Showing posts with label பிரியங்கா நளினி விவகாரம். Show all posts
Showing posts with label பிரியங்கா நளினி விவகாரம். Show all posts

Friday, June 20, 2008

நளினிக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி மனுத்தாக்கல் விளக்கமளிக்க முடியாமல் தமிழக அரசு தடுமாற்றம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்துள்ள மனுவின் மீது தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்காமல் தமிழக அரசாங்கம் மேல் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தடுமாற்றமடைந்தது.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்த்துக்கொள்ளக்கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவரது மனுவுக்கு நளினி சார்பில் புதன்கிழமையன்று பதில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணிகள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுவில், என்னை விடுதலை செய்வதற்கு சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை கேட்க வேண்டியதில்லை. அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவரை எதிர் மனுதாரராக சேர்க்கக்கூடாது என்று நளினி பதில் அளித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் துரைசாமி, ?சுப்பிரமணிய சுவாமியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல, அதன் மீது எங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறோம். பிரதான மனு மீதான விசாரணையை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அரச தரப்பு சட்டத்தரணி அளித்த பதில்களின் விவரம் வருமாறு;

நீதிபதி: சுவாமியின் மனுவுக்கு அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளதா?

அரசவழக்கறிஞர் அருண்: இதுவரை தாக்கல் செய்யவில்லை.

நீதிபதி: சுவாமியின் மனு மீது பதில் மனுத் தாக்கல் செய்கிறீர்களா?

அரச வழக்கறிஞர்: இன்னும் முடிவு செய்யவில்லை.

நீதிபதி: அப்படியானால் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? சுவாமியின் மனுவை ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா?

அரசுதரப்பு வழக்கறிஞர்: நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை.

நீதிபதி: நடுநிலை வகிக்க விரும்புகிறீர்களா?

அரசவழக்கறிஞர்: ஆமாம்.

நீதிபதி: இதனை பதிவு செய்து கொள்ளட்டுமா?

அரசவழக்கறிஞர்: வேண்டாம், அரசு தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் பிற்பகல் ஆஜராகி வாதிட உள்ளார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து சுவாமியின் சார்பில் ஆஜரான சிரேஷ்டசட்டத்தரணி ராஜகோபால், ?சுவாமி தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு எதிர்க்காது. ஏனெனில், அரசுக்கு ஆதரவாகத்தான் சுவாமி மனுத் தாக்கல் செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

உடனே நளினியின் சட்டத்தரணி துரைசாமி, "சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு மீது சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. எனவே இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தார். அப்போது நளினி தொடர்ந்துள்ள வழக்கில் சுவாமியை சேர்த்துக்கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Monday, June 2, 2008

நளினியை விடுவிக்க எதிர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி தம்மை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
.
சேது சமுத்திர திட்ட பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்றும், அவர் இந்தப் பிரச்சனையில் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிர மணிய சாமி சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய - சீன உறவு குறித்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்ற வருமாறு சீன அரசு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக வரும் 11ம் தேதி சீனா செல்கிறேன்.

சேதுசமுத்திர திட்ட பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று மாற்று பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்கு மாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.

மேலும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

சேதுசமுத்திர திட்ட பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி முதலைக்கண்ணீர்
வடித்து கவிதை எழுதுகிறார்.

இந்தப் பிரச்சனையில் அவர் தோல் வியை ஒப்புக் கொள்ள வேண்டும். சேது திட்ட பிரச்சனையில் உண்மை யிலேயே கருணாநிதி வருத்தத்தில் இருந்தால் ஏன் பலகோடி ரூபாய் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, சோனியாவின் மகள் பிரியங்கா தன்னை சந்தித்த பின்னர் தம்மை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நளினி பெண் என்பதாலோ, ஒரு குழந்தைக்கு தாய் என்பதாலோ அவருக்கு கருணை காட்டக்கூடாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமாக ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டுள்ளது.

தற்போது விடுதலை கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு தரப்பில் நியாயமான முறையில் விவாதம் நடைபெறாது என்பதால் இதில் என்னையும் சேர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

பூங்கோதையை தொடர்ந்து கருணாநிதி உள்ளிட்ட 20 அமைச்சர் களின் முறைகேடுகள் தொடர்பான ஆதார சிடிக்கள் என்னிடம் உள்ளன. ஆனால் அவற்றை எனக்கு அளித்த அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் தின் தவறான கொள்கைகள் காரண மாகவே விலைவாசி உயர்ந்துள்ளன. விலைவாசி குறைய வேண்டும் என்றால் சிதம்பரம் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

பெட்ரோல் விலையை உயர்த்தாமல் அவற்றின் மீதான வரி மற்றும் சுங்கத் தீர்வையை அரசு குறைக்க வேண்டும்.

இதன் மூலம் பெட்ரோல் விலை பாதியாக குறைக்க இயலும். இதனால் ஏற்படும் இழப்பை சமாளிக்க மத்திய அரசு சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார்.

Friday, May 2, 2008

யார் சொல்வது உண்மை?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியா கச் சிறையில்
இருக்கும் நளினி யைத் தாம் சந்தித்தது உண்மை என்று ராஜீவ் காந்தியின்
மகள் பிரியங்கா, ஒப்புக்கொண்ட நிலையிலும், அப்படியொரு சந்திப்பு
நடக்கவில்லை என்று வேலூர் மகளிர் சிறையின் கண் காணிப்பாளர்
ராஜசெüந்தரி கூறியுள்ளார்.

பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்துக்கு ரகசியப் பயணம் மேற் கொண்ட
பிரியங்கா, வேலூரில் தங்கக் கோவிலுக்குச் சென்றதாகவும், மகளிர் சிறையில்
நளினி யைச் சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாயின.நளினியைத் தாம் சந்தித்தது உண்மை என்று ஏப்ரல் 15-ம் தேதி பிரியங்காஒப்புக்கொண்டார்.அதைத் தொடர்ந்து நளினி யின் வழக்கறிஞர்களும் இச் சந்திப்பை உறுதிசெய்தனர். நளினி யும், அவருடைய கணவர் முருக னும் இச் சந்திப்புக்காகநன்றி தெரிவித்து பிரியங்காவுக்கும், சோனியாவுக்கும் கடிதங்கள் எழு
தியுள்ளனர். அக் கடிதங்கள் அவர்களுடைய வழக்கறிஞர்களிடம் இருக்கின்றன.

நளினி -பிரியங்கா சந்திப்பு குறித்து நளினியின் சகோதரர் பாக்கியநாதனும்
உறுதி செய் துள்ளார். பிரியங்காவின் சகோத ரர் ராகுல்காந்தியும் உறுதி செய்
துள்ளார். நளினியைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் பிரி யங்காவுக்கு
கொஞ்ச நாட்களாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறையில் இருக்கும் ஒருவரை, ரகசியமாக பிரியங்கா சந்திக்க அனுமதி தந்ததில் விதி மீறல் இருப்பதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது.

விதிகளுக்குஉட்பட்டு தான் இச் சந்திப்பு நடந்ததாகச் சிறை அதிகாரிகள் தந்த விளக்க மும்
பத்திரிகைகளில் வெளியா யின.ஆனால், திடீர் திருப்பமாக நளினி -பிரியங்கா சந்திப்பு நடக்க வில்லை என்றுமகளிர் சிறையின் கண்காணிப்பாளர் ராஜசெüந் தரி இப்போது கூறியுள்ளார்.தகவல் அறியும் உரிமைச் சட் டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனுவுக்கு அளித்த
பதிலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதற்காக அவர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி மாநில தகவல்ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நளினியின் வழக்கறிஞர் துரை சாமியின் மகன் வழக்கறிஞர் டி.ராஜ்குமார் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல்செய்துள்ள மனு விவரம்: பிரியங்கா, நளினி சந்திப்பு மார்ச் 19-ல்நடைபெற்றதாக தகவல் வெளியானது. இது உண்மையா? எனக்கேட்டும், எந்தவிதி களின்படி இந்தச் சந்திப்பு நடந்தது?, யார் உடன் இருந்தார்கள்?, எவ்வளவு
நேரம் சந்திப்பு நடந்தது?, நளினியும், பிரியங்காவும் என்ன பேசிக்கொண்டார்கள்? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சிறை நிர்வாகத்திற்கு ஏப்ரல் 8-ம் தேதி மனுசெய்யப்பட்டது.இந்த மனுவை ஏப்ரல் 16-ம் தேதி சிறை அதிகாரி பெற்றுள்ளார்.

இதுகுறித்து வேலூர் பெண்கள் தனிச் சிறை அதிகாரியும், பொது தகவல்அலுவலருமான ராஜசௌந்தரி அனுப்பி உள்ள பதிலில், ஆயுள் தண்டனைசிறை வாசி நளினியை மார்ச் 13 மற்றும் மார்ச் 19 ஆகிய நாட்களில் எவரும் நேர்காணல் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.

நளினியை, வேலூர் பெண்கள் சிறையில் மார்ச் 19-ம் தேதி சந்தித்ததாக
பிரியங்கா உறுதி செய்துள்ளார். ஆனால் சிறை அதிகாரி தவறான தகவலை
தெரிவித்துள்ளார்.இதற்காக வேலூர் பெண்கள் சிறை அதிகாரி ராஜசௌந்தரி மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 18(2) கீழ் நளினி, பிரியங்கா சந்திப்புகுறித்து, கடிதம் மூலம் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக
விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என மனு வில் வழக்கறிஞர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

Wednesday, April 23, 2008

புலிகளிடம் கூறுங்கள்

எங்கள் குடும்பம் மீது வெறுப்பேதும் இருந்தால் அதை மறந்துவிடும்படி புலிகளிடம் கூறுங்கள்

நளினியுடனான சந்திப்பின் போது பிரியங்கா கோரிக்கை விடுத்ததாக வக்கீல்கள் தகவல்


ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினியை பிரியங்கா சந்தித்த போது என்ன பேசிக் கொண்டார்கள் என நளினி தனது வக்கீல்களான துரைசாமி மற்றும் இளங் கோவனிடம் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் தொடர்பான சில விடயங்களைக் கேட்டுக் கொண்ட பின்னர், பிரியங்கா, எனது தந்தைக்கு நேர்ந்த கதி இனியும் எனது குடும்பத்தினருக்கு நேரக் கூடாது எனவும் விடுதலைப் புலிகளுக்கு இப்போது எனது குடும்பத்தினர் மீது ஏதேனும் வெறுப்பிருந்தால் அதனை மறந்து விடும்படிக் கூறுங்கள் எனவும் தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக நளினி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மாதம் 19ஆம் திகதியன்று வேலூர் சிறையில் உள்ள நளினையைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் பின்னணி குறித்து பல தரப்பிலும் இருந்து பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புபட்ட நளினி அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு சட்ட ரீதியான உதவிகளை மேற்கொண்டு வரும் வக்கீல் துரைசாமி மற்றும் இளங்கோ வன் ஆகியோர் இவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது நளினியுடன் பிரியங்கா என்ன பேசினார் என்பது குறித்து வினவியுள்ளனர். அதற்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்புக் குறித்து இவ்வழக்குடன் சம்பந்தப்பட்ட ஏனைய கைதிகள் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நளினியின் கணவர் முருகன் எழுதிய கடிதத்தில் உங்கள் அன்புக்கும் அமைதிப் பணிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி அவர் பொது மக்களுடன் பழகும் விதத்தையும் பாராட்டியுள்ளார்.

கைதி சாந்தன் பிரியங்காவுக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் வருகை வேலூர் சிறைக் கைதிகளை கௌரவப்படுத்தியது போலுள்ளது.

1983ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்கள் மீது இந்திரா காந்தி காட்டிய பாசத்தால் அவர் மீது எனக்கு மாறாத அன்பு உண்டு. நீங்களும் இந்திராகாந்தி போலவே இருகின்றீர்கள் எனத் தெரிவித்துளார்.

