பொலிஸ் வாகன சோதனையில் சிக்கிய இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்வதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் பெங்களூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து தமிழ் நாட்டில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தீவிர வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை, கண்காணிப்பை பலப்படுத்துதல் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை நகர பொலிஸ் ஆணையர் சேகர் உத்தரவின் பேரில், பொலிஸார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டனர். அந்தக் காரில் 6 பேர் இருந்தனர்.
அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த 6 பேரும் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் செல்வம், பிரதீபம், அருள்தாஸ் ஆகிய 3 பேரும் புழலையடுத்த காவாங்கரை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தினேஷ்குமார், சால் ஆகிய 2 பேர் செங்குன்றத்தையடுத்த வடகரை என்னும் இடத்தில் வசித்து வருபவரென்பதும் தகவல் விசாரணையில் வெளியானது. இவர்கள் 5 பேரும் அண்ணாநகர் பகுதியிலுள்ள திருமங்கலம் வசந்தம் கொலனியில் வசிக்கும் தனுஷன் என்ற தங்களது நண்பரை அந்தக் காரில் அழைத்துக் கொண்டு வந்ததாக பொலிஸிடம் தெரிவித்தனர்.
ஒரே காரில் இரவு நேரத்தில் எங்கே செல்கிறீர்கள் என்று பொலிஸார் கேட்ட போது, நண்பர்களாகிய நாங்கள், அடிக்கடி இப்படிக் காரில் ஜாலியாக சுற்றுவது வழக்கம் என்று தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த விபரங்களில் திருப்தியடையாத பொலிஸார் சந்தேகப்பட்டு காரை தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு நம்பர் தகடு கிடைத்தது. அதில் வேறு ஒரு பதிவு எண் இருந்ததை கண்ட பொலிஸார் அது பற்றி கேட்டனர். தங்களது காரில் இருந்த நம்பர் தகடு பழையதாகி உரிந்துவிட்டதால் புதிய தகட்டை பொருத்த இதை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினார்கள். காருக்குள் கிடந்த நம்பர் தகட்டை சோதனையிட்டதில் அது வேறு வாகனத்தின் பதிவு எண் என்பது தெரிந்தது.
இதையடுத்து பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. உடனடியாக அவர்கள் 6 பேரையும் கைது செய்த பொலிஸார் விடிய விடிய அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி, யார் யாருடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பதை சோதனையிட்டனர். இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா, ஆயுத விநியோகத்தில் சம்பந்தப்பட்டவர்களா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அகதிகள் முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் அங்கிருந்து இரவு நேரத்தில் எப்படி வெளியேறினார்கள் என்பது பற்றியும் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Showing posts with label Tamil Nadu. Show all posts
Showing posts with label Tamil Nadu. Show all posts
Sunday, August 10, 2008
சென்னையில் "பரோட்டா' மாஸ்டராக வேலைசெய்த இலங்கையர் விடுதலைப் புலியா?
போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து சென்னை வந்து கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கியிருந்த இலங்கை நபரை பொலிஸார் கைதுசெய்தனர். கைதானவர் விடுதலைப் புலிகளின் கூட்டாளியா என்று விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னை நகரில் உள்ள விடுதிகள் மற்றும் வாகனங்களை சோதனை செய்யும்படி பொலிஸ் ஆணையாளர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அயனாவரம் சாமி பக்தன் தெருவில் பி.கே.எஸ்.மேன்சனில் வெளியாட்கள் யாராவது தங்கியுள்ளார்களா என்று தலைமைச் செயலகப் பொலிஸார் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த சூரியகுமார் என்பவரிடம் விசாரித்ததில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் சென்னையில் கடந்த நான்காண்டுகளாக தங்கியதால் முகவரி சரியாகத் தெரியாது என்று கூறியது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபோல் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பொலிஸாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.
தீவிரமாக விசாரித்ததில் "நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து முகவர் மூலம் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்குப் சென்றேன். அங்கு மூன்று மாதம் கழித்து மலேசியா சென்றேன். மலேசியா முகாமில் என்னை அடைத்து வைத்தனர். அங்கிருந்து கடந்த 2001 ஆம் ஆண்டு தப்பி போலிக் கடவுச்சீட்டு மூலம் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியுள்ளேன். சென்ட்ரல் மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஹோட்டல்களில் சிறிது நாட்கள் பணிபுரிந்தேன். பின்னர் பார்டர் தோட்டம் முருகவிலாஸ் ஹோட்டலில் ஓராண்டாக பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறேன்' என்றார்.
