கிழக்கில் இருந்து விடுதலைப்புலிகள் முற்றாக விரட்டி அடிக்கப்படும் வரை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று உறுதி பூண்டுள்ளார்.
Sinnah Jeyam reveals of Pillaiyan’s Vow – not to marry until Tigers are chased out of East
Mon, 2008-06-09 04:42
Colombo, 09 June, (Asiantribune.com): In an interview with ‘Asian Tribune,’ Nagalingham Thiraviyam, also called Sinnah Jeyam, said that Chanthirakanthan Sivanesathurai, alias Pillaiyan vowed not to marry and settle in life, until the Liberation Tigers of Tamil Eelam is chased out of the East.
Sinnah Jeyam, one of the senior commanders of the Tamil Makkal Viduthalai Pulikal and also one of the three elected members of the East Provincial Council from the Batticaloa district, when contacted said that it was Chanthirakanthan who was mainly responsible for organizing and building up the Tamil Makkal Viduthalai Pulikal as a democratic organization.
When asked now that the East has been liberated and Tigers have been chased out, and is it not the right time for Chanthirakanthan’s marriage? Sinnah Jeyan said that after the elections we are yet not settled down and once everything is OK then we will look for a suitable bride for Chanthirakanthan.
Nagalingham Thiraviyam popularly known as Sinna Jeyam, 36 Years old, originally from Panichankerny Vaharai, married and his wife is from Valaichenai. “My mother is from Valaichenai but my father is from Panichankerni and that is why I say, I am from Panichchankerny,” he explained.
Given below the excerpts of the interview with Sinnah Jeyam of the TMVP:
Asian Tribune : How long you are in the Tamil outfit commonly called by the Tamils as ‘Movement’?
Sinna Jeyam: I joined the Liberation Tigers of Tamil Eelam in the year 1988. Later, on 2004 March 04, I left the LTTE and joined the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP).
Asian Tribune: At that time there was no TMVP?
Sinna Jeyam: TMVP is the outgrowth of the group of LTTE rebels who left the Vanni Tigers in March 2004.
Asian Tribune: You say that you joined the LTTE in 1988. Then you are also a child soldier recruited by the LTTE, like Pillaiyan?
Sinna Jeyam: Yes, I joined the LTTE when I was just 16 years old.
Asian Tribune: What were you in the LTTE? The position you held?
Sinna Jeyam: I was in charge of the Visalakan Battalions in the East
Asian Tribune: Gives some detail about this Visalakan Battalion?
Sinna Jeyam: There was an elder brother (colleague) by the name of Vislakan and he was a very good fighter from the East. After he martyred, we organized a battalion in his name to fondly remember his bravery. When we go to Vanni we were in the Jeyanthan Brigade.
Asian Tribune: OK after you joining the TMVP what position you held in the outfit?
Sinna Jeyam: I was a commander of the TMVP attacking force.
Asian Tribune: I now remember that after April 2007, you left the outfit and stayed in Trincomalee along with Pillaiyan, Commander Makkan, Uruththira and others. Why?
Sinna Jeyam: We were compelled to leave temporarily to Trincomalee as there was a storm in the tea cup.
Asian Tribune : What were the factors that contributed to TMVP group’s defeat in Trincomalee district, in the last Provincial Council election?
Sinna Jeyam: There were so many factors that led to the defeat in Trincomalee. We are still analyzing it. May be our selection of the candidates too might have been one reason. We must have had our group under one of our regular members and for him to have led the team. Furthermore, in Trincomalee we have failed to conduct a proper propaganda campaign.
Asian Tribune: We observed that even in Batticaloa your election strategy was to concentrate only on the three candidates and not on other candidates. Your comment?