மேலும் பிரியங்கா நளினி சந்திப்பின் பின்னர் நளினிக்கும் முருகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாகவும் வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யெனவும் இச்செய்தி தன்னை வேதனைப்படுத்தியதாகவும் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் கைதிகளை சந்தித்த பின்னர் வக்கீல்கள் நிருபர்களிடம் தெரிவிக்கையில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினியை விரைவில் விடுதலை செய்ய வற்புறுத்தி இன்று (நேற்று) உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித் துள்ளனர்.

Tuesday, April 22, 2008

ராஜிவ் கொலையாளிக்கு சிம் கார்டு சப்ளை :வேலூர் சிறையில் 'தாராளம்'

ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி முருகன் தினமும் சிறையில் இருந்தபடியே மொபைல் போனில் பேசியது, விசாரணையில் தெரியவந்துள்ளது. சிம் கார்டை பறிமுதல் செய்தனர். குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள், பிரபல ரவுடிகள், ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட முக்கிய கைதிகள் உள்ள வேலூர் மத்திய சிறைக்கு பல மடங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதில் மொபைல்போன் சிம் கார்டை அதிகாரிகள் கைப்பற்றினர்.



இந்த சிம் கார்டை பயன்படுத்தி கைதிகள் தினமும் 240 முறை பேசியுள்ளனர். ராஜிவ் கொலையாளி முருகன், சிறைக்குள் மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த மொபைல்போனை, அவரது சிறை நண்பர் முத்துராமன் என்பவர் வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. சிறைக்கைதிகள் தங்களுக்கு வேண்டியவர்களுடன் பேச வசதியாக, சில சிறை அதிகாரிகள், போலி முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளனர். உள்ளூரில் ஒரு கால் பேச ரூ.10, வெளியூர் பேச ஒரு காலுக்கு ரூ.50 என கட்டணம் வசூலித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday, April 21, 2008

பிரியங்கா நளினி சந்திப்பு...'சமாதான' சிக்னல்?

பிரியங்காவின் தமிழக விஸிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு "இரங்கல் பா" எழுதிய முதல்வருக்கு கண்டனம்; தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை அடக்க வேண்டும்" என்றெல்லாம் அனல் பறக்கும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இந்த நேரத்தில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை பிரியங்கா சந்தித்தார் என்ற செய்தி, காங்கிரஸ்காரர்களைக்கூட டென்ஷன் ஆக்கியுள்ளது.

ஆனால் "பிரியங்கா- நளினி' சந்திப்பின் பின்னணியில் மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.முதல் காரணம் இது! ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளில் நளினியும் ஒருவர். அவருக்கு சோனியா காந்தி காட்டிய கருணையால் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.தற்போது வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஆயுள் தண்டனைக் காலமான 14 வருடங்களை ஜெயிலில் முடித்துவிட்டார்.

இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்டார்கள்; சிறைத் துறை அதிகாரிகளிடமும் இது பற்றி பேசியுள்ளார்கள். ஆனால் தமிழக சிறைத்துறை அதிகாரிகளோ, ""ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.ஆகவே ஆயுள் தண்டனையான 14 வருடத்தை முடித்துள்ள நிலையில் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசுதான் அனுமதி கொடுக்க வேண்டும். மாநில அரசின் கையில் ஏதும் இல்லை'' என்று கைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது.

இரண்டாவதாக, இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் படு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்னாள் துணை பிரதமர் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க.அதை தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு விட்டன. இந்நிலையில், "காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார்?' என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளே இப்போது கேட்கத் தொடங்கி விட்டன.

இந்தக் கேள்விக் கணைகளைச் சமாளிக்க, "ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் தகுதி படைத்தவர்' என்று மூத்த காங்கிரஸ் அமைச்சரான அர்ஜூன் சிங் ஆரம்பித்தார்.பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், "சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை' என்று அறிவித்தார்."ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சியே' என்றார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அர்ஜூன்சிங்கின் கருத்தை பிரணாப் முகர்ஜியும் வழி மொழிந்தார்.

மூன்றாவதாக இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினமும் 50 புலிகள் செத்தார்கள்; 100 புலிகள் சுடப்பட்டார்கள் என்றெல்லாம் இலங்கை ராணுவம் கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.ஒரு கட்டத்தில் இந்தியா மீதுகூட பிரபாகரன் சீறிப் பாய்ந்து அறிக்கை வெளியிட்டார். இந்த மோதலில் இந்தியா அமைதியாக இலங்கை பக்கமாக நின்று, "புலிகளை அழிக்கட்டும்' என்ற ரீதியில் வேடிக்கை பார்க்கிறது என்ற கோபம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மத்தியில் இருக்கிறது.

இந்தக் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக "ரா' போன்ற அமைப்புகளே எச்சரித்துள்ளதாக உளவுத்துறை வட்டாரத் தகவல்.இப்படிப் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியில் நளினியை சென்ற மாதம் 19ஆம் தேதி வேலூர் வந்து சந்தித்துள்ளார் பிரியங்கா. முதலில் நளினியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த பிரியங்கா, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மூலம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.அந்த அதிகாரிகளும் மாநில அரசுக்கோ, மாநில உளவுத்துறைக்கோ எந்தத் தகவலும் சொல்லாமல் நேரடியாக வேலூர் சிறையில் உள்ள சூப்பிரண்டுடனேயே தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்கள். ஆனால் அனுமதி கொடுப்பதில் திடீரென்று ஒரு சட்ட சிக்கல் எழுந்திருக்கிறது.

இது பற்றி நம்மிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், ""எங்கள் சிறைத்துறை விதிகளின்படி பார்வையாளர்களை அனுமதிக்கும் விஷயத்தில் கண்காணிப்பாளருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவர் விருப்பப்பட்டால் உயரதிகாரிகளுக்குச் சொல்லலாம். இல்லையென்றால் அவர் மட்டத்திலேயே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் சிறைத் துறை விதிகளில் கைதிகளின் "உறவினர்கள்' சிறைக்கு வந்து பார்க்கலாம் என்று இருந்தது. பிறகு அதை "உறவினர்கள் மற்றும் நண்பர்கள்' என்று மாற்றினார்கள்.

ஆகவே பிரியங்கா நளினியைப் பார்க்க வேண்டும் என்று செய்தி அனுப்பியதும் சிறைத்துறைக் கண்காணிப்பாளரே முடிவு செய்து அவரை அனுமதித்திருக்கலாம்'' என்று பூடகமாகப் பேசினார்.

உடனே குறுக்கிட்ட நாம் அந்த அதிகாரியிடம், ""அது சரி... பிரியங்கா நளினிக்கு "உறவினரா'? அல்லது "நண்பரா?' அதை எப்படி உயரதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் சிறைத்துறை கண்காணிப்பாளர் முடிவு செய்திருப்பார்?'' என்று கேட்க, ""இந்த மாதிரி வம்பு பிடித்த கேள்விகள் எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்'' என்று ஜகா வாங்கிக் கொண்டார் அந்த அதிகாரி.

வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளராக இருக்கும் ராஜசவுந்தர்யா, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவருக்கு நெருங்கிய உறவினராம். அந்த வகையில் சட்ட நுணுக்கங்களைத்தெரிந்து, தனக்கே உள்ள விசேஷ அதிகாரத்தின் கீழ் நளினியை சந்திக்க பிரியங்காவிற்கு அனுமதி அளித்துள்ளார் என்று செய்திகள் உலா வருகின்றன.

ஆனால் இந்தச் சந்திப்பை மாநில உளவுத்துறை சார்பில் வேலூரில் உள்ள அதிகாரிகள் சிலர் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனாலும் பிரியங்காவுடன் வந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், ""இதை நியூஸ் ஆக்க வேண்டாம். சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்குக் கூட சொல்ல வேண்டாம்.

ஏனென்றால் இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சென்ஸிட்டிவான விஷயம்'' என்று கூறவே, அந்தச் செய்தியை வெளியில் கசிய விடாமல் அமைதி காத்தது மாநில உளவுத்துறை.

நளினியை சந்தித்தது குறித்துப் பேசியுள்ள பிரியங்கா, ""வன்முறை, கோபம், வெறுப்பு ஆகியவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை'' என்று சொல்லியுள்ளார்.

- தமிழன் எக்ஸ்பிரஸ்

நளினி சந்திக்க மறுத்ததால் ராஜீவ் கொலையாளி முருகன் திடீர் உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதான கைதிகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன், பேரறி வாளன், சாந்தன் தூக்கு தண்டனை கைதிகளாக ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி பெண்கள் சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை அனுபவித்து வருகிறார்.

நளினியை கடந்த மோதம் 19-ந்தேதி ராஜீவ்காந்தி சோனியாவின் மகள் பிரியங்கா சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பை பிரியங்காவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

பிரியங்கா நளினியை சந்தித்த பிறகு தான் நளினி தனது கணவன் முருகனிடம் கூறியுள்ளார். அப்போது அவர் பிரியங்காவிடம் பேசிய முழுவிபரத்தையும் சொல்ல வில்லையாம்.

இதனால் ஆதங்கத்தில் நளினியுடன் இருந்த சந்திப்பிலிருந்து முருகன் பாதியில் வெளியே வந்துவிட்டார். மீண்டும் அடுத்து நளினியை சந்திக்கவும் மறுத்து விட்டார்.

மேலும் பேரறிவாளனை சந்திக்க வந்த அவரது தாயார் அற்புதத்திடம் பேசிய முருகன் நளினியோடு பிரியங்கா பேசியதை பத்திரிக்கைகளில் படித்துதான் தெரிந்து கொண்டேன் என்று வருத்தப் பட்டு கூறினாராம்.

இதனால் இருவருக் கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நளினியை சந்திப்பதை முருகன் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த தடவை நளினியை சந்திக்க முருகன் ஆர்வமாக இருந்தாராம். நளினியை சந்திக்கவும் சிறை அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதற்காக தயார் நிலையில் முருகன் இருந்தார். ஆனால் பெண்கள் சிறையில் உள்ள நளினி கணவர் முருகனை சந்திக்க மறுப்பு தெரிவித்தாக கூறப்படு கிறது. இதனால் நளினி-முருகன் சந்திப்பு நடைபெறவில்லை. இதையடுத்து முருகன் விரக்தியடைந்தார்.

இதனால் நேற்று முன்தினம் முதல் அவர் விரக்தியுடன் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். மேலும் நேற்று காலையி லிருந்து அவர் சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது

இந்த திடீர் உண்ணா விரதத்தால் சிறை துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த உண்ணாவிரதம் குறித்து ஜெயில் சூப்பிரண்டு நாராயணமூர்த்தியிடம் போனில் தொடர்பு கொண்டால் அவரிடம் பேச முடியவில்லை. ஜெயில் அலுவலகத்தில் கேட்டால் அவர்கள் அதுபோன்ற தகவல் எதுவும் இல்லை. இருந்தாலும் நீங்கள் ஜெயில் சூப்பிரண்டிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

Sunday, April 20, 2008

நளினி முருகன் சந்திப்பு திடீர் ரத்து! அரித்ரா வருகையின் பின்தான் சமரசமா?

வேலூர் சிறையில் கணவர் முருகனை சந்தித்து பேச நளினி மறுத்ததால் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த அவர்களது சந்திப்பு திடீரென ரத்துச் செய்யப்பட்டு விட்டது.
இனி இவர்களது மகள் அரித்ரா வந்த பின்னர் தான் இருவரும் சமரசம் ஆவார்களா என பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ள கணவன் மனைவியாகிய முருகனும் நளினியும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் சந்தித்துப் பேச 30 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படுவதுண்டு.

இந்நிலையில் நேற்று முன்தினம் இடம் பெறவிருந்த முருகன் நளினி சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுவிட்டது. எனவே பொலிஸார் சிறைக்கு வரவேண்டியதில்லை என சிறைச் சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது நளினி விருப்பம் தெரிவிக்காததால் நளினி முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதனால் அடுத்த சந்திப்பு எப்போது நடக்கும்? இனிவரும் சந்திப்புக்களின் போது இருவரும் பேசுவதை நிறுத்தி விடுவார்களா? இங்கிலாந்தில் உள்ள மகள் அரித்ரா வந்து தான் இவர்களை சமரசம் செய்து வைப்பாரா என்பது பரபரப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மார்ச் 19ஆம் திகதி ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் பெண்கள் சிறைக் குச் சென்று நளினியைச் சந்தித்து பேசியுள்ளார்.பிரியங்கா நளினி சந்திப்பு நடந்து 3 நாட்கள் கழித்து மார்ச் 22ஆம் திகதி நளினியும் முருகனும் பெண்கள் சிறையில் சந்தித்து பேசியபோது, பிரியங்கா தன்னை சந்தித்தது பற்றி முருகனிடம், நளினி கூறியுள்ளார்.