சூரியகுமாரை பொலிஸார் கைதுசெய்து சென்னையில் தங்கியிருந்து சதிவேலைகளில் ஈடுபட்டாரா என்றும் விடுதலைப் புலிகளின் கூட்டாளியாக செயல்பட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னை நகரில் உள்ள விடுதிகள் மற்றும் வாகனங்களை சோதனை செய்யும்படி பொலிஸ் ஆணையாளர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அயனாவரம் சாமி பக்தன் தெருவில் பி.கே.எஸ்.மேன்சனில் வெளியாட்கள் யாராவது தங்கியுள்ளார்களா என்று தலைமைச் செயலகப் பொலிஸார் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த சூரியகுமார் என்பவரிடம் விசாரித்ததில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் சென்னையில் கடந்த நான்காண்டுகளாக தங்கியதால் முகவரி சரியாகத் தெரியாது என்று கூறியது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபோல் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பொலிஸாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.
தீவிரமாக விசாரித்ததில் "நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து முகவர் மூலம் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்குப் சென்றேன். அங்கு மூன்று மாதம் கழித்து மலேசியா சென்றேன். மலேசியா முகாமில் என்னை அடைத்து வைத்தனர். அங்கிருந்து கடந்த 2001 ஆம் ஆண்டு தப்பி போலிக் கடவுச்சீட்டு மூலம் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியுள்ளேன். சென்ட்ரல் மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஹோட்டல்களில் சிறிது நாட்கள் பணிபுரிந்தேன். பின்னர் பார்டர் தோட்டம் முருகவிலாஸ் ஹோட்டலில் ஓராண்டாக பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறேன்' என்றார்.
சூரியகுமாரை பொலிஸார் கைதுசெய்து சென்னையில் தங்கியிருந்து சதிவேலைகளில் ஈடுபட்டாரா என்றும் விடுதலைப் புலிகளின் கூட்டாளியாக செயல்பட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புலிகளின் ஊடுருவலைத் தடுக்க 21 தீவுகளில் தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி: சென்னை திருமங்கலத்தில் சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெடிபொருளுக்கான மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் வழியாக அவர்கள் இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடலோர பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
வனத்துறையினரும், கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து தூத்துக்குடி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள 21 தீவுகளை கண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அகதிகள் முகாம்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அகதிகள் பயன்படுத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மாவட்டம் முழுவதும் கியூ பிரிவு மற்றும் மத்திய, மாநில உளவு துறையினர் உஷார்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதுதவிர மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வனத்துறையினரும், கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து தூத்துக்குடி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள 21 தீவுகளை கண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அகதிகள் முகாம்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அகதிகள் பயன்படுத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மாவட்டம் முழுவதும் கியூ பிரிவு மற்றும் மத்திய, மாநில உளவு துறையினர் உஷார்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதுதவிர மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Thursday, August 7, 2008
சென்னையில் கைதான இருவரும் புலிகளால் பொருட் கொள்வனவுக்காக அனுப்பப்பட்டார்களாம்

சென்னையில் அண்மையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் யாழ்.இளைஞர்கள் இருவரும் அவ்வியக்கத்தினரால் பொருட்கொள்வனவுக்காக அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அகதிகள் போன்று தமிழகம் வந்த இவர்கள் பொலிஸாரின் சந்தேகத்திற்குட்படாத வகையில் வீடொன்றை வாடகைக்கெடுத்து தங்குவதற்காக இலங்கை தகதிகள் முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரை மனைவி போல் பாசாங்கு செய்து தம்முடன் தங்க வைத்திருந்ததõகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது பொலிஸார் குறித்த பெண்ணைத்தேடி வருகின்றனர். சென்னையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அமலன் பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் வாக்குமூலம் வருமாறு: நான் கடல் புலிகள் பிரிவில் பணியாற்றினேன். தற்போது போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஏராளமான பொருட்களுக்கு தேவையேற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் ஆயுத தளபாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம்.
கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியன்று கள்ளத்தோணி மூலம் நான் இராமேஸ்வரத்தை வந்தடைந்தேன். பின்னர் அங்கிருந்து சென்னை கே.கே. நகரையடைந்தேன்.அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன். பின்னர் உமாரமணன் என்பவர் சென்னை வந்து இருவரும் தனியான வீடொன்றில் தங்கி இருப்போம் எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் வீடு தேடினோம். எங்கள் மீது சந்தேகப்பட்டு எவரும் வீடு வாடகைக்கு விட வில்லை. எனவே அகதிகள் முகாமில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை என்னுடைய மனைவி போல் நடிக்க வைத்து அந்த பெண்மணி கல்லூரியில் படிப்பதாக கூறி ஒருவாறாக திருமங்கலத்தில் வீடொன்று கிடைத்தது. இதனையடுத்து மனைவியாக நடித்த இளம் பெண்ணை அனுப்பி வைத்து விட்டோம்.
அதைத் தொடர்ந்து ஒருநாள் ஒருவர் இரசாயணப் பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அவை மாதிரிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பரிசோதனை செய்து அவை தரமான பொருட்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பெரிய அளவில் கொள்வனவு செய்து தருவதாகவும் கூறினார்கள். குறிப்பாக அமோனியம் நைட்ரேட்டை சென்னையில் உள்ள ஆய்வுகூடத்தில் சோதனை நடத்தி அதன் தரத்தை பரிசோதிக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள்.
பின்னர் எமது செலவுக்காக ரூ.1 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. அந்த பணத்தில் வீட்டுமுற்பணமாக ரூ.20 ஆயிரம் மற்றும் எங்கள் செலவுகளுக்காக ரூ.23 ஆயிரம் இருந்தது. அதை பொலிஸார் பறிமுதல் செய்து விட்டனர்.6 மாதம் சென்னையில் தங்கி இருக்க எங்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அதன்பிறகு நாங்கள் இருவரும் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தோம். தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள். நாங்கள் சென்னையில் தங்கி இருக்கும்போது இங்குள்ள சகோதர மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்யக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் எங்களை அனுப்பி வைத்தார்கள்.
எங்கள் நோக்கம் இங்கிருந்து பொருட்களை கொண்டு செல்வதுதான். வேறு எந்த தவறான நோக்கத்தோடும் நாங்கள் இங்கு வரவில்லை.இவ்வாறு அமலன் தெரிவித்தார்.தற்போது அமலனின் மனைவியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடித்த பெண் குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர். அகதிகள் போர்வையில் சென்னை நகருக்குள் மேலும் விடுதலைப்புலிகள் யாராவது நுழைந்து இருக்கிறார்களா? என்பது குறித்தும் கே.கே. நகர் அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
அகதிகள் என்ற பெயரில் புலிகள் ஊடுருவல்
இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினையால் 2006ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 22,350 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இவர்களில் 42 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து புலிகள் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் பெரும்பாலான அகதிகள் கூலித் தொழிலாளிகள் எனக் கூறுகின்ற போதிலும் படகொன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வரை செலுத்தி தமிழகம் வருகின்றனர். இவர்களால் எவ்வாறு இவ்வளவு பணத்தை செலுத்த முடிந்தது என்ற கேள்விக்கு இது வரையில் பதிலில்லை. அதேவேளை தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்கு திரும்பிச் செல்லும் அகதிகளை அதிகாரிகள் காரணம் கேட்டு தடுத்து நிறுத்துவதும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அண்மையில் முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள் தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாக உளவுப் பிரிவு பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இத்தகைய பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் பல அகதி முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கு பொருட்களை கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஆயுதப் பயிற்சி பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என உளவுப் பிரிவினர் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர் இது இராமநாதபுரம் கடந்த சில நாட்களாக புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் சிலர் இலங்கைக்கு பொருட்கள் கடத்தியது தொடர்பில் கைதான சம்பவத்தையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது தமிழகத்திற்கு அகதிகள் என்ற போர்வையில் வந்தவர்கள் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து உளவுப் பிரிவு பொலிஸார் அகதிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Wednesday, August 6, 2008
புலிகளுக்கு எதிரான வேட்டை தமிழகத்தில் – பலர்கைது - கூறுகிறது கியூப் பிரிவு