Sinna Jeyam: In the Provincial Council election in the Batticaloa district, I was contesting in the Kalkudah electorate. In our arrangements, we had three candidates for Kalkudah and three for Batticaloa, and for Paddiruppu three candidates. In Paddiruppu there were 82,000 Tamil votes. In the meantime for the Batticaloa town there were 120,000 votes and for Kalkuddah electorate there were 64,000 votes. For example, in case in Kalkuddah if the 64,000 votes voted equally to the three candidates contested in the Kalkuddah electorate, then all the three candidates would have been got elected. Similarly we thought that if the voters in the other two electorates would have voted equally to the three candidates of those two electorates, all the nine candidates ours contested in the Batticaloa district would have been elected.
Asian Tribune: There is an allegation that Sri Lanka Government is remote controlling the TMVP and the Chief Minister. How far it is correct?
Sinna Jeyam: It is not a correct assessment. We cannot accept that allegation. It must be clearly remembered that in the Provincial Council election TMVP contested as a partner of the United Peoples Freedom Alliance. This UPFA is the ruling party of the country. Therefore TMVP is today a partner of this Government.
Decisions regarding matters are taken up by the UPFA leadership after conducting discussions. UPFA leaders such as Basil Rakjapakse, Susil Premayantha and others always consult us before they take any decisions. This is the coalition culture. These are all behind the scene activities. As a coalition partner in the ruling party of this country, we will not be in a position to come up publicly with details of those discussions. This is our position.
I still remember when I was in the LTTE as an armed cadre; I have to carry out orders of my immediate superiors. My views were never heard by the leadership. But when we started the TMVP and started embracing the mainstream democratic political system, for the first time we started discussing in groups as well as in committees before taking any final decisions. The issue of ordering and remote controlling was over.
Today we practice democratic political system. Unlike the days in the LTTE, where we were remote controlled by V. Prabakaran, today we are not remote controlled by anyone. We meet, decide, come to a conclusion, normally a decision with consensus is taken and then act accordingly.
Asian Tribune: There is a rumor going on that there are some misunderstanding existing between you and Pilliaiyan. Your comments?
Sinna Jeyam: I wish to make it very clear that at any given moment there want be any misunderstandings between us. At the time, you may remember that there was a move to isolate Pillaiyan in the early part of 2007 and actions were taken to get rid of him from the TMVP, politically as well as physically, but I stood with him. When Karuna offered me the second in command position in the TMVP, I told him clearly that it was Pillaiyan who built the organization with his both hands and he must be the one who should be offered the position. Subsequently I joined with Pillaiyan and went to Trincomalee to be by his side.
Asian Tribune: We wish to ask you a personal question about Pillaiyan. He is already 33 years old and why he is yet not married?
Sinna Jeyam: In the early days when we started the TMVP, I insisted him to get married. But he said that he has made a vow that he will only get married after chasing the LTTE from the East.
Asian Tribune: Oh we were not aware of such a vow. OK now he has succeeded in chasing out the LTTE out of the East. Therefore why don’t you, as his well wisher as well as one of his elder brothers come forward to find a beautiful bride for him?
Sinna Jeyam: Before the election to the Provincial Council, I reminded him that it is high time he should seriously think of getting married. In the meantime we were all busy with elections and now again busy with the affairs of the Provincial Council, anyhow this is in our mind and we will try to arrange his marriage soon.
- Asian Tribune -
Showing posts with label பிள்ளையான். Show all posts
Showing posts with label பிள்ளையான். Show all posts
Tuesday, June 10, 2008
Sunday, June 8, 2008
முதல்வரான பிள்ளையன்! முன்னேறும் அரசியல் சூழ்நிலை!
"இனப் பிரச்சினை'யில் இன்னும் சிக்கித் தவிக்கும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், சட்டசபைத் தேர்தல் நடந்து சில வாரங்கள் ஆகிவிட்டன.
தேர்தலைத் தொடர்ந்து, கிழக்கு பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் போராளிகள் குழுவில் அங்கம் வகித்த "பிள்ளையன்' என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவருக்கு, மத்தியில் ஆளும் "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி' ஆதரவு அளித்து, தேர்தலையும் சேர்ந்தே சந்தித்தது. அது போன்றே மாகாணத்தில் முக்கியமான மற்றொரு சமுதாயமான முஸ்லீம்களின் ஆதரவும் ஒரு சில கட்சிகள் மூலம் முதலில் இருந்தே கிடைத்து வந்துள்ளது.