இதை எதிர்பாராத முருகன் நளினியிடம் தட்டிக்கேட்டதாகவும் அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த சந்திப்பு கடந்த 5ஆம் திகதி நடக்க இருந்தது. அன்று நளினி மீது கோபத்துடன் இருந்த முருகன் நளினியை சந்திக்க மறுத்து விட்டார்.இந்த நிலையில் நளினியும் முருகனும் 15 நாட்கள் கழித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை சந்திப்பதாக இருந்தது. ஏற்க னவே கடந்த 5ஆம் திகதி நடைபெற இருந்த சந்திப்பை முருகன் புறக்கணித்த நிலையில் அடுத்த முறை இருவரும் சந்திப்பார்கள் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று முன்தினம் காலை நிலைமை திடீரென மாறியது. நளினி விரும்பாததால் முருகனுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இவர்களது சந்திப்பு அரித்ராவின் வருகையை அடுத்தே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நளினி விரைவில் விடுதலையாகும் சாத்தியம்

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அடுத்த வாரமளவில் விடுதலையளிக்கப்படலாம் என அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவரை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி அன்று இடம்பெற்ற ராஜீவ் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட் டில் கைதாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இவருக்கு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் தான் எனினும் நளினி அதையும் தாண்டி 3 ஆண்டுகள் மேலதிகமாக சிறையில் இருந்து வருகிறார்.

அவரை விடுவிக்கக் கோரி பலமுறை மனுத்தாக்கல் செய்யப்பட்டன. எனினும் இம்மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நளினியை பிரியங்கா சென்று வேலூர் சிறையில் சந்தித்துள்ளதை யடுத்து மீண்டும் அவரை விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றில் வழக்குத் தொட ரப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இம்முறை நளினி விடுதலை செய்யப்படலாம் என அவரது வழக்கறிஞர் மீண்டும் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

நளினியின் மகள் லண்டனிலா? நோர்வேயிலா? உளவுத்துறை திணறல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் வழக்கில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்வி பேரில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டவரான நளினியின் மகள் அரித்ரா, தற்போது லண்டனிலா அல்லது நேர்வேயிலா உள்ளார் என உளவுத்துறை பொலிஸார் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினியை கடந்த மாதம் 19ஆம் திகதியன்று ராஜீவின் மகளான பிரியங்கா சென்று சந்தித்துள்ளார்.

இவர்களது சந்திப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நளினியின் மகள் அரித்ரா மெகரா தற்போது எங்கு இருக்கிறார் என்பது மர்மாக உள்ளது. அவர் வசிக்கும் இடத்தை உளவுத்துறை பொலிஸாரால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது அரித்ரா சிறையில் இருந்து முருகனின் தாயாருடன் வெளியே சென்றார். அவரை முதலில் இலங்கைக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர்.பின்னர் அவரை லண்டனுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. எனினும் அரித்ரா தற்போது லண்ட னில் இல்லை. ஒருவேளை அவர் நோர்வேயில் தங்கி இருக்கலாம். அவர் வசிக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.இன்னொரு உளவுத்துறை அதிகாரி கூறும்போது அரித்திரா 4 மாதங்க ளுக்கு முன்பு நோர்வேயில்தான் இருந்தார்.

தற்போது எங்கு இருக்கிறார் என்பது உறுதி யாக தெரியவில்லை என்றார்.

பிரியங்கா-நளினி சந்திப்பில் பேசியது என்ன? மர்ம நபர்கள் ஆர்வம் காட்டுவதால் பரபரப்பு

ராஜிவ் கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை,
பிரியங்கா சந்தித்து பேசிய விபரங்களை தெரிந்து கொள்ள மர்ம நபர்கள்
முயற்சிப்பதால், வேலூர் பெண்கள் சிறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நளினியை பிரியங்கா சந்தித்து பேசியதற்கான காரணங்கள் குறித்து, பல்வேறு
விவாதங்கள் எழும்பியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், விலைவாசி
உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், காங்கிரஸ் அரசுக்கு தலைவலியை
ஏற்படுத்தியுள்ளன. அடுத்த ஆண்டு நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில்
வெற்றியை பாதிக்கும் என்பதால், பிரச்னையை திசை திருப்பும் நோக்கில் இந்த
சந்திப்பு நடந்ததாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.


/>

பிரியங்கா- நளினி சந்திப்பின் போது பேசியதாக சில தகவல்
மட்டுமே வெளியாகியுள்ளன.  பெரும்பாலான தகவல் மறைக்கப்
பட்டுள்ளன. ராஜிவ் கொலையில் முக்கிய பங்கு வகித்தவர், அவர் சார்ந்துள்ள
கட்சி, கொலைக்கு சதி திட்டம் தீட்டியவர் யார், என்பதை பிரியங்கா தெரிந்து
கொள்ள விரும்பியுள்ளார். அதனால் தான், இந்த சந்திப்பு நடந்ததாகவும் தகவல்
வெளியாகியுள்ளன. ராஜிவ் கொலைக்கு, உடந்தையாக இருந்த கட்சிகளை
காங்கிரஸ் கைகழுவி விடவும் இருக்கிறது. அதனால், பிரியங்கா- நளினி
சந்திப்பின் போது பேசிய முழு விபரங்களையும், அறிந்து கொள்ள சில
கட்சிகள் முழு ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்காக சில நாட்களாக, மர்ம
நபர்கள் நளினியை சிறையில் சந்தித்து பேச மனு போட்டுள்ளனர்.
 ஆனால், நளினி யாரையும் சந்திக்க விரும்பவில்லை. முருகன்- நளினி
இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அதனால், முருகனை சந்திக்கவும் சிலர்
முயற்சித்து வருகின்றனர். இருவரும் புதிய நபர்களை சந்திக்க தொடர்ந்து
மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பத்திரிகையாளர்கள்
போர்வையில் அவர்களை சந்தித்து பேச்சு கொடுக்கவும் சிலர் முயற்சித்து
வருகின்றனர். இதை கவனிக்க தவறிய சிறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  தொடர்ந்து,
சிறை பகுதியில் உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நளினி
விடுதலை செய்யப்படுவாரா? ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டு, தண்டனை காலம் முடிந்த நிலையிலும் சிறையில் இருக்கும்
நளினி விரைவில் விடுதலை செய்யப்படலாம் என தகவல்
வெளியாகியுள்ளது.



நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு
தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றியதில் பெரும் பங்கு
சோனியாவுக்கு உண்டு. அதிலிருந்து நன்றி பாராட்டும் விதமாக, நளினி
தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார். அதையடுத்து தான் பிரியங்கா, நளினியை
சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய
உள்துறை அமைச்சக அதிகாரிகள், தமிழக அதிகாரிகளிடமிருந்து நளினி
சம்பந்தமான அனைத்து கோப்புகளையும் அனுப்பும் படி உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர் சிறை அதிகாரிகளும் அவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.மேலும்
தமிழக உள்துறை அதிகாரிகளும், நளினி சம்பந்தப்பட்ட அனைத்து
கோப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.



/>

 நளினி தரப்பில் வக்கீல்கள் உள்துறை அதிகாரிகளை சந்தித்து,
நளினியை சிறையில் இருந்து விடுவிக்கும்படி மனு அளித்துள்ளனர். மனுவை
ஆய்வு செய்து, விரைவில் நளினி விடுவிக்கப் படலாம் என தகவல்
வெளியாகியுள்ளது. அதற்கு சோனியாவும் ஆதரவு தருவார் எனவும்
கூறப்படுகிறது. சிறையில் இருந்த படியே, நளினி எம்.சி.ஏ., படித்துள்ளார். அவர்
சிறையில் இருந்து வெளிவந்தால், வேலை தரவும் பல்வேறு நிறுவனங்கள்
தயாராக உள்ளன.

'பிரிட்டிஷ் விதிப்படி பிரியங்கா-நளினி சந்திப்பு'

வேலூர் பெண்கள் சிறையில் நடந்த பிரியங்கா-நளினி ரகசிய சந்திப்பில், சிறை
விதிகள் அப்பட்டமாக மீறப்பட் டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால்,
"அப்படி எதுவும் விதி மீறப்படவில்லை' என்று கூறி, சிறைத் துறை
அதிகாரிகள், சமாளித்து வருகின்றனர்.ராஜிவ் கொலை வழக்கில்,
நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ராஜிவ் மகள் பிரியங்கா, கடந்த
மாதம் ரகசியமாக சென்று சந்தித்து பேசிய விவகாரம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.



இந்த சந்திப்பில், சிறைத் துறை
தொடர்புடைய அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.வேலூர் பெண்கள் சிறையில்,விசாரணை கைதிகளை திங்கள்,
புதன், வெள்ளிக் கிழமைகளிலும், தண்டனை கைதிகளை செவ்வாய், வியாழக்
கிழமைகளில் மட்டும் சந்திக்க முடியும்.ஞாயிற்றுக் கிழமை, தேசிய விடுமுறை
நாட்களில் எந்தக் கைதியையும் சந்திக்க முடியாது.கைதியை சந்திக்க
விரும்புவோர், நேர்காணல் விண்ணப்பம் பூர்த்தி செய்து தர வேண்டும். சந்திக்க
விரும்பும் கைதியின் பெயர், விசாரணை கைதியா, தண்டனை கைதியா, சந்திக்க
விரும்புவோர் பெயர், முழு முகவரி தெரிவிக்க வேண்டும்.இந்த விவரம்,
நேர்காணல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், கைதியை சந்திக்க
விரும்புவோர் கையெழுத்து, நேர்காணல் புத்தகத்தில் இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கைதியிடம் எழுத்து மூலமாக சம்மதம் பெற்ற பின் சந்திப்பு
நடக்க வேண்டும். வேலை நாட்களில் தினம் காலை 10 மணி முதல்
மாலை 4 மணி வரை மட்டும் சந்தித்துப் பேச வேண்டும். ரத்த சம்பந்தப்பட்ட
உறவு முறையினர் மட்டுமே கைதியை சந்தித்து பார்க்க அனுமதி உள்ளது.
நேர்காணல் விண்ணப்பம் தராமல் யாரையும் கைதிகளை சந்திக்க
அனுமதிக்கக் கூடாது.இந்த விதிகளில், பெரும்பாலானவை, 
நளினி-பிரியங்கா சந்திப்பில் மீறப்பட்டுள்ளன. நளினியை சந்தித்த பிரியங்கா

மனு எதுவும் கொடுக்கவில்லை.
கடந்த மாதம் 19ம் தேதி நேர்காணல் பதிவு புத்தகத்தில் 31 பேர் கையெழுத்து
உள்ளது. அதில் பிரியங்கா கையெழுத்து இல்லை.இது பற்றி விசாரித்தால்,
சிறைத் துறை அதிகாரிகள் சமாளிக்கின்றனர். ""சிறையில் இருக்கும் கைதியை
வி.வி.ஐ.பி.,க்கள் சந்திக்க விரும்பினால் நேர்காணல் பதிவு புத்தகத்தில் எழுதி
வைக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பமும் கொடுக்க
வேண்டியதில்லை. சிறை கண்காணிப்பாளர் தனியாக ஒரு பதிவேடு
வைத்துள்ளார். அதில், குறித்துக் கொண்டு கைதியை சந்திக்க அனுமதி
அளிக்கலாம். பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே இந்த நடைமுறை உள்ளது. அதை
பின்பற்றியே பிரியங்கா - நளினி சந்திப்பு நடந்தது. நளினி சம்மதத்துடனே
பிரியங்கா சந்தித்துச் சென்றுள்ளார். விதிமீறல் எதுவும் நடக்கவில்லை,''
என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்.பிரிட்டிஷ் விதிமுறைப்படி பிரியங்கா -
நளினி சந்திப்பை நடத்த சிறை அதிகாரிகள் உதவிய விவகாரம் மேலும்
பலவிவாதங்களை கிளப்பி விட்டுள்ளது.