சென்னையில் விடுதலைப்புலிகளின் முகவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு கடத்த முயன்ற தொலைதொடர்பு கருவிகளை காவற்துறையினர் அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகிறன. இதனால் விடுதலைப்புலிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்லாதவாறு தடுக்கும் பணியில் கியூ பிரிவு காவற்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கடத்தல் முகவர்களை கியூ பிரிவினர் கைதுசெய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து டீசல் மற்றும் அலுமினிய கட்டிகள் போன்ற பொருட்கள் விடுதலைப்புலிகளுக்கு அதிகமாக கடத்தி செலலப்படுகின்றன. இவ்வாறு பொருட்களை கடத்திச் செல்வதற்கு விடுதலைப்புலிகளே சில நேரம் தமிழகத்திற்கு நேரடியாக உள் நுழைவதாகவும் விடுதலைப்புலிகளின் கடத்தல் முகவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர் எனவும் கியூ பிரிவினர் தெரிவித்துளளனர். கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் முக்கிய நபரான தம்பி அண்ணா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக புதிய வியூகம் வகுக்க அவர் சென்னை வந்த போது கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் நூற்றுக்கணக்கான கடத்தல் முகவர்களை தேடி அவர்களை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடத்தல் முகவர்கள் தங்கி இருப்பதாக கியு_ பிரிவினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதிகளை கண்காணிக்கும்படி தமிழக காவற்துறை ஆணையர். கே.பி.ஜெயின் உத்தரவிட்டார். இதனையடுத்து கியூ பிரிவினர் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளை மாறு வேடத்தில் கண்காணித்தனர். மடிப்பாக்கத்தில் உள்ள இலத்திரனியல் கடை ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான தொலை தொடர்பு தகவல் கருவிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை கண்காணிப்பில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது, செல்போன் மூலம் மோட்டார்களை இயக்கும் ஸ்டார்ட்டர் கருவியும், 50 கிலோ மீட்டர் தூரம் பேசக்கூடிய சக்திவாய்ந்த டெலிபோன் இணைப்பு கருவிகள் 10 (பவர் ஸ்டேசன், நானோ ஸ்டேசன்), இன்டர்நெட் போன் அடாப்டர் 9 போன்ற கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பொருட்கள் பிரான்சில் இருந்து கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் முகவரான 31 வயதான செல்வம் என்ற செல்வக்குமாரையும் கியூ பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவரது கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவரிடம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் ஜீவன் என்ற இனியன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்ததுள்ளது. இலங்கையில் கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த தனக்கு விடுதலைப்புலி இயக்கத்தோடு எனக்கு தொடர்பு இல்லை எனினும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களோடு பழக்கம் இருந்தது எனவும் செல்வம் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் உளவு பிரிவைச் சேர்ந்த இனியன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அவர்; தமது ஊரைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் தனக்கு நண்பராக விளங்கினார் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பேசிய இனியவன் விடுதலைப்புலிகளுக்காக தொலைதொடர்பு தகவல் சாதனங்கள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதை சென்னை மடிப்பாக்கத்தில் இலத்திரனியல் கடை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை வாங்கி இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படியும் இனியவன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் செல்வம் கூறியுள்ளார். கிளிநொச்சியில் தனது பெற்றோர் உள்ளதாகவும் சில காரணங்களுக்காக தான் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேலையை செய்து முடித்தால் தனக்கு பெரிய அளவில் பணம் தருவதாகவும் இனியவன் கூறி இருந்தாகவும் எனினும் பொருட்களை அனுப்புவதற்கு முன்னர் காவற்துறையினர் தன்னை கைது செய்து விட்டனர் என செல்வம் என்ற செல்வக்குமார் காவற்துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பொருட்கள் பிரான்சில் இருந்து கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் முகவரான 31 வயதான செல்வம் என்ற செல்வக்குமாரையும் கியூ பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவரது கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவரிடம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் ஜீவன் என்ற இனியன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்ததுள்ளது. இலங்கையில் கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த தனக்கு விடுதலைப்புலி இயக்கத்தோடு எனக்கு தொடர்பு இல்லை எனினும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களோடு பழக்கம் இருந்தது எனவும் செல்வம் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் உளவு