேண்டும் என்று பகிரங்கமாக நியாயம் கேட்டார். அதன்பிறகு வந்த நேயர் ஓருவயதுபோன அம்மா கூறினார். பிராமணர் அழுதால் கூடாது. இவர்களை பாவம் சும்மா விட்டுவைக்காது என்றார். இப்படியாக பறிப்பதும் தடைசெய்வதும் உலகத்தமிழர் இயக்கத்தின் கடந்தகால செயல்பாடாக இருந்தது தடைசெய்தவர்களே இன்று தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவேண்டுமானால் இங்குள்ள உலகத்தமிழர் இயக்கத்தினருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஓரு இலக்க அட்டை கொடுப்பார்கள் அதை புலிகளிடம் அங்கு காட்டினால்தான் அங்கு சென்று உறவினர்களை பார்வையிட அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் அங்கு சென்ற கனேடியத்தமிழர்களின் பாஸ்போட்டை பறித்து தடுத்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. கனடாவுக்கு வந்து உலகத்தமிழர் இயக்க அலுவலுகத்தில் பணம் கட்டி விடுதலையானவர்களும் இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஒன்றேஆர்;.சி.எம்.பி அதிகாரி கோப்ரல் ஷேர்லி டேவர்மன் அவர்களால் பெடரல் நீதிமன்றத்தில் கூறியது போல. கனடாவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுக்கிளைதான் உலகத்தமிழர் இயக்கம் என்பதை ஆதாரத்துடன் எவ்வித சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கின்றது

ரொரன்ரோ மொன்றியலில் உள்ள உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழர்களிடமும் தமிழ் வர்த்தகர்களிடமும் வற்புறுத்தி பணம் வசூலித்தது தமிழ் ஊடகங்களை தடைசெய்தது ஊடகவியலாளரை தாக்கியது வானொலி அறிவிப்பாளர் சுடப்பட்டது போன்ற வன்முறையில் ஈடுபட்டதை மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பும் கனேடிய ஊடகங்களும் சுட்டிக்காட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் பலதமிழர்கள் கடன்பட்டு வியாபார நிலையங்களை உணவுநிலையங்களை நடாத்திக் கொண்டிருக்கும்போது இந்த உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்;கள் விடுதலைக்கு என தமிழர்களிடம் சேர்த்த ஒசிப்பணத்தில் தாம் வியாபார நிலையங்களை திறந்து கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்காக விலைகளை குறைத்து விற்று ஏனைய தமிழ் வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்

கனடாகந்தசாமிகோவிலை பலாத்காரமாக பறித்தெடுத்தார்கள் விடுதலையை சாட்டாக வைத்து தமிழர்களின் அனைத்துதுறைகளிலும் சர்வதிகாரமான முறையில் தலையிடுவதால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கனடாவில் வேறுவழியின்றி பொலிசாரிடம் முறையிட்டும் உள்ளனர். உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்களிற்கு எதிரான முறைப்பாடுகளை கனேடிய பொலிசாரும் புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்ட விசாரணைகளின் ஆதாரத்தை வைத்துத்தான் கனேடிய மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இன்று அவ் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது

இப்போது விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்பதுபோல கனேடியத்தமிழர்களை ஏமாற்றும் ஓரு நடவடிக்கையாக தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள்; என்று தமிழர்கள் மத்தியில் விளம்பரம் செய்கிறாhகள.; முன்பும் உலகத்தமிழர் இயக்க தலைவரான சுரேஸ் மாணிக்கவாசம் பயங்கரவாத நடவடிக்கைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்டபோது சட்டத்தரணிக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் டொலருக்கு மேல் தமது பணத்தில் அல்ல தமிழ் மக்களிடம் சேர்த்த பணத்தில் அநியாயமாக செலவழித்து வாதாடினார்கள் கண்ட பலன் என்ன? ஒன்றும் இல்லை. சுரேஸ் மாணிக்கவாசகமே பொலிசாரின் சாட்சியாக மாறிவிட்டார்.

இந்த தடையானது உலகத்தமிழர் இயக்கத்தினரின் செயல்பாடுகளை கனேடிய அதிகாரிகளால் பல வருடங்களாக கண்காணிப்பு செய்யப்பட்டு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தின் முடிவின்படி அதுவும் கனடாவில் ஓருதொண்டர் அமைப்பு முதல் முறையாக தடைசெய்யப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு சட்டங்களை ஆராய்ந்துதான் உலகத்தமிழர் இயக்கத்தின் மீதான தடையை கொண்டுவந்திருப்பார்கள். மீண்டும் இலட்சக்கணக்கான டொலர்களை அநியாயமாக செலவழிக்க போகிறார்கள் நியாயம் உலகத்தமிழர் இயக்கத்தின் பக்கம் இல்லை என்பது கனடா வாழ்தமிழர்கள் அனைவருக்கும் அப்பட்டமாக தெரிந்த உண்மையாகும்.

தேணி இணையம்

Monday, June 16, 2008

காயப்பட்ட புலிகள்

Wounded tigers



The LTTE are fighting a defensive battle in Lanka.


It is common knowledge that a wounded tiger is the most ferocious. The Sri Lankan Tamil Tigers may not admit yet that they are wounded in the ongoing battle with the armed forces in the Vanni regions which are under their control. But the increasing ferocity and the sickening regularity with which they target civilians in Colombo since January this year show their desperation and their contempt for the opinion of major nations which have already branded them as terrorists.

The year started with a bomb attack on an army bus in Colombo. The most ferocious attack came on January 16, the day the Sri Lankan Government formally abrogated the ceasefire agreement, when the Tigers mounted a claymore mine attack on a civilian bus in Battala, 240 km south-east of Colombo, killing 27 civilians. From January till the second week of June, 128 civilians have been killed in attacks, mostly on buses and on a couple of suburban trains in and around Colombo. This does not include the assassination of minister D M Dissanayaka in a claymore mine attack in Ja-ela, a Colombo suburb,on Jan 8.


The undeclared war of the last two years has cost the Tigers dear. The government has cleared the east of the Tigers, successfully, conducted provincial elections there and got breakaway LTTE faction leader Pillaiyan installed as chief minister. Simultaneously, the armed forces have made inroads into rebel-held areas in the north, especially in Mannar. Gaining absolute control of Mannar, Killinochi and Mullaitivu which are under LTTE control is no easy task. But the fact remains that the Tigers are fighting a defensive battle. The LTTE’s new political wing leader B Natesan, while conceding that the military balance has shifted in favour of the Sri Lankan armed forces since the February 2002 ceasefire agreement, says these are transient and the army's claims are exaggerated. In an indirect justification of the increasing attacks on civilians in the south, he says the world is not aware of loss of civilian lives in the north in claymore mine attacks by the army. Through periodic attacks on soft targets, the Tigers have succeeded in widening the schism in the south. Proof is former Prime Minister and opposition United National Party (UNP) leader Ranil Wickremesinghe’s comment that the Mahinda Rajapaksa Government has failed in its war against terror as is evident from the series of blasts in Colombo and elsewhere.