ரரஜிவ் கொலைக் குற்றவாளிகளை சோனியா குடும்பம் மன்னித்துவிட்டது


நளினியின் வழக்கறிஞர் "கேசரி" வார இதழுக்கு விசேட செவ்வி

தமிழகத்திலிருந்து தமிழன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைக்குற்றவாளிகள் அனைவரையும் சோனியா குடும்பம் மன்னித்திருப்பதாக நளினியின் வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
பிரியங்கா நளினி சந்திப்பு குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் நளினியின் சார்பில் ஆஜராகும் வழக் கறிஞர் துரைசாமி கேசரி வாரவெளியீட்டிற்கு பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த செவ்வியில் , பிரியங்காவால் விடுதலைப்புலிகளை நேரில் சந்தித்து, "உங்கள் மீது கோபமோ வெறுப்போ விரோதமோ கிடையாது' என்று சொல்ல முடியாது. அதனால்தான் அவர் நளினியைப் பயன் படுத்திக் கொண்டார். நளினியிடம் தன் கருத்துக்களைச் சொன்னதன் மூலம் பிரியங்கா தனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தேடிக் கொண்டிருப்பதுடன், தன் மன தில் உள்ள மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் துரைசாமி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கே விடுதலைப் புலிகள் மீது கோபம் இல்லை என்றாகிவிட்ட பிறகு இந்திய அரசும் அதை ஏற்கத்தான் வேண்டும். தங்களுக்கும் புலிகள் அமைப்பின் மீது கோபம் இல்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்.

இதுநாள் வரையில் பொதுவாக இந்திய மக்கள் விடுதலைப்புலிகள் என்றாலே கோபம் கலந்த வெறுப்புடன் பார்த்தார்கள். மக்களாகட்டும், காங்கிரஸ் கட்சி யினராகட்டும் எல்லோருக்குமே இந்தக் கோபமும் வெறுப்பும் இருந்தது உண்மை. ஆனால் பிரியங்காவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு அக்கோபம் ஏறத்தாழ மறைந்துவிட்டது என்றும் வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலைக்குற்றவாளி நளினியை அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரியங்கா காந்தி.

இது தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்துலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீண்ட காலமாகப்போராடி வருபவரும், அவரது வழக்கறிஞருமான துரைசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். வீரகேசரி வார வெளியீட்டிற்காக பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். இனி அவரது செவ்வி:

கே: சிறையில் இருக்கும் நளினியை திடீரென்று பிரியங்கா சந்திப்பதற்கான காரணம் என்ன? இச்சந்திப்புக்கு முதலில் விருப்பம் தெரிவித்தது யார்?

ப: நளினியைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியது பிரியங்காதான். அவரது விருப்பத்தின் அடிப்படையில்தான் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பின் மூலமாக பிரியங்கா முக்கியமான விஷயம் ஒன்றை வெளிப்படுத் தியிருக்கிறார். அவர் நளினியிடம் சொன்ன அந்த முக்கியமான விஷயம், "என் தந்தையைக் கொலை செய்தவர்கள் மீது எனக்கு கோபமோ வெறுப்போ விரோதமோ அறவே கிடையாது.

அதைச் சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்தேன்' என்பதுதான்.

ராஜீவ் கொலையைப் பொறுத்தவரையில் நளினி சிறிய கருவி மட்டும்தான். இக் கொலைக்கான சதியை அவர் தீட்டவில்லை.

நீதிமன்றத்தின்படி கொலைக்கான சதியைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள்தான். அக்கொலைத்திட்டம் நிறைவேறியபோது உடன் சென்றது மட்டும்தான் நளினி செய்த தவறு.

இது பிரியங்காவுக்கும் தெரிந்திருக்கிறது.

அவரால் விடுதலைப்புலிகளை நேரில் சந்தித்து, "உங்கள் மீது கோபமோ வெறுப்போ விரோதமோ கிடையாது' என்று சொல்ல முடியாது. அதனால்தான் அவர் நளினியைப் பயன் படுத்திக் கொண்டார். நளினியிடம் தன் கருத் துக்களைச் சொன்னதன் மூலம் பிரியங்கா தனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தேடிக் கொண்டிருப்பதுடன், தன் மனதில் உள்ள மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியிருக் கிறார்.

கே: அதற்காக விடுதலைப்புலிகளையும் பிரியங்கா மன்னித்துவிட்டார் என்று அர்த்த மாகுமா?

ப: உலகத்தில் எதற்கும் பழிக்குப்பழி வாங்கு வதுதான் விஞ்சி நிற்கிறது. கொலைக்கு கொலை என்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் தனக்கு அந்த எண்ணம் இல்லை என்கிறார் பிரியங்கா. இது மிகவும் உயர்ந்த பண்பு. மிகவும் பாராட்டுக்குரியது.

நளினியை தான் மன்னித்துவிட்டதாகவும் அச்சந்திப்பின்போது பிரியங்கா கூறியிருந்தார்.

மேலும் கொலை செய்தவர்களை மன்னித்து விட்டேன் என்றால் என்ன அர்த்தம்? அவரது மன்னிப்பு என்பது நளினிக்கு மட்டு மல்ல, விடுதலைப்புலிகளுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்று ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியிலும்கூட கூறியிருந்தேன். அதைத்தான் இப்போதும் கூறுகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் சோனியாவுக்கும் விடுதலைப்புலிகள் மீது கோபம் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனெனில் மகளுக்குக் கோபம் இல்லை என்றால் அது தாய்க்கும் பொருந்தும்தானே? அதேபோல் ராஜீவ் குடும் பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இதே கருத்தையே கொண்டிருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

கே: ராஜீவின் குடும்பம் புலிகளை மன்னித்துவிட்டது உண்மை என்றால், இந்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

ப: சோனியா காந்தியின் குடும்பத்தாருக்கே விடுதலைப்புலிகள் மீது கோபம் இல்லை என்றாகிவிட்ட பிறகு இந்திய அரசும் அதை ஏற்கத் தான் வேண்டும். தங்களுக்கும் புலிகள் அமைப்பின் மீது கோபம் இல்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்.

இதுநாள் வரையில் பொதுவாக இந்திய மக்கள் விடுதலைப்புலிகள் என்றாலே கோபம் கலந்த வெறுப்புடன் பார்த்தார்கள். மக்களாகட்டும், காங்கிரஸ் கட்சியினராகட்டும் எல்லோ ருக்குமே இந்தக் கோபமும் வெறுப்பும் இருந்தது உண்மை. ஆனால் பிரியங்காவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு அக்கோபம் ஏறத்தாழ மறைந்துவிட்டது. நளினியின் மீதான கோபம் மட்டும் பிரியங்காவிடம் மறைந்துவிட வில்லை. விடுதலைப்புலிகள் மீதும் அவருக் குக் கோபம் இல்லை என்பதை நாளடைவில் எல்லோரும் புரிந்து கொள்வார்கள். அப்போது அது நல்ல மாற்றமாக இருக்கும்.

கே: நளினியை சிறையில் சந்தித்தபோது பிரியங்காவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது என்றும், இது விதிமுறை மீறிய செயல் என்றும் கூறப்படுகிறதே? பிரியங்கா போன்ற முக்கியஸ்தர்களுக்கு இவ்வாறு விலக்கு அளிக்க முடியுமா?

ப: இந்த சட்டதிட்டங்களிலிருந்து யாருக்குமே விலக்கு அளிக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் தமிழக சிறைத் துறையினர் மிகுந்த கவனத் துடன் இருந்திருக்க வேண் டும். தன் தந்தையைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டுப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒரு வரை பிரியங்கா சந்திக்கி றார். அவ்வாறு நேரில் சந்திக்கும்போது எந்தவொரு மனிதனுக்கும் ஆத்திரம்தான் முதலில் வரும். எவ்வளவு தான் கட்டுப்படுத்திக் கொண்டாலும், தன்னை மீறி ஆக்ரோஷம் அல்லது வேகம் வரும். அதுதான் பிரியங்கா விஷயத்திலும் நடந்தது. ஆனால் அவர் தன் உணர்வுகளை எப்படி வெளிப்படுத் துகிறார் என்றால்.... நளினியைக் கண்டதும் அப்படியே உடைந்துபோய் அழுது விடுகிறார்.

பாரம்பரியமான பண்பான குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவருக்கு நளினியை திட்ட வேண்டுமென்றோ, அடிக்க வேண்டுமென்றோ துன்புறுத்த வேண்டு மென்றோ தோன்றவில்லை. அப்படியொரு எண்ணமே அவருக்கு இல்லை.

ஒருவேளை அவருக்கு தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத்தெரியவில்லை என்றால் நளினியை அடித்திருக்கவும் வாய்ப்புண்டு.

ஆனால் நல்லெண்ணத்துடன் அவர் வந்ததால் பண்பாக நடந்து கொண்டிருக்கிறார். அழுகை என்பது மனிதனின் மனப்பாரத்தை இறக்கி விடக்கூடிய சக்தி பெற்றது. பிரியங்காவும் அழுகையின் மூலம் தன் மனப்பாரத்தை இறக்கி வைத்துவிட்டார்.

கே: நளினியிடம் அவரும் விசாரணை மேற்கொண்டாரா? என்னவெல்லாம் கேட் டார்? கோபப்பட்டாரா?

ப: விசாரணை நடத்தவில்லை. தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். நளினியிடம் அவர் கேட்ட முதல் கேள்வி இதுதான்: "எதற்காக என் தந்தையைக் கொலை செய்தீர்கள்?".

இந்தக் கேள்வியை அவர் கோபமாக வெறுப் புடன் கேட்கவில்லை. மாறாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாகக் கேட்டிருக்கிறார்.

கே: இருவரும் பூட்டப்பட்ட அறைக்குள் பேசியதாக வெளியான தகவல் உண் மையா?

ப: அரசாங்கம் செய்தது தவறு. இருவரும் சந்தித்துப் பேசிய அறை பூட்டப்பட்டிருந்ததா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.

எனினும் இத்தகைய சந்திப்புகளின்போது சட்ட விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்றால் அது சட்ட மீறல்தான். மிகவும் தவறு தான்.

வழக்கமாக கைதிகளிடமிருந்து சில ரகசிய மான தகவல்களைப் பெறுவதற்காக அவர்களது வழக்கறிஞர்கள் சந்திப்பது உண்டு. அத்த கைய சந்திப்புகளின்போது கைதியும் அவரது வழக்கறிஞரும் பேசும்போது அவர்கள் பேசுவது காதில் விழாத தூரத்தில் நின்று சிறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்பதுதான் விதி முறை.

ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளனை கடந்த 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்புப் புலனாய்வு அலுவலக மான மல்லிகையில் நான் சந்தித்துப் பேசிய போது இந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப் பட்டது.

அந்த அலுவலகத்துக்குள் சென்ற ,முதல் வழக்கறிஞர் நான்தான். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆனால் நாங்கள் இருவரும் பேசுவது காதில் விழாத தூரத்தில் நின்று தான் கவனித்தனர். அந்த விதிமுறை பிரியங்கா நளினி சந்திப்பின் போது பின்பற்றப்பட வில்லை என்பது தவறுதான்.

கே: தான் எழுதும் புத்தகத்துக்கு தேவைப் படும் சில விவரங்களைச் சேகரிப்பதற்காக நளினியை சந்தித்திருக்கிறார் பிரியங்கா.
இதற்கும் மனிதநேயத்திற்கும் என்ன சம்பந்தம்?


ப: ஏன் இல்லை...? சினிமாவில் வேண்டுமானால் தன் தந்தையைக் கொன்றவர்களை மன்னிப்பது சாத்தியமாகலாம். ஆனால் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் சொல்கிறேன் பிரியங்கா செய்தது மகத்தான காரியம்.