பிரிவைச் சேர்ந்த இனியன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அவர்; தமது ஊரைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் தனக்கு நண்பராக விளங்கினார் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பேசிய இனியவன் விடுதலைப்புலிகளுக்காக தொலைதொடர்பு தகவல் சாதனங்கள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதை சென்னை மடிப்பாக்கத்தில் இலத்திரனியல் கடை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை வாங்கி இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படியும் இனியவன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் செல்வம் கூறியுள்ளார். கிளிநொச்சியில் தனது பெற்றோர் உள்ளதாகவும் சில காரணங்களுக்காக தான் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேலையை செய்து முடித்தால் தனக்கு பெரிய அளவில் பணம் தருவதாகவும் இனியவன் கூறி இருந்தாகவும் எனினும் பொருட்களை அனுப்புவதற்கு முன்னர் காவற்துறையினர் தன்னை கைது செய்து விட்டனர் என செல்வம் என்ற செல்வக்குமார் காவற்துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
Tuesday, August 5, 2008
அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவல் ஏன்?: தீவிரமாக கண்காணிக்க உளவு போலீசார் முடிவு
இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளதால், இவர்கள் புலிகள் இயக்கத்தில் தொடர்புடையவர்களா? என்ற குழப்பம் கியூ பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அகதிகள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணிக்க உளவுப் போலீசார் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்து வரும் உச்சக்கட்டப் போரினால், வாழ வழியில்லாத நிலையில் ஏராளமான அகதிகள் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். 2006ம் ஆண்டு முதல் இதுவரை 22 ஆயிரத்து 350 அகதிகள் வந்துள்ளனர். இவர்களில் அகதிகள் போர்வையில் வந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த 42 பேரை விசாரணை மூலம் கியூ பிரிவு போலீசார் கண்டறிந்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு ஏற்கனவே மாற்றியுள்ளனர்.
அகதிகள் தமிழகம் வரும்போது கட்டணமாக அதிகபட்சமாகத் தலா ரூ.25 ஆயிரம் வரை இலங்கைப் படகோட்டிகளுக்குக் கொடுக்கின்றனர். ஒரு படகில் கூடுதலாக 15 அகதிகள் வரை வந்து கரையிறங்குகின்றனர். இலங்கையில் கூலி வேலை செய்து வருவதாகக் கூறும் இவர்கள், படகுக் கட்டணமாக ரூ. பல ஆயிரங்களைச் சேமித்தது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. அதே போன்று, தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் அகதிகளை, அதிகாரிகள் காரணம் கேட்டுத் தடுத்து நிறுத்துவதும் இல்லை.
தமிழக முகாம்களில் அகதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அகதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற புலிகள் இலங்கைக்குப் பொருட்களை சர்வ சாதாரணமாகக் கடத்திச் செல்கின்றனர். பிடிபடும் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் அகதிகள் என்பது தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த உளவுப் பிரிவினர் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
கடந்த சில நாட்களுக்கு முன் பிடிபட்ட அகதி நவீன் என்பவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்தி வருவதற்காக தமிழகத்துக்கு அகதியாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருடன் தொடர்புடைய அகதிகள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள், தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது உளவுப் பிரிவுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இலங்கை ராணுவம் தாக்கினால் எப்படித் தற்காத்துக் கொள்வது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படித் தப்புவது போன்ற பயிற்சிகளை புலிகள் அளித்துள்ளதாக கூறப்பட்டபோதும். இதில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பயிற்சி பெற்ற இளைஞர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அகதிகளாகத் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களா? என்ற குழப்பம் உளவுப் பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்குப் பொருட்களைக் கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்றும் உளவுப் பிரிவினர், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அகதிகள் தமிழகம் வரும்போது கட்டணமாக அதிகபட்சமாகத் தலா ரூ.25 ஆயிரம் வரை இலங்கைப் படகோட்டிகளுக்குக் கொடுக்கின்றனர். ஒரு படகில் கூடுதலாக 15 அகதிகள் வரை வந்து கரையிறங்குகின்றனர். இலங்கையில் கூலி வேலை செய்து வருவதாகக் கூறும் இவர்கள், படகுக் கட்டணமாக ரூ. பல ஆயிரங்களைச் சேமித்தது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. அதே போன்று, தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் அகதிகளை, அதிகாரிகள் காரணம் கேட்டுத் தடுத்து நிறுத்துவதும் இல்லை.