பிள்ளையன் தலைமை தாங்கி வரும் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற "கருணா அணி' இருக்கும் அரசியல் கட்சி.
கருணா அணி' துவங்கிய பின்னர், ஆயுதப் போராட்டம் மற்றும் தீவிரவாத முறைகளுக்கு விடுதலை கொடுத்து, அரசியல் ரீதியாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறது.
அணித் தலைவரான, விடுதலைப்புலி இயக்கத்தின் கிழக்குப் பிராந்திய முன்னாள் தளபதி கருணா, இங்கிலாந்து நாட்டில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் காலகட்டத்தில் அவரது உதவித் தளபதியான பிள்ளையன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து விடுதலைப் புலி இயக்கத்தினர் வெளியேறி அந்தப் பகுதி இலங்கை ராணுவத்தின் பிடியில் வந்த பின்னர் நடந்த தேர்தலிலேயே, பிள்ளையன் முதல் அமைச்சர் ஆனார்.
இதுவரை, பிள்ளையன் என்று அவரது செல்லப் பெயரை சாதாரணமாக கொச்சையாகப் பயன்படுத்தி வந்த இலங்கைப் பத்திரிகைகள், அவரை, "சந்திரகாந்தன்' என்று மரியாதையாக அழைக்கத் துவங்கியுள்ளன. இதுவே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள முதல் மரியாதை.
என்றாலும், பிள்ளையன் முதல்வரான தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இலங்கைப் பத்திரிகைகளும், வெளிநாட்டுத் தூதரகங்களும், சேவை நிறுவனங்களும்கூட இந்தக் குற்றச்சாட்டை ஆதரித்து அறிக்கைவிட்டன.
குறிப்பாக பிள்ளையன் தலைமையிலான கட்சியினர், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வாக்காளர்களை மிரட்டி வந்ததாகத் தகவல்கள் வெளியாயின. இலங்கை அரசும், அதிபர் மஹிந்தா ராஜபக்ஷேயும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். என்றாலும் நம்புவார்தான் இல்லை.
ஆனால், பிள்ளையன் முதல்வர் ஆன பிறகு நிலைமை கிட்டத்தட்ட தலைகீழாக மாறியுள்ளது என்றே சொல்லவேண்டும். அவர் பதவியேற்ற சூட்டோடு சூடாகக் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் சில முஸ்லீம் இனத்தவர் கடத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த வன்முறைக்கும், கலவரத்துக்கும் பிள்ளையன் கட்சியினரே காரணம் என்றும் கூறப்பட்டது. அதில் உண்மையும் இருந்தது.
பிள்ளையன் குழுவினரின் கைவரிசைகள் எல்லாம், தேர்தல் கால அச்சுறுத்தல்கள் என்ற தரத்திலேயே இருந்தன. இதனால், தேர்தல் சுதந்திரமாக நடைபெறவில்லை என்பதும் உண்மை. என்றாலும், "தேர்தல் வன்முறை' என்று கூறப்படும் அளவிற்குச் செயல்பட்டது என்னவோ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர்தான்.
இலங்கையில், மத்தியில் ஆளும் கூட்டணியின் பொருளாளர் மற்றும் பாராளுமன்றத் தலைமை கொறடாவாக இருந்தவர் ஜெயராஜ் ஃபெர்னாண்டோ பிள்ளை என்பவர். அமைச்சர்; தமிழர். அதிலும், தமிழர்களே அதிகம் இல்லாத மேற்கு மாகாணத்தின் ஒரு தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ஒரே தமிழர்.