"மனோகரா' படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் படையெடுத்துச் சென்று பாண்டிய மன்னனை வீழ்த்தி அவரைக் கொன்றுவிடுவார். ஆனால் அடுத்த காட்சியிலேயே மன்னனின் மகளைக் கைபிடிப்பார். இதெல்லாம் நிஜத்தில் சாத்தியமாகுமா? ஆனால் பிரியங்கா இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

உதாரணத்துக்கு நான் சந்தித்த ஒரு வழக்கைச் சொல்கிறேன். தர்மபுரி மாவட்டத்தில் ஒருவரது தந்தையை மூன்று பேர் சேர்ந்து கொன்றுவிட்டனர். வழக்கு நீதிமன்ற சென்றது. மூன்றாண்டு களுக்குப் பிறகு மூவரும் குற்றம் செய்ய வில்லை என்று விடுவிக்கப்பட்டனர். ஆனால் மகனால் இத்தீர்ப்பை ஏற்கமுடியவில்லை. தன் தந்தையைக் கொலை செய்தவர்கள் மூன்று வருடச் சிறைவாசம் முடிவதற்குள் வெளியே வந்துவிட்டனரே என்று கோபப்பட்டார். தன் தந்தையின் அடுத்த நினைவு நாளன்று அம்மூவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அவர்களது தலையை எடுத்து வந்து தன் தந்தையின் சமாதியின் மீது வைத்து பூஜை செய்து கோபத்தை தணித்துக் கொண்டார். அப்படிப் பட்ட பூமியில் தன் தந்தையைக் கொன்றவர் களிடம் பரிவு காட்டுவதென்பது உயர்ந்த

கே: இருவரும் என்னென்ன பேசினார்கள். தன்னை சிறையிலிருந்து விடுவிக்குமாறு நளினி கோரினாரா?

ப: இல்லை... அத்தகைய கோரிக்கை எதையும் நளினி முன்வைக்கவில்லை. ஆனால் இரு வரும் மனம்விட்டுப் பேசியது உண்மை. நளினியின் சிறைவாசம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், வாழ்க்கைத்தரம் என எல் லாவற்றையும் கேட்டறிந்திருக்கிறார் பிரி யங்கா. தன்னைப் பற்றியும் பல விவரங்களைச் சொல்லியிருக்கிறார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசியது பெரிய விஷயம். பிரியங்காவுக்குக் கோபம் இருந்திருக்குமானால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவ்வளவு நேரம் பேசியிருக்க முடியாது. ஏனெனில் வருடக்கணக்கில் பொறுமையுடன் தவம் செய்து முனிவர்களே பொறுமை இழந்து சாபமிட்ட கதைகளைக் கேட்டிருக்கிறோமே?

கே: பிரியங்காவிடம் நளினி மன்னிப்பு கேட்டது உண்மைதானா? அதற்கு பிரி யங்கா என்ன சொன்னார்?

ப: பிரியங்கா அழுததும் நளினியும் சிறிது நேரம் அழுதிருக்கிறார். பிறகு நான் செய்த பாவத்துக்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். எந்தக் குடும்பத்திற்கு எதிராக தான் தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தாரோ, அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வரிடமே மன்னிப்பும் கேட்டுவிட்டார். அவர் மனதில் இருந்தது வார்த்தைகளில் வெளிப் பட்டுவிட்டது. பிரியங்காவும் அதைப் பெருந் தன்மையாக ஏற்றுக் கொண்டார். DONT WORRY. I'VE ALREADY FORGOTTEN EVERYTHING என்று கூறியிருக் கிறார்.

கே: இச்சந்திப்புக்குப் பிறகு நளினி விடுதலையாகும் வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது சாத்தியம்தானா?

ப: பொதுவாக இந்திய சட்டப்படி ஆயுள் தண்டனை என்பது பத்து வருடம்தான்.

கொலைக்குற்றத்துக்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அது ஆயுள்தண் டனையாக மாற்றப்படும்போது குறைந்தபட்சம் பதினான்கு வருட சிறைவாசம் பெறுவர். பின்னர் அரசாங்கம் பார்த்து விடுதலை செய்யலாம்.

நளினியோ அதற்கு மேலாக சுமார் பதினேழு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டார். இந்தியாவில் எந்தவொரு பெண்மணியும் இவ்வளவு காலம் சிறையில் இருக்கவில்லை. எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று சட்டரீதி யாகப் போராடி வருகிறேன். விரைவில் என் முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவரே குற்றம் சாட்டப்பட்டவரை நேரில் வந்து சந்தித்துப் பேசி ஆறுதலும் கூறிச்சென்றிருக்கிறார்.

எனவே நளினி விடுதலையாவதால் வேறு யாருக்கும் எந்தத் தீங்கும் ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே அவரை விடுதலை செய்வதற்கு அரசு தயங்கக்கூடாது என்பதே என் கருத்து.

கே: நளினியின் குடும்பத்தார் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதாகவும், ஏழ்மையில் வாடுவதாகவும் வெளியான தகவல்கள் குறித்து?

ப: நளினியின் தாய் குடியிருக்க வீடு கூடக் கிடைக்காமல் அவதிப்படுகிறார். அவர் வீடு தேடிச் செல்லும்போதெல்லாம் ராஜீவ் கொலை யில் சம்பந்தப்பட்டவர் என்று கூறி வாடகைக்கு விட மறுக்கிறார்கள். ஒருவேளை விவரம் தெரியாமல் முதலில் வீடு கொடுத்தாலும், பின்னர் விவரம் தெரியும்போது வீட்டைக் காலி செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறார்கள்.

அதேபோல் நளினியின் அண்ணனுக்கு நிரந்தரமாக ஒரு உத்தியோகம் இல்லை. எங்கு வேலைக்குச் சென்றாலும் அவரைக் குற்றவாளியாகப் பார்த்து வேலை தர மறுக்கிறார்கள். நளினியின் தாயும், சகோதரரும் தவறு செய்ய வில்லை என்று நீதிமன்றமே கூறிவிட்ட போதிலும், மக்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் மத்தியில் ராஜீவ்காந்தி கொலையால் ஏற்பட்ட பாதிப்பும் வெறுப்பும் இன்னும் மறையாமல் இருப்பதே இந்நிலைக்கு காரணம். ஆனால் பிரியங்காவின் சந்திப்புக்குப் பிறகு நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

கே: நீதிமன்றமே நளினி தரப்பில் குற்றம் நடந்திருப்பது உண்மை என்று கருதி அவருக்கு தண்டனை வழங்கியிருக்கிறது. அப்படியிருக்க நளினியை விடுவிக்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் நீண்ட காலமாகப் போராடி வருகிறீர்கள்?

ப: உண்மையில் பேரறிவாளனுக்காகத்தான் இந்த வழக்கில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொருவருக்காகவும் வாதாடினேன். முதலில் விடுதலைப்புலிகள் இந்தத் தவறைச் செய்திருக்கமாட்டார்கள் என்று நான் நினைத்தேன். ஏனெனில் இப்படி யொரு காரியத்தைச் செய்தால் அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் அவர்களால் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருக்க முடியாது எனக் கருதினேன்.

நளினி தவறு செய்தார் என்பது சரியல்ல.

நான் முன்பே குறிப்பிட்டதுபோல அவர் வெறும் கருவிதான். சதியை அரங்கேற்றிய சிவராசன், தனு, சுபா ஆகியோருடன் உடன்சென்றது மட்டும்தான் அவர் செய்த காரியம்.

மேலும் விடுதலைப்புலிகள் எதையும், எப்போதும் ரகசியமாக தங்கள் மேலிடத்தின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுத்தக்கூடியவர்கள்.

எதையும் ரகசியமாகச் செய்வதில் புலிகளுக்கு நிகர் அவர்கள்தான். நாங்கள் இன்னதுதான் செய்யப் போகிறோம் என்று யாரிடமும் சொல்லிவிட்டுச் செய்யக்கூடியவர்கள் அல்ல.

எனவேதான் நளினிக்கு ராஜீவ் கொலை விஷயம் தெரிந்திருக்காது என்று உறுதியாக நம்பினேன். அந்த அடிப்படையில்தான் அவருக்காகப் போராடி வருகிறேன்.

கே: ராஜீவ் கொலையால் தமிழகமே கொந்தளித்துப் போயிருந்த நேரத்தில் நளினிக்காகக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஏதும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டனவா?

ப: ஒன்றா இரண்டா... எதைச் சொல்வது? நீதிமன்றத்தில் என்னைப் போலவே தோற்றம் கொண்ட சகவழக்கறிஞர் ஒருவரை காங்கிரஸ் கட்சியினர் அடித்து உதைத்தனர். சந்தர்ப்பவசத்தால் நான் தப்பித்தேன். அவர் சிக்கிக் கொண் டார். அந்நாட்களில் ராஜீவ் கொலையில் சம்பந் தப்பட்டிருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படு பவர்களைப் பற்றி பேசினாலே அடித்து உதைக்கும் அளவுக்கு மக்கள் ஆவேசமாக இருந்தனர்.

சிறப்புப் புலனாய்வு அலுவலகத்துக்கு சென்று விட்டு பிறகு உயிருடன் வீடு திரும்புவேனா என்பதுகூட சந்தேகம் என்கிற நிலை காணப் பட்டது. பலமுறை என் வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

ராஜீவ் கொலையைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசாங்கம் அமைந்தது. அத்தகையதொரு கடுமையான மாநில அரசாங்கம், புலிகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசாங்கம், இரும்புக்கரம் கொண்டுள்ள சி.பி.ஐ என அனைத்தையும் மீறி தைரியமாகச் செயல்பட்டேன். இத்தனை போராட்டங்களுக்கும், அச்சு றுத்தல்களுக்கும் மத்தியில் என் குடும்பத்தார் என் விருப்பப்படி செயல்பட முழு ஒத்துழைப்பை நல்கி வந்தனர்.

கே: நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என வேறு சில அமைப்புகளும் கட்சிகளும் கூட தமிழகத்தில் குரல் கொடுத்தன. அப்படிப்பட்டவர்களில் யாராவது இது தொடர்பாக நீங்கள் நடத்தி வரும் வழக்கு களை தொடர்ந்து நடத்த பொருளாதார ரீதியில் உதவி செய்திருக்கிறார்களா?

ப: யாரும் சல்லிக்காசு கூட தரவில்லை. இது தான் உண்மை. எல்லோருமே தங்களின் ஆதா யத்துக்காக, இந்த விவகாரம் பற்றிப்பேசினால் தங்களுக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காகத் தான் பேசினார்களே தவிர, உண்மையில் யாருக்கும் நளினி விவகாரத்தில் அக்கறையே இல்லை. சரி... பணம் கூட தரவேண்டாம். குறைந்தபட்சம் தார்மீக அடிப்படையில் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம். அதைக்கூட யாரும் செய்யவில்லை. நளினியை பொலிஸார் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று நான் கூறியபோதும்கூட யாரும் இதற்காகக் குரல் கொடுக்கவில்லை என்பது வேதனையான உண்மை.

கே: தமிழ்ச்செல்வன் இறந்தபோது கூட தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் கவிதை எழுதினார். அவர் புலிகள் மீது மறை முகமாகப்பற்றுக் கொண்டவர் என்கிற விமர்சனம் உண்டு. அது குறித்து?

ப: கலைஞர் மரியாதைக்குரிய ஒரு தலைவர் தமிழன் என்கிற இன உணர்வும், திராவிட உணர்வும் அவரது ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் அந்த உணர்வை அரசியல் எனும் மற்றொரு உணர்வைக் கொண்டு மூடி வைத் திருக்கிறார். எனினும் தமிழ்ச்செல்வன் மறைவு போன்ற சம்பவங்கள் நிகழும்போது அவரையும் அறியாமல் அரசியல் என்பது மறைந்து, திராவிடமும் இன உணர்வும் மேலோங்கி இப் படிப்பட்ட கவிதைகளை எழுதுகிறார்.