தமிழக முகாம்களில் அகதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அகதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற புலிகள் இலங்கைக்குப் பொருட்களை சர்வ சாதாரணமாகக் கடத்திச் செல்கின்றனர். பிடிபடும் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் அகதிகள் என்பது தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த உளவுப் பிரிவினர் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
கடந்த சில நாட்களுக்கு முன் பிடிபட்ட அகதி நவீன் என்பவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்தி வருவதற்காக தமிழகத்துக்கு அகதியாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருடன் தொடர்புடைய அகதிகள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள், தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது உளவுப் பிரிவுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இலங்கை ராணுவம் தாக்கினால் எப்படித் தற்காத்துக் கொள்வது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படித் தப்புவது போன்ற பயிற்சிகளை புலிகள் அளித்துள்ளதாக கூறப்பட்டபோதும். இதில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பயிற்சி பெற்ற இளைஞர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அகதிகளாகத் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களா? என்ற குழப்பம் உளவுப் பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்குப் பொருட்களைக் கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்றும் உளவுப் பிரிவினர், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
Monday, August 4, 2008
புலிகளுக்கு 54 வீத ஆதரவுள்ள தமிழகத்தில் நடந்த 'மாபெரும்" பேரணி
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக்கைக்கு ஐம்பத்திநான்கு வீதமான தமிழக மக்கள் ஆதரவு என்ற ஆனந்தவிகடனின் கருத்துக்கணிப்பு வந்த அந்த சஞ்சிகையின் விற்பனை முடிந்துவிடாத நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு ஈழ ஆதரவு பேரணியில் கலந்துகொண்டவர்கள் தொகை வெறும் முன்னூறைத் தாண்டாது. அதிலும் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தவர்கள் சுமார் நூறு பேர். சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய மத்திய அரசைக்கண்டித்து அனைத்துக்கட்சி, அனைத்து தமிழ்அமைப்புக்கள் சார்பில் இந்தப் போரணி நடாத்தப்பட்டிருந்தது.
முன்னதாக, கடந்த மாதம் 11 ஆம் நாள் சென்னையில் அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழ் அமைப்புக்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சென்னையில் இந்திய அரசைக் கண்டித்துப் ஆகஸ்ட் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் பேரணி நடைபெறவிருந்த நாளுக்கு முதல் நாள் சனி இரவு, பேரணி தொடங்குவதாக இருந்த சென்னை பெரியார் சிலைக்குப் பதிலாக சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என அறிவித்தார்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, சுவரொட்டிகள் மூலமாக பரப்புரைகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த திடீர் மாற்றத்தினை காவல்துறை அறிவித்தது அநியாயமானதுதான். அவசர அவசரமாக மீண்டும் அனைவருக்கும் செய்திகள் பரிமாறப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியிலிருந்தே சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியின் முன் பெருந்திரளாக அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் கூடத் தொடங்கினர்.
செய்தி அறியாத பல தொண்டர்கள் பெரியார் சிலைக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து சேப்பாக்கத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காகப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.சரியாக பிற்பகல் 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு முழக்கங்கள் எழுப்ப, தொடர்ந்து தலைவர்களும் குழுமியிருந்த தொண்டர்களும் உணர்ச்சியோடு முழக்கம் எழுப்பினர்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் புலிகளிடம் மாத சம்பளம்பெற்றுவருபவர்கள். அவர்கள் தமக்கு கிடைக்கின்ற சம்பளத்திற்காக வேலைசெய்வதால் இதுபோன்ற பேரணிகளில் கலந்துகொண்டே ஆகவேண்டும். மற்றயவர்கள் அப்பாவிகள். தமிழ் உணர்வாளர்கள். பேரணியிலும் கூட்டத்திலும் கலந்துகொண்ட இந்த தமிழர்களிடத்தில்தான் ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடாத்தியதோ தெரியவில்லை.
தேணி இணையம்
முன்னதாக, கடந்த மாதம் 11 ஆம் நாள் சென்னையில் அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழ் அமைப்புக்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சென்னையில் இந்திய அரசைக் கண்டித்துப் ஆகஸ்ட் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் பேரணி நடைபெறவிருந்த நாளுக்கு முதல் நாள் சனி இரவு, பேரணி தொடங்குவதாக இருந்த சென்னை பெரியார் சிலைக்குப் பதிலாக சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என அறிவித்தார்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, சுவரொட்டிகள் மூலமாக பரப்புரைகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த திடீர் மாற்றத்தினை காவல்துறை அறிவித்தது அநியாயமானதுதான். அவசர அவசரமாக மீண்டும் அனைவருக்கும் செய்திகள் பரிமாறப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியிலிருந்தே சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியின் முன் பெருந்திரளாக அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் கூடத் தொடங்கினர்.