அவரைத்தான், கிழக்கு மாகாணத் தேர்தலில் ஆளும் கூட்டணியின் தலைமைப் பொறுப்பாளராக, அதிபர் ராஜபக்ஷே நியமித்து இருந்தார். தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன்னரே அவரை, எல்.டி.டி.இ.யினர் "மனித குண்டு' மூலம் கொன்றுவிட்டனர்.
அது போன்றே தேர்தலுக்கு முந்தைய தினமும், தேர்தல் தினத்தன்றும், கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த அம்பாறை பகுதியில் விடுதலைப் புலிகள், குண்டு வெடிப்புச் சம்பவங்களை அரங்கேற்றினர். இவை அனைத்துமே, "தேர்தல் வன்முறையில்' அடங்கும்.
"நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது' என்பார்கள். அந்த வகையில், பதவியேற்றதிலிருந்து, பிள்ளையன் எனும் சந்திரகாந்தன் தன்னை ஒரு சிறந்த முதல்வராகக் காட்டிக் கொள்ளவே முயற்சி செய்து வருகிறார்.
தமிழர்-முஸ்லீம்கள் இடையேயான இனக்கலவரத்தை அடக்கும் வகையில் முஸ்லீம் இனத்தலைவர்களுடன் கலந்துரையாடி வந்துள்ளார். அது போன்றே கடத்தப்பட்ட இரண்டு முஸ்லீம்களை விடுவிக்க வழி செய்து, அதற்குக் காரணமான தனது கட்சித் தொண்டர் ஒருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் 1990ம் ஆண்டு தீயிட்டுக் கொளுத்திய காத்தான்குடியில் உள்ள மசூதிக்கும் சென்று மக்களிடம் பேசியுள்ளார். அந்தச் சம்பவத்தில், 103 முஸ்லீம்கள் உயிரிழந்தனர்.
அது போன்றே, தனது மாகாணத்தில் வசிக்கும் சிங்கள-பெüத்த மக்களின் நல்லெண்ணத்தைப் பெறவும் முயற்சி செய்துள்ளார். பதவி ஏற்ற கையோடு, சிங்கள-பெüத்தர்களின் மிக முக்கியமான "தலத மாலிகவே' கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கண்டியில் உள்ள இந்தக் கோயிலையும் விடுதலைப்புலிகள் முன்பு ஒரு முறை தாக்கி உள்ளனர்.
தேர்தல் முடிந்து, கிழக்கு மாகாணத்தில் புதிய அரசு அமைந்த நிலையில், அங்கு வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்று அதிபர் ராஜபக்ஷே அறிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் பங்களிப்பு இல்லாமலேயே தமிழர் பகுதி வளம் பெற முடியும் என்று காட்டுவதிலும் அவர் முனைப்பாக உள்ளார்.
கடும் விலைவாசி ஏற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைச் சந்தித்து வரும் வேளையில், கிழக்கு மாகாண வளர்ச்சிப் பணிகளுக்கான முதலீடுகளுக்கு அரசு, வெளிநாட்டு உதவியையும் அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பையுமே எதிர்நோக்கி உள்ளது.
நாடளாவிய வகையில் பெருகி வரும் மக்கள் உரிமை மீறல்கள் காரணமாக, மேலை நாடுகள் இலங்கை அரசை சந்தேகக் கண்களுடன் பார்க்கின்றன. அன்னிய முதலீட்டாளர்களும் இப்படியே சந்தேகிக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைப் பொறுத்தவரை, ""நாட்டில் முழு அமைதி திரும்பும் வரை, வளர்ச்சிப் பணிகள் வெற்றி பெறாது, பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் வரையில் முழு அமைதி திரும்பாது'' என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
மேலும் மாகாண சபைகள் ஏற்படுத்தி அதிகாரம் வழங்கிய இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டதிருத்தம் தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதையும், எல்.டி.டி.இ.யின் அரசியல் குழுத் தலைவர் பால்ராஜ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க வித்திடும் வகையில் நார்வே நாட்டின் தூதுவர்கள் விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளி நொச்சி பகுதிக்குச் செல்ல இலங்கை அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதிபர் ராஜபக்ஷேயைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலி இயக்கத்துடன் நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறார். ஆனால் அதற்கு முன் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அறிவித்து வருகிறார்.