இப்படிக் கவிதை எழுதிய அடுத்த நாளே தன் அரசாங்கத்தின் சார்பாக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். தமிழ்ச்செல்வனுக்கு யாரும் இரங்கல் கூட்டம் நடத்தக்கூடாது என்று அறிவிக்கிறார். மேலும் தி.மு.கவைப் பொறுத்த வரை யில் விடுதலைப்புலிகளைப் பற்றி பேசினால் நமக்கு தொந்தரவுதான் மிஞ்சும் என்று நினைப் பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்

கே: ராகுலைப் பிரதமராக்குவதற்கும், தங்கள் குடும்பம் மனிதநேயமிக்கது என்பதைப் பறைசாற்றிக் கொள்ளவும்தான் நளினியை பிரியங்கா சந்தித்திருக்கிறார் என்றும், இதன் மூலம் அக்குடும்பம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது என்றும் கூறப்படுவது குறித்து?

ப: எந்த நோக்கத்துக்காக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்பதை ஆராய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எல்லோரும் அதை மறந்துவிடுவது நல்லது. மாறாக பிரியங்கா வின் செயலைப் பாராட்ட வேண்டும் என்பது தான் என் கருத்து. தன் தந்தையைக் கொன்ற தாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு தண் டனை அனுபவிக்கும் ஒருவரைச் சந்தித்து சகஜமாகப் பேசுவதும், அவரை மன்னித்துவிட் டதாகச் சொல்வதும் ஒப்பீடு செய்ய முடியாத அளவு மகத்தான காரியம்.

நளினியின் மகள் எங்கே?

Where is Nalini’s daughter? Indian agencies clueless

LONDON: Indian intelligence agencies are clueless about the whereabouts of Megara, daughter of Nalini Sriharan basking in the limelight after her jailhouse tryst with Priyanka Vadra in March.

“Megara is not in London. She has given us the slip. We are trying to zero in on her,” a senior Indian government official told DNA on condition of anonymity.

Another official disclosed that Megara was sighted in Norway four months ago before the trail ran cold.

Megara was born in a jail in Tamil Nadu after both her parents were arrested for helping assassinate former prime minister Rajiv Gandhi in 1991. After Megara’s birth Nalini was able to keep the child with her in jail in for a few years. After both Nalini and her husband Murugan were sentenced to death, Murugan’s mother took the child with her to Sri Lanka.

The failure of Indian agencies to keep tabs on Megara is a severe indictment of Research & Analysis Wing, Intelligence Bureau and Defence Ministry sleuths posted in the Indian High Commission in London under diplomatic cover. Some posts are in fact declared intelligence-gathering slots in India House.

Sources revealed that India House has a new IB honcho, Asif Ibrahimi, who has replaced Rajat Bagchi. Both are from the Indian Police Service and are on deputation to the IB. Career diplomats belong to the Indian Foreign Service. RAW, of course, has its own cadre called RAS.

It was after Nalini had given birth to Megara that Sonia Gandhi, Congress president and Rajiv’s widow, had pleaded on her behalf and got her sentence commuted from death to life imprisonment in 2000. And on March 19 this year, Ms Gandhi’s daughter Priyanka had visited the Vellore jail in Tamil Nadu to ask Nalini why they had assassinated her father at Sriperumbudur on May 21, 1991.

As a child Megara was taken out of India on a Sri Lankan passport because her grandmother and father were both Sri Lankan citizens. From then onwards, Megara’s nationality has become a subject of litigation in Indian courts. While her parents argue that Megara is an Indian citizen by birth and because her mother Nalini is an Indian too, the Indian authorities refuse to accept the claim.

In the past Indian officials also refused permission to Megara to visit her parents in jail. Following a lengthy legal battle, Megara was finally allowed to visit her parents in jail in January 2006. However, Indian officials still refuse to give her Indian citizenship.

Now Megara is a teenaged schoolgirl studying in Class 10. Unconfirmed reports claim she is living with her father’s brother in London and wants to become a doctor. However Indian agencies last know of her living in Norway.

“The LTTE was banned in the UK and was forced to shift base to Paris. From there they have also been forced to shift to Scandinavia so it is much more likely that she is still in Norway,” said an Indian government official. “Her studies are more than likely being funded by the LTTE,” he added.

பிரியங்காவுக்கு கண்டனம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியை சந்தித்த அவரது மகள் பிரியங்கா, தங்களை சந்திக்காதது ஏன் என்று குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
.
ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு ஒரு போதும் மன்னிப்பு அளிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பில் கொலை செய்யப்பட்டார். அவருடன் மேலும் 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நளினியின் மரண தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வதேரா சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

பிரியங்காவின் இந்த செயல் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பிரியங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு சதித்திட்டம் தீட்டி தண்டனை அனுபவித்து வரும் நளினியை சந்தித்த பிரியங்கா பாதிக்கப்பட்ட தங்களை இதுவரை வந்து சந்திக்காதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செங்கை மேற்கு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முகம்மது இக்பால், ராஜீவ் காந்தியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது மனைவி நசீம் பானு மற்றும் மகன் ஜாவித் இக்பால் ஆகியோர் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நசீம் பானு கூறியுள்ளார். அவரது கருத்தையே பாதிக்கப்பட்ட பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகரின் மகன் லீக் மோகன், நளினிக்கு பெண் குழந்தை உள்ளது என்பதால் அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது என்றும், இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

நளினிக்கு மன்னிப்பு அளிக்கவே கூடாது என்று கூறும் மோகன் இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு தாம் கடிதம் எழுதியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்து 70க்கும் மேற்பட்ட குண்டு துகள்களுடன் போராடிக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி, தனது மருத்துவ செலவை தாமே மேற்கொண்டதாகவும், சொந்த செலவில் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளித்ததாகவும் கூறுகிறார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்தோ, காந்தி குடும்பத்திலிருந்தோ தங்களுக்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை என்றும், யாரும் தங்களை வந்து பார்க்கக்கூட வில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்.

என்ன நடந்தது என்று நளினியிடம் போய் ஏன் பிரியங்கா கேட்கவேண்டும்? எங்களிடம் வந்து கேட்கட்டும் என்கிறார். நளினி மீது தமக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றாலும், பலரது குடும்பங்களை பாதிக்கச் செய்த நபரை மன்னிக்கவே கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

யார் மீதும் தங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை என்ற போதிலும், நளினியை பிரியங்கா சந்தித்த செய்தியை படித்தபோது தங்களது மனம் புண்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sunday, 20 April, 2008

Saturday, April 19, 2008

பிரியங்காவுக்கு நளினியால் ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு?

நளினியை சந்தித்த வேளையில் பிரியங்கா உயிருக்கு நளினியால் ஆபத்து ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது. தமிழக அரசின் உளவுத்துறையின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நளினி பிரியங்கா சந்திப்பின் பின்னால் இருக்கும் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
மறப்போம் மன்னிப்போம் என்ற பண்பை, இந்திரா காந்தி குடும்பத்தினர் இன்னும் கட்டிக் காத்து வருகிறார்கள் என்பதை வெளிக்காட்டிய இன்னொரு நிகழ்ச்சிதான் அந்தச் சந்திப்பு.

ஆனால், நான் அந்தச் சந்திப்பை விமர்சனம் செய்கிறேன். பிரியங்கா, வேலூர் வந்து போனது ரகசியமாக வைக்கப்பட்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக கசியவிடப்பட்டிருக்கிறது.

உச்சபட்ச பாதுகாப்பு வலயத்தில்இருக்கும் ஒரு பெண் எந்தச் சுவடும் இல்லாமல் வேலூர் சிறைக்கு வந்து, கொலை வழக்கில் குற்றம்சாட் டப்பட்டிருக்கும் பெண்மணியைச் சந்தித்துத் திரும்பியிருப்பது தேவையா என்பதுதான் என் கேள்வி.

அதுவும் பிரியங்காவும் நளினியும் பூட்டப் பட்ட ஒரு அறையில் யாருமில்லாமல் தனியாக பேசினார்கள் என்று தகவல்கள் வெளியாகின்றன. பல வருடங்களாக சிறையில் இருக்கும் நளினியின் மனநிலை எப்படி இருக்கும்? அன்புக்காக ஏங்கும் பெண்ணாக இருப்பாரா அல்லது சமூகத்தின் மீது வெறுப்பை உமிழும் ஆளுமையோடு மாறியிருப்பாரா என்று யாருக்கும் தெரியாது. இந்நிலையில் அவரைத் தனிமையில் சந்தித்துப் பிரியங்கா பேசியபோது நளினியால் ஏதும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். தமிழகத்தில் மீண்டும் ஒரு பரிதாபம் என்று அனைத்துலக ரீதியில் நம் மாநில மானம் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கும்.

ராஜீவ் கொலையால் ஈழத்தமிழர்கள் ஏற்கனவே பல இடர்ப்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவைக் கொன்றது விடுதலைப்புலிகள்தான் என்ற ஒரு தோற்றம் இன்னும் மறையாமல் ஈழப் பிரச்சினை இழுத் துக்கொண்டிருக்கிறது. ராஜீவ் கொலை நடந்து இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு அக்கொலையில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை பிரியங்கா இப்போது சந்திப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டு விடப்போகிறது? இருவரும் சந்தித்தபோது என்னென்ன பேசிக் கொண்டார்கள் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் பிரியங்கா நளினி சந்திப்பால் ஈழப் பிரச்சினையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் தனிப்பட்ட பயணம், சந்திப்பு என்று சொல்லும் பிரியங்காவுடன் ஏன் மத்திய அரசின் உயரதிகாரிகள், உளவுத்துறையினர் எனப் பெரும் படையே வந்தது? பிரியங்கா வெளிப்படையாக நளினியைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். அவர் அப்படி வந்து போவதை தமிழக மக்கள் யாரும் எதிர்க்கமாட்டார்கள்.

இந்நிலையில் ராஜீவைக் கொன்றது புலிகளே அல்ல என்ற கருத்தும் வாதமும் வேறு நீண்டு கொண்டுதான் இருக்கிறது. அந்த விவாதத்துக்கு விடைதேடித்தான் பிரியங்கா வேலூ ருக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் அதனை அறிய இதுதான் சரியான முறையா என்பதுதான் என் கேள்வி.

எல்லா விஷயத்தையும் முன்கூட்டியே கண்டுபிடிப்பதுதான் உளவுத்துறையின் வேலை.

ஆனால் பிரியங்கா வருகை பற்றி மாநில உளவுத்துறைக்கு ஏதாவது தகவல் முன் கூட்டியே தெரியுமா? அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

பாவம், முக்கியமானவர்களின் தொலைபேசி களை ஒட்டுக்கேட்டு அதைக் குறிப்புகளாக்கி மேலிடத்துக்கு அனுப்புவதற்குதானே அவர்களுக்கும் நேரம் சரியாக இருக்கிறது.

ஆயுள் தண்டனை கைதி நளினி விடுதலைகோரி உயர் நீதி மன்றில் மனுத்தாக்கல்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றில் மனு, தாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இவ் வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. நளினி விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991, மே.21ன்றில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த போது ஸ்ரீபெரும்புதூரில் இடம் பெற்ற மனித வெடிகுண்டுக்கு பலியானார். இது தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த மரண தண்டனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையீட்டின் பேரில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நளினிக்கு கருணை காட்டும்படி அவர் கேட்டுக்கொண்டதால் இவ்வாறு தண்டனை குறைக்கப்பட்டது. இந் நிலையில் 1991ம் ஆண்டு முதல் நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரை சோனியாவின் மகள் பிரியங்கா வேலூரில் சிறையில் சந்தித்தார். என் தந்தை நல்ல மனிதர். அவரை ஏன் கொன்றார்கள் என்று கேட்டு பிரியங்கா அழுதார். நளினியே அப்போது கண்ணீர் விட்டு அழுதாராம். இந்த சந்திப்பு உண்மை என்று பிரியங்கா பிறகு ஒப்புக்கொண்டார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு நளினியை பிரியங்கா சந்தித்தது ஏன் என்பது புதிராக உள்ளது என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பிரியங்கா தன்னை சந்தித்ததின் மூலம் தன் பாவங்களெல்லாம் நீங்கிவிட்டது என்று நளினி கூறியுள்ளார். வேலூர் சிறையில் நளினி 17 ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள்தான் ஆனால் அதையும் தாண்டி நளினி சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுவிக்கக்கோரி பலமுறை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் அந்த மனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இப்போது நளினியை பிரியங்கா சந்தித்துள்ள நிலையில் நளினியை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் மீள் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். நளினி விடுதலையாவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்பு அடுத்தவாரம் விசாரணை ஆரம்பமாகலாம் என்றும் தெரிகிறது. அநேகமாக நளினி இந்த முறை விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் மீண்டும் ஒரு முறை நம்பிக்கையோடு கூறினார்.

பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா வத்ரா ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான நளினியை சந்தித்தமையானது படுகொலை விசாரணையை திரும்ப மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு வலுவூட்டியிருப்பதாக நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி தெரிவித்துள்ளார்.
படுகொலையில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து பிரியங்கா சந்தேகம் கொண்டிருப்பதாகவும் இந்த வழக்குக் குறித்து மேலும் விசாரணை செய்வதற்கான சாத்தியம் தற்போதும் இருப்பதாகவும் துரைசாமி நியூவின்ட் பிரஸ் இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.

விசேட விசாரணைக்குழுவும் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் கியூப் பிரிவும் மேற்கொண்ட விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடையவில்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுவொரு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விசாரணையாகும். அதனாலேயே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 26 பேரில் 19 பேரை உச்சநீதிமன்றம் விடுவித்தது. விசேட தடா நீதிமன்றம் 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கியிருந்தது என்றும் துரைசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உதவிய நபர்களை அடையாளம் கண்டுகொள்வதில் மத்திய புலனாய்வுப் பிரிவு தோல்வி கண்டுவிட்டதாகவும் துரைசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மே 17, 1991 வரை தமிழ்நாட்டிற்கு ராஜீவ் வருகை தருவதற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

டில்லியில் மே 19 இல் இந்தப் பயணம் தொடர்பாக அறிவிக்கப்பட்டபோது, அச்சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த யோசனையை எதிர்த்ததாகவும் பயணத்தை ரத்துச்செய்யுமாறு கோரியதாகவும், ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

ராஜீவ் சென்னைக்கு வந்து ஷ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் உரையாற்றப்போவதாக யார் குற்றவாளிக்கு அறிவித்தது? என்று துரைசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பயண ஒழுங்கின் பிரகாரம் மே 21 இல் ஷ்ரீ பெரும்புதூர் கூட்டத்தின் பின்னர் ராஜீவ் அங்கு தங்கியிருந்திருக்க வேண்டும். மீண்டும் இது தொடர்பாக ராமமூர்த்தி ஆட்சேபனை தெரிவித்திருந்தார். ராஜீவ் தங்கியிருப்பதற்குரிய நல்ல ஹோட்டல் அங்கு இல்லையென அவர் கூறியிருந்தார். ஆனால், உயர்மட்டம் தங்கியிருக்கவே வலியுறுத்தியிருந்தது.

கூட்டம் இடம்பெற்ற இடத்தில் மேற்கொள்ளப்படவிருந்த முதல் முயற்சி தோல்விகண்டால் ராஜீவ் தங்கியிருக்கும் இடத்தில் மற்றொரு முயற்சியை மேற்கொள்வதற்காக குற்றவாளிக்கு உதவும் திட்டமே இதுவாகும் என்று துரைசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ராஜீவ் மேற்கொள்ளும் பயண நிகழ்ச்சித் திட்டப் பிரதியை உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் கேட்டிருந்தபோதும் அந்த நிகழ்ச்சி நிரலை வழங்க காங்கிரஸ் உயர்மட்டம் மறுத்துவிட்டது. பயண ஒழுங்கின் பிரகாரம் விழாக் கூட்டம் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டிற்கு ராஜீவ் வரவிருந்தார். விமானத் தொழில்நுட்பக் கோளாறால் ஷ்ரீபெரும்புதூர் கூட்டத்தை அவர் ரத்துச் செய்திருந்தார். அவர் இரவு தங்குவதற்காக உள்ளூர் சுற்றுலா விடுதிக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கும் பொழுது அவருக்கு வயலர்ஸ் மூலம் அழைப்புக் கிடைத்தது. அடுத்த விமானத்தில் சென்னை செல்ல முடியுமென அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

யார் இதனை ஏற்பாடு செய்தார்கள்? ஏன்? என்று துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், இந்த முக்கியமான கேள்விகளுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு உரிய பதிலை வழங்கவில்லையெனவும் இந்தக் கோணங்களிலிருந்து பார்த்தால் மேலும் விசாரணை செய்வதற்கு இடமிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரியங்கா - நளினி சந்திப்புக்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். தனது தந்தையின் கொலையின் பின்னணியிலுள்ள உண்மையை நிச்சயப்படுத்திக்கொள்ள பிரியங்கா விரும்பியிருக்கக்கூடுமெனவும் துரைசாமி கூறியுள்ளார்.

பிரியங்கா- நளினி சந்திப்பு கூறும் செய்தி என்ன ?

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு தமிழகத்தின் வேலூரில் மத்திய சிறையில் ஆயுட் காலச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி ஷ்ரீஹரனுக்கும் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வடேராவுக்கும் இடையே கடந்த மாதம் 19 ஆம் திகதி மிகவும் இரகசியமாக நடந்த சந்திப்பு தற்போது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஷ்ரீலக்ஷ்மி நாராயணி பொற்கோயிலைத் தரிசிப்பதற்காகத்தான் பிரியங்கா கடந்த மாதம் தமிழகம் வந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. தமிழக விஜயத்தின் போது அவரது நடமாட்டம் குறித்து மாநில அரசாங்கத்தின் உயரதிகாரிகளுக்கே தெரியாத அளவுக்கு பேணப்பட்ட இரகசியத்தன்மையின் புதிரை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. பிரியங்காவின் வேலூர்ச் சிறை விஜயம் அரசியல் விவாதத்துக்கும் ஊகங்களுக்கும் உரிய விவகாரமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் முதன்மையான அரசியல் குடும்பமொன்றின் உறுப்பினரான பிரியங்கா தனது தந்தையாரின் கொலை வழக்கின் குற்றவாளியொருவரைச் சந்தித்துப் பேசிய செயல் இந்தியாவில் மாத்திரமல்ல இலங்கையிலும் பெரும் ஆர்வத்தையும் அக்கறையையும் தூண்டியிருக்கிறது.

நளினியைச் சந்தித்துவிட்டு பிரியங்கா புதுடில்லி திரும்பிய பின்னரும் கிட்டத்தட்ட ஒருமாதகாலமாக இரகசியம் பேணப்பட்டுவந்திருக்கிறது. தகவல் அறிவதற்கான உரிமை தொடர்பாக சென்னை வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்த பின்னர்தான் உண்மை வெளியாகியிருக்கிறது. செய்திகள் வெளியானதும் நளினியைச் சந்தித்ததை ஒப்புக்கொண்ட பிரியங்கா இதில் பகையோ, பழி உணர்வோ, குரோதமோ, கோபமோ இல்லையென்றும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சி காரணமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது என்றும் வன்முறையில் தந்தையாரைப் பறிகொடுத்த தனக்கு ஆறுதல் தேடுவதற்கான ஒரு வழிமுறையாகவே சந்திப்பு அமைந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பகை எண்ணம், பழி உணர்வில் தனக்கு நம்பிக்கை இல்லையென்றும் அந்த உணர்வுகள் தன்னை ஆட்கொள்ள அனுமதிக்கப்போவதில்லையென்றும் தெரிவித்திருக்கும் பிரியங்கா, நளினியின் தூக்குத் தண்டனையை தனது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான திருமதி சோனியா காந்தி தலையிட்டு ஆயுட்காலச் சிறைத்தண்டனையாக மாற்றுவதற்கு வழிசெய்திருந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இச்சந்திப்புக் குறித்து சோனியா காந்தியிடமிருந்து இதுவரை எந்தவிதமான கருத்தும் வெளிவரவில்லை. ஆனால், பிரியங்காவின் சகோதரரும் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தியிடம் `உங்கள் சகோதரியைப் போன்று நீங்களும் நளினியைச் சந்திப்பீர்களா' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, `இந்த விடயங்களை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். இதில் எனக்கு எந்தவித பிரச்சினையுமே இல்லை. எனது தந்தையின் கொலையாளியைப் பார்க்க வேண்டுமென்று பிரியங்கா விரும்பினார். கொஞ்ச நாட்களாகவே அவருக்கு இந்த எண்ணம் இருந்துவந்தது' என்று பதிலளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு மறுத்திருக்கின்றமை கவனிக்கத் தக்கதாகும்.

நளினியை பிரியங்கா சந்தித்து சுமார் ஒரு மணித்தியாலமாக பேசியமை உண்மையிலேயே அவர் தரப்பிலான ஒரு நல்லெண்ண வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தந்தையார் படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்களுக்குப் பிறகு குற்றவாளிகளில் ஒருவரை சந்திப்பதற்கு மகள் விரும்பியமையும் சந்திப்பு இடம்பெற்று சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின்னர் ஊடகங்கள் மூலமாக செய்தி கசிய விடப்பட்டமையும் காந்தி குடும்பத்துக்கும் காங்கிரஸுக்கும் ஆதரவையும் அனுதாபத்தையும் தோற்றுவிப்பதற்கான ஒரு பிரசாரத் தந்திர செயற்பாடோ என்று சந்தேகிப்பவர்கள் ஏராளம். ராஜீவ்காந்தி கொலை விசாரணைகளுக்கு தலைமை தாங்கிய இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் (சி.பி.ஐ.) முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் நளினி- பிரியங்கா சந்திப்பை `ஒரு அனுகூலமான நிகழ்வு' என்று வர்ணித்திருக்கிறார். பிரியங்காவின் விஜயம் எனக்கு ஆச்சரியத்தைத்தரவில்லை. சதாகாலமும் நாம் வெறுப்புணர்வுடன் வாழ முடியாது. நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுட் காலச் சிறைத் தண்டனையாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டவர் பிரியங்காவின் தாயார் சோனியா காந்திதான். இத்தகைய நிகழ்வுகளை நான் சாதகமான கோணத்திலேயே நோக்குகிறேன் என்று கார்த்திகேயன் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு விசித்திரமான அம்சம் என்னவென்றால் இச் சந்திப்பு குறித்து தமிழகத்தின் முக்கியமான தலைவர்களிடமிருந்து பிரதிபலிப்பு எதுவும் இதுவரை வெளிவராதமையாகும்.

பிரியங்காவின் செயல் அவரது ஆளுமை மீது சாதகமான ஒளியைப் பாய்ச்சுகிறது என்று வர்ணிக்கப்படுகின்ற போதிலும், அதை முன்னென்றும் இல்லாதது என்று சொல்லிவிட முடியாது. மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேயை காந்தியடிகளின் மகன் தேவதாஸ் காந்தி சிறையில் சந்தித்துப் பேசிய சம்பவம் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரியங்கா செய்ததைப் போன்று இரகசியமாகச் செல்லாமல் தேவதாஸ் காந்தி முறைப்படி சிறை அதிகாரிகளிடம் பகிரங்கமாக அனுமதி பெற்றுத்தான் கோட்சேயைச் சந்தித்தார் என்பதை தமிழகத்தின் பிரபல தமிழ்த் திசைரிகளில் ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் நேற்றைய தினம் சுட்டிக் காட்டியிருக்கிறது. இது இவ்வாறிருக்க, நளினி- பிரியங்கா சந்திப்பு அம்பலமாகியதையடுத்து அரசியல் அரங்கில் பெரும் ஆர்வமும் பரபரப்பும் தோன்றியமைக்குக் காரணம் இலங்கை இன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறைகள் ராஜீவ் காந்தி கொலையின் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கப்படுகின்றமை தான். 2006 பிற்பகுதியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்ட சபையில் நடைபெற்ற விவாதமொன்றுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இலங்கை நெருக்கடியில் இந்தியக் கொள்கையை `ராஜீவ் காந்திக்கு முன்னர், ராஜீவ் காந்திக்கு பின்னர்' என்று பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவுப்படுத்துவது பொருத்தமானதாகும். இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாறுதல்களுக்கு கட்டியம் கூறும் ஏதாவது அம்சம் வேலூர்ச் சிறைச் சந்திப்பில் இருக்கமுடியும் என்று எதிர்பார்ப்பது விவேகமானதா? இலங்கைத் தமிழ் மக்களுக்கு நளினி- பிரியங்கா சந்திப்பின் மூலமாக ஏதாவது செய்தி சொல்லப்படுகிறதா?