செய்தி அறியாத பல தொண்டர்கள் பெரியார் சிலைக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து சேப்பாக்கத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காகப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.சரியாக பிற்பகல் 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு முழக்கங்கள் எழுப்ப, தொடர்ந்து தலைவர்களும் குழுமியிருந்த தொண்டர்களும் உணர்ச்சியோடு முழக்கம் எழுப்பினர்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் புலிகளிடம் மாத சம்பளம்பெற்றுவருபவர்கள். அவர்கள் தமக்கு கிடைக்கின்ற சம்பளத்திற்காக வேலைசெய்வதால் இதுபோன்ற பேரணிகளில் கலந்துகொண்டே ஆகவேண்டும். மற்றயவர்கள் அப்பாவிகள். தமிழ் உணர்வாளர்கள். பேரணியிலும் கூட்டத்திலும் கலந்துகொண்ட இந்த தமிழர்களிடத்தில்தான் ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடாத்தியதோ தெரியவில்லை.
தேணி இணையம்
Labels:
Tamil Nadu,
Tamil Tigers,
அப்பாவி ஆடுகள்,
இதுதான் ஆதரவா
Thursday, July 31, 2008
Four Sri Lankans arrested in TN with contraband
Four Sri Lankans were arrested in Tamil Nadu, India for allegedly attempting to smuggle several contraband items, including a Global Positioning System (GPS) and a satellite phone, worth 50 lakhs rupees to Sri Lanka, police said.
Saturday, May 31, 2008
திருச்சியில் 17,0000 டெட்டொனேட்டர்ஸ் காணாமல் போயுள்ளன
திருச்சியில் உள்ள Warehouse இல் இருந்து 17,000 detonators கானாமல் போயுள்ளதாக தமிழ்நாட்டு பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இவற்றை இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகளே களவாடியுள்ளர்கள் என்று திட்டவட்டமாக நம்புகின்றார்கள்.
LTTE would have stolen 17,000 detonators from a Tamil Nadu warehouse- TN Police
(By Walter Jayawardhana)
The Police in Tamil Nadu has confirmed that the 17,000 detonators missing from a Trichy Warehouse would have been stolen by the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
The LTTE terrorists is facing the brunt of an offensive of the armed forces of Sri Lanka and is allegedly increased its offences against civilians in the South of the country.
Around 17,000 detonators were reported from a godown in Karur near the Tamil Nadu city of Trichy and the Tamil Nadu police ruled out the Indian terrorists, Naxals, as the culprits behind the theft and pointed their finger at the LTTE terrorists.
The incident once again raised fears in the Indian security circles that the terrorist group could be still using neighbouring Tamil Nadu as their weapons supply base despite all sorts of precautions taken by both governments.
The Director General of Police in Tamil Nadu, K.P. Jain told an Indian television station, "Definitely there is a security concern. That is why we have procedures to check storage facilities and other shops, to ensure that they are not given out to wrong people. But still these cases happen. We do not suspect Naxals. But it could be for the LTTE."
LTTE would have stolen 17,000 detonators from a Tamil Nadu warehouse- TN Police
(By Walter Jayawardhana)
The Police in Tamil Nadu has confirmed that the 17,000 detonators missing from a Trichy Warehouse would have been stolen by the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
The LTTE terrorists is facing the brunt of an offensive of the armed forces of Sri Lanka and is allegedly increased its offences against civilians in the South of the country.
Around 17,000 detonators were reported from a godown in Karur near the Tamil Nadu city of Trichy and the Tamil Nadu police ruled out the Indian terrorists, Naxals, as the culprits behind the theft and pointed their finger at the LTTE terrorists.
The incident once again raised fears in the Indian security circles that the terrorist group could be still using neighbouring Tamil Nadu as their weapons supply base despite all sorts of precautions taken by both governments.
The Director General of Police in Tamil Nadu, K.P. Jain told an Indian television station, "Definitely there is a security concern. That is why we have procedures to check storage facilities and other shops, to ensure that they are not given out to wrong people. But still these cases happen. We do not suspect Naxals. But it could be for the LTTE."
Subscribe to:
Posts (Atom)