பிள்ளையன் இயக்கத்தினர் ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டே அரசியல் செய்து வரும் வேளையில், அதே முறையை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கும் அந்தச் சலுகையை நீடிக்கலாம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஆயுதம் ஏந்த வேண்டியுள்ளது என்று பிள்ளையன் இயக்கத்தினர் கூறிவருகின்றனர். இதே முறையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் பேச்சுவார்த்தை மூலம் தேசிய நீரோட்டத்தில் கலக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
அதற்கு குறுக்கே நிற்பது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீதான "நம்பகத்தன்மை இல்லாமை'தான்! ஆகவே, "நாங்கள் நம்பத் தகுந்தவர்கள்' என்ற சூழ்நிலையை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
என். சத்தியமூர்த்தி
-தமிழன் எக்ஸ்பிரஸ்
தேர்தலைத் தொடர்ந்து, கிழக்கு பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் போராளிகள் குழுவில் அங்கம் வகித்த "பிள்ளையன்' என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவருக்கு, மத்தியில் ஆளும் "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி' ஆதரவு அளித்து, தேர்தலையும் சேர்ந்தே சந்தித்தது. அது போன்றே மாகாணத்தில் முக்கியமான மற்றொரு சமுதாயமான முஸ்லீம்களின் ஆதரவும் ஒரு சில கட்சிகள் மூலம் முதலில் இருந்தே கிடைத்து வந்துள்ளது.
பிள்ளையன் தலைமை தாங்கி வரும் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற "கருணா அணி' இருக்கும் அரசியல் கட்சி.
கருணா அணி' துவங்கிய பின்னர், ஆயுதப் போராட்டம் மற்றும் தீவிரவாத முறைகளுக்கு விடுதலை கொடுத்து, அரசியல் ரீதியாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறது.
அணித் தலைவரான, விடுதலைப்புலி இயக்கத்தின் கிழக்குப் பிராந்திய முன்னாள் தளபதி கருணா, இங்கிலாந்து நாட்டில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் காலகட்டத்தில் அவரது உதவித் தளபதியான பிள்ளையன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து விடுதலைப் புலி இயக்கத்தினர் வெளியேறி அந்தப் பகுதி இலங்கை ராணுவத்தின் பிடியில் வந்த பின்னர் நடந்த தேர்தலிலேயே, பிள்ளையன் முதல் அமைச்சர் ஆனார்.
இதுவரை, பிள்ளையன் என்று அவரது செல்லப் பெயரை சாதாரணமாக கொச்சையாகப் பயன்படுத்தி வந்த இலங்கைப் பத்திரிகைகள், அவரை, "சந்திரகாந்தன்' என்று மரியாதையாக அழைக்கத் துவங்கியுள்ளன. இதுவே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள முதல் மரியாதை.
என்றாலும், பிள்ளையன் முதல்வரான தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இலங்கைப் பத்திரிகைகளும், வெளிநாட்டுத் தூதரகங்களும், சேவை நிறுவனங்களும்கூட இந்தக் குற்றச்சாட்டை ஆதரித்து அறிக்கைவிட்டன.
குறிப்பாக பிள்ளையன் தலைமையிலான கட்சியினர், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வாக்காளர்களை மிரட்டி வந்ததாகத் தகவல்கள் வெளியாயின. இலங்கை அரசும், அதிபர் மஹிந்தா ராஜபக்ஷேயும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். என்றாலும் நம்புவார்தான் இல்லை.