சமாதான பிரியங்கா... சோனியாவின் அரசியல் தந்திரம்!

ஒரே நாளில் பிரியங்கா, ராகுல் காந்தி இருவரும் மீடியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்து விட்டார்கள்.

காங்கிரஸ் கட்சித் தலைவியின்மகள் என்பதுதான் பிரியங்காவின் ஒரே அடை யாளம். மற்றபடி தன்மீது அரசியல் சாயம் படிந்துவிடாதபடி கவனத்துடன் இருப்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் நளினியை அவர் சந்தித்தது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது .

அதேசமயம், இது பி.ஜே.பி-க்குஎதிராக நடத்தப்பட்ட நாடகம் என்கிற கருத்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

பிரியங்கா-நளினி சந்திப்பும் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவித்ததும்
பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளருக்கு வைக்கப்பட்ட செக் என்கிறார்கள்.
பிரியங்காவை இந்திரா காந்தியோடு ஒப்பிட்டுப் பேசினார் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்ததால் இழந்த ஆட்சியை இரண்டே ஆண்டில் மீட்டு மறுபடியும் பிரதமராகி, தன்னை அசைக்க எதனாலும் முடியாது என்று காட்டியவர் இந்திரா காந்தி.

அப்போது தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழியாக 'மிசா' என்று போட்டுக்கொண்டு இந்திராவின் அடக்குமுறைப் போக்கைத் தாங்கள் மறக்கவில்லை என்று தி.மு.க-வினர் காட்டினார்கள். பிற்பாடு, 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று கருணாநிதியையே சொல்ல வைத்தவர் இந்திரா.
'பாட்டிக்கு தான் சளைத்தவர் இல்லை' என்று பிரியங்கா நிரூபித்திருக்கிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு அவருடைய உடல் சென்னை விமான நிலையத்தில் வி.வி.ஐ.பி. அறையில் வைக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தி சராசரி உணர்வுகள் கொண்ட ஒரு மனைவியாக அழுதபடி அந்த சவப்பெட்டியையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பிரியங்காதான் அங்கு மிங்கும் பரபரப்பாக ஓடியாடி உடலை எப்படி டெல்லிக்கு எடுத்துச் செல்வது என்று மூப்பனார் போன்ற தலைவர்களிடம் ஆலோசித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஜனாதிபதியின் தனி விமானத்தில் ராஜீவ் உடலைக் கொண்டு செல்லலாம் என்று ஒரு யோசனை சொல்லப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன். அவருக்கு போன் போட்டார் பிரியங்கா.
ராஜீவ் ஒரு தொகுதியின் வேட்பாளர்தான். அவருக்குத் தனி விமான வசதி கொடுத் தால் அது சர்ச்சைக்கு வித்திட்டுவிடுமோ என்று யோசித்த ஆர்.வி., சிறிது நேரத்தில் தானே அழைப் பதாகச் சொன்னார். மீண்டும் அவரைத் தொடர்புகொண்டு விமானம் வருகிற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகுதான் பிரியங்கா அமைதியானார்.

பிரியங்காவின் கணவர் வதேராவின் குடும்பம் வியாபாரக் குடும்பம். அவர்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சோனியா, பிரியங்கா பெயரைப் பயன்படுத்தி சலுகை பெறுகிறார்கள் என்ற செய்தி பிரியங்காவின் காதுக்கு எட்டியதும் காங்கிரஸ் அரசு வதேரா குடும்பத்துக்கு எந்தச் சலுகையும் தரக் கூடாது என்று உத்தரவிட்டார்.
கட்சியின் அடிப்படை உறுப் பினர்கூட அல்லாத பிரியங்கா, சோனியாவின் தலைமைத் தேர்தல் ஏஜென்ட்டாகப் பணிபுரிந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் சோனியாவை ஜெயிக்க வைத்தார்.
'தன் தகப்பனார் கொல்லப்பட்டது ஏன்..?' என்கிற கேள்வி பிரியங்காவின் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. இது தொடர்பாக, இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை ராணுவ உயரதிகாரிகளிடம் பேசினார். இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகள், அதில் இந்தியாவின் பங்கு, ராஜீவ் காந்தி இலங்கைத் தமிழர் நலனுக்காகச் செய்தவை போன்ற விவரங்களை, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதன்பிறகு, நளினியைச் சந்திக்கும் எண்ணம் அவருக்கு வந்திருக்கிறது. சோனியாவுக்கு நளினி தொடர்ந்து கடிதம் எழுதிவந்ததும் இதற்கு ஒரு காரணம்.

நளினி குழந்தையின் எதிர்காலம் கருதித்தான் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைய சோனியா உதவினார். இதனால்தான் சோனியாவுக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதிவந்தார் நளினி.
சோனியா, ராகுல் காந்தி, பிரதமர், பாதுகாப்பு ஆலோசகர் என்ற சிறு வட்டத்துக்கு மட்டுமே பிரியங்கா-நளினி சந்திப்பு முன்கூட்டித் தெரியும்.

தமிழகத்தில் முதல்வர், சில உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த விஷயம் தெரியுமென்றாலும், இதை ரகசியமாக வைக்கும்படி பிரியங்கா தரப்பில் கேட்டுக் கொண்டதால் மௌனம் சாதிக்கிறார்கள்.
இந்த விசிட்டுக்கு முன்னதாக, எஸ்.பி.ஜி. படைத் தலைவர் வேலூருக்கு வந்து ஏற்பாடு களைக் கவனித்தார். பிரியங்காவின் படத்தைக் காட்டி இவர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று சொல்லி நளினியிடம் சம்மதம் வாங்கப்பட்டது.
ஆனால், ஜெயில் அதிகாரிக்குத் தரப்பட்ட விண்ணப்ப மனுவில் பிரியங்கா என்பதற்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பிரியங்கா-நளினி ரகசிய சந்திப்பு பத்திரிகை மூலம் வெட்ட வெளிச்சமானதும், பிரியங்கா அதை ஒப்புக்கொண்டு சஸ்பென்ஸை உடைத்துவிட்டார்.
தன் மாமியாரைக் கொன்றது ஒரு சீக்கியர் என்றாலும், தான் அமர வேண்டிய பிரதமர் நாற்காலியில் மன்மோகன் சிங்கை உட்கார வைத்தவர் சோனியா. பிரியங்காவோ, 'எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் எதிரிகளாக நினைப்பதில்லை. எல்லோ ரையும் மதிக்கும் பண்பு எங்களுக்கு என்றும் உண்டு' என்று உணர்த்திவிட்டார். ராஜீவ் கொலை யாளிகள் என்பதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு உதவ காங்கிரஸ் அரசு தயங்குகிறது என்ற வீண் பழியை சோனியா குடும்பத்தின் மீது இனி போட முடியாது. இந்த சந்திப்பால் காங்கிரஸ் கட்சியின் இமேஜ் உயர்ந்திருப்பது உண்மை.


இந்நிலையில், ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்கத் தயார் என்று அர்ஜுன் சிங் முன்மொழிய, அதை சரத்பவார், கருணாநிதி எல்லாம் வழிமொழிந்தனர். ஆனால், சோனியா வேறு மாதிரி யோசித்தார். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்றால் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மரியாதை இல்லாமல் போய் விடுமே... தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கும்போது இப்போதே ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றெல்லாம் யோசித்து இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார் சோனியா.
ராகுல் காந்தி குறித்த சர்ச்சை எழுந்ததும் ஜெயந்தி நடராஜன் ஒரு அறிக்கை கொடுத் தார். அதில் சோனியா ஒப்புதலுடன் எழுதப் பட்ட முக்கியமான வாசகம் - 'துதிபாடி களிடமிருந்து சோனியா, ராகுல் இருவரும் விலகி இருக்க விரும்புகிறார்கள்' என்பதுதான்.

எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம் என்பதுதான் சோனியா வின் நிலைப்பாடு.
பிரியங்கா-நளினி சந்திப்பு, ராகுல் காந்தி விஷயம் இரண்டையும் சோனியா சரியான தருணத்தில் பயன்படுத்துவார் என்கிறார்கள்.

அத்வானி, மாயாவதி எல்லாம் பதில் சொல்லு மளவுக்கு ராகுல் காந்தி வளர்ந்துவிட்டார். இப்போது ராகுல் காந்தியை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யச் சொல்லியிருக்கிறார் சோனியா. பாதுகாப்பு வளையத்தை உடைத்துத் தொண்டர்களுடன் நெருக்கமாகி தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதுதான் திட்டம்.
எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தும்போது பிரியங்கா, ராகுலின் இமேஜைக் கேடயமாகப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது சோனியாவின் திட்டம். இவருடைய மூவ்கள் அத்வானி முகாமை அதிர வைத்திருக்கிறது என்பதும் நிஜம்.


விரைவில் விடுதலையா?
ராஜீவ் கொலையாளிகளில் சரளமாக ஆங்கிலத்தில் பேச, எழுதத் தெரிந்தவர் நளினி ஒருவர்தான். சோனியாவுக்கு நளினி எழுதிய பல கடிதங்களுக்குப் பலன் கிடைத்தது. தூக்கு தண்டனைக் கைதியான நளினியை ஆயுள்தண்டனைக் கைதியாக்க சோனியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாமே நளினியின் கடிதங்களுக்குக் கிடைத்த பலன்தான். கடந்த ஜனவரி மாதம் சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்க, அப்போது நளினி அவர் உடல் நலம் தேற உருக்கமாக கடிதம் எழுதினாராம். இந்தக் கடிதங்கள் எல்லாம் சோனியாவின் கவனத்துக்கு வந்தன. அடுத்து, நளினி தன்னுடைய குழந்தையை காண முடியாமல் இருப்பது பற்றியும் சோனியாவுக்கு நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார். பதினேழு வயதாகப்போகும் தன் மகள் இன்னும் சில வருடங்களில் திருமண வயதை எட்ட இருப்பது உட்பட பல விஷயங்களைத் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம் நளினி. அடுத்து தன்னைப் போன்று தன்னுடைய கணவர் முருகன் மற்றும் சாந்தன், பேரறிவாளன் போன்றவர்களுக்கும் தூக்கு தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கக் கோரியும் நளினி கடிதமெழுதியிருக்கிறாராம். இந்தப் பின்னணியில்தான் பிரியங்கா வேலூர் சென்று தன் தந்தையின் கொலையைப் பற்றியும், கொலையாளிகளின் மனதையும் அறிய முற்பட்டிருக்கிறார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
ராஜீவ் கொலை வழக்கில் இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் நான்கு பேர்களுக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதில் சோனியாவின் வேண்டுகோளை அடுத்து நளினியின் தூக்கு தண்டனை - ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றவர்களுக்குத் தூக்கு தண்டனை உறுதியாக, அவர்கள் ஜனாதிபதிக்குக் கருணை மனுக் கொடுத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஜனாதிபதிகள் மாறியும் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சில ஆளுங்கட்சிப் பிரமுகர்களும் இந்தக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க முயற்சி செய்வதாகவும் தகவல். ஆனால், முதல்வர் தலையிட மறுக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதீபா பாட்டீல் சோனியாவின் பேச்சுக்கு செவிசாய்ப்பவர் என்பதால் இப்படியரு முயற்சி எடுக்கிறார்களாம்.

இதே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை கொடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழத் துவங்கியிருக்கின்றன. ஆனால், இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி இவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து, 'இவர்களை விடுதலை செய்யும்பட்சத்தில் மீண்டும் புலிகளுடன் சேர்ந்து சதித்திட்டங்களில் ஈடுபடுவார்கள்' என்று சொல்லியிருக்கிறது.

விகடன்