ஆனால், பிள்ளையன் முதல்வர் ஆன பிறகு நிலைமை கிட்டத்தட்ட தலைகீழாக மாறியுள்ளது என்றே சொல்லவேண்டும். அவர் பதவியேற்ற சூட்டோடு சூடாகக் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் சில முஸ்லீம் இனத்தவர் கடத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த வன்முறைக்கும், கலவரத்துக்கும் பிள்ளையன் கட்சியினரே காரணம் என்றும் கூறப்பட்டது. அதில் உண்மையும் இருந்தது.
பிள்ளையன் குழுவினரின் கைவரிசைகள் எல்லாம், தேர்தல் கால அச்சுறுத்தல்கள் என்ற தரத்திலேயே இருந்தன. இதனால், தேர்தல் சுதந்திரமாக நடைபெறவில்லை என்பதும் உண்மை. என்றாலும், "தேர்தல் வன்முறை' என்று கூறப்படும் அளவிற்குச் செயல்பட்டது என்னவோ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர்தான்.
இலங்கையில், மத்தியில் ஆளும் கூட்டணியின் பொருளாளர் மற்றும் பாராளுமன்றத் தலைமை கொறடாவாக இருந்தவர் ஜெயராஜ் ஃபெர்னாண்டோ பிள்ளை என்பவர். அமைச்சர்; தமிழர். அதிலும், தமிழர்களே அதிகம் இல்லாத மேற்கு மாகாணத்தின் ஒரு தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ஒரே தமிழர்.
அவரைத்தான், கிழக்கு மாகாணத் தேர்தலில் ஆளும் கூட்டணியின் தலைமைப் பொறுப்பாளராக, அதிபர் ராஜபக்ஷே நியமித்து இருந்தார். தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன்னரே அவரை, எல்.டி.டி.இ.யினர் "மனித குண்டு' மூலம் கொன்றுவிட்டனர்.
அது போன்றே தேர்தலுக்கு முந்தைய தினமும், தேர்தல் தினத்தன்றும், கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த அம்பாறை பகுதியில் விடுதலைப் புலிகள், குண்டு வெடிப்புச் சம்பவங்களை அரங்கேற்றினர். இவை அனைத்துமே, "தேர்தல் வன்முறையில்' அடங்கும்.
"நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது' என்பார்கள். அந்த வகையில், பதவியேற்றதிலிருந்து, பிள்ளையன் எனும் சந்திரகாந்தன் தன்னை ஒரு சிறந்த முதல்வராகக் காட்டிக் கொள்ளவே முயற்சி செய்து வருகிறார்.
தமிழர்-முஸ்லீம்கள் இடையேயான இனக்கலவரத்தை அடக்கும் வகையில் முஸ்லீம் இனத்தலைவர்களுடன் கலந்துரையாடி வந்துள்ளார். அது போன்றே கடத்தப்பட்ட இரண்டு முஸ்லீம்களை விடுவிக்க வழி செய்து, அதற்குக் காரணமான தனது கட்சித் தொண்டர் ஒருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் 1990ம் ஆண்டு தீயிட்டுக் கொளுத்திய காத்தான்குடியில் உள்ள மசூதிக்கும் சென்று மக்களிடம் பேசியுள்ளார். அந்தச் சம்பவத்தில், 103 முஸ்லீம்கள் உயிரிழந்தனர்.
அது போன்றே, தனது மாகாணத்தில் வசிக்கும் சிங்கள-பெüத்த மக்களின் நல்லெண்ணத்தைப் பெறவும் முயற்சி செய்துள்ளார். பதவி ஏற்ற கையோடு, சிங்கள-பெüத்தர்களின் மிக முக்கியமான "தலத மாலிகவே' கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கண்டியில் உள்ள இந்தக் கோயிலையும் விடுதலைப்புலிகள் முன்பு ஒரு முறை தாக்கி உள்ளனர்.
தேர்தல் முடிந்து, கிழக்கு மாகாணத்தில் புதிய அரசு அமைந்த நிலையில், அங்கு வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்று அதிபர் ராஜபக்ஷே அறிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் பங்களிப்பு இல்லாமலேயே தமிழர் பகுதி வளம் பெற முடியும் என்று காட்டுவதிலும் அவர் முனைப்பாக உள்ளார்.
கடும் விலைவாசி ஏற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைச் சந்தித்து வரும் வேளையில், கிழக்கு மாகாண வளர்ச்சிப் பணிகளுக்கான முதலீடுகளுக்கு அரசு, வெளிநாட்டு உதவியையும் அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பையுமே எதிர்நோக்கி உள்ளது.
நாடளாவிய வகையில் பெருகி வரும் மக்கள் உரிமை மீறல்கள் காரணமாக, மேலை நாடுகள் இலங்கை அரசை சந்தேகக் கண்களுடன் பார்க்கின்றன. அன்னிய முதலீட்டாளர்களும் இப்படியே சந்தேகிக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைப் பொறுத்தவரை, ""நாட்டில் முழு அமைதி திரும்பும் வரை, வளர்ச்சிப் பணிகள் வெற்றி பெறாது, பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் வரையில் முழு அமைதி திரும்பாது'' என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
மேலும் மாகாண சபைகள் ஏற்படுத்தி அதிகாரம் வழங்கிய இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டதிருத்தம் தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதையும், எல்.டி.டி.இ.யின் அரசியல் குழுத் தலைவர் பால்ராஜ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க வித்திடும் வகையில் நார்வே நாட்டின் தூதுவர்கள் விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளி நொச்சி பகுதிக்குச் செல்ல இலங்கை அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதிபர் ராஜபக்ஷேயைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலி இயக்கத்துடன் நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறார். ஆனால் அதற்கு முன் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அறிவித்து வருகிறார்.
பிள்ளையன் இயக்கத்தினர் ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டே அரசியல் செய்து வரும் வேளையில், அதே முறையை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கும் அந்தச் சலுகையை நீடிக்கலாம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஆயுதம் ஏந்த வேண்டியுள்ளது என்று பிள்ளையன் இயக்கத்தினர் கூறிவருகின்றனர். இதே முறையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் பேச்சுவார்த்தை மூலம் தேசிய நீரோட்டத்தில் கலக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
அதற்கு குறுக்கே நிற்பது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீதான "நம்பகத்தன்மை இல்லாமை'தான்! ஆகவே, "நாங்கள் நம்பத் தகுந்தவர்கள்' என்ற சூழ்நிலையை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
என். சத்தியமூர்த்தி
-தமிழன் எக்ஸ்பிரஸ்
Friday, May 2, 2008
தயாகக் கொள்கைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழர் தாயகக் கொள்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பின் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பயங்கரவான தீவிரவாத இயக்கமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளை தமது அமைப்பு நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், கிழக்கில் இது அமுல்படுத்தப்பட்டால் வடக்கிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக அமையும் என பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் பிரசூரிக்கப்படும் தினமின நாளேட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எங்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாத இயக்கத்திற்கு வெளிப்படையாக சவால் விடுக்ககும் அமைப்பே தமது அமைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விகளுக்கு எமது பிளவும் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதனால் அவர்கள் எந்த நேரமும் தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆயுதமேந்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தார்மீகப் பொறுப்பு தமக்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு பாதுகாப்பு உள்ள போதிலும் எங்களது பல உறுப்பினர்களின் உயிர்களை விடுதலைப் புலிகள் காவு கொண்டுள்ளனர். புலிகளின் தலைவருக்கு கொலை செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது என பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கப்பெற்றால் விடுதலைப் புலிகள் பூண்டோடு அழிவடைந்விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் ஆயுதங்களை களையத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும், அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மானிக்கு வழங்கப்பட வேண்டிய உரிய மரியாதை அவர் இலங்கை வந்தால் வழங்கப்படும் என பிள்ளையான் குறிப்பிட்டார்.
Subscribe to:
Posts (Atom)