முல்லைத்தீவு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் படையினர் மேற்கொண்டு வரும் விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
முல்லைத்தீவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் தாக்குதல்கள் நடத்தப்படும் அதேநேரம், இராணுவ முகாம்களிலிருந்து பல்குழல் ரொக்கட் தாக்குதல்களும் நடத்தப்படுகிறது.
இத்தாக்குதல்களில் பெருமளவு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் அதேநேரம், பலர் காயமடைகின்றனர். சொத்துகளும் சேதமாக்கப்படுகின்றன.
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு மக்கள் நாளாந்தம் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதுடன், அம்மக்கள் பல்வேறு அவலங்களையும் எதிர் நோக்குகின்றனர்.
பொதுமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும் அரச மருத்துவமனை, மாவட்ட செயலகம் மற்றும் ஏனைய முக்கிய அரச அலுவலகங்கள் உள்ள பிரதேசங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பகுதிக்கான தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்ட நிலையில், அப்பிரதேசத்தில் உண்மையாக என்ன நடைபெறுகின்றதென்பதை எம்மால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது.
ஆனால், இத்தாக்குதல்களினால் 2 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. (உயர்தரப்) பரீட்சையில் மாணவர்கள் எவ்வாறு தமது திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
இதனால், இவ்வாறான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம், இது தொடர்பாக சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா.வின் மனிதநேய அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, மருந்து போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சர்வதேச சமூகத்திற்கும் ஐ.நா. உதவி அமைப்புகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Showing posts with label முல்லைத்தீவு. Show all posts
Showing posts with label முல்லைத்தீவு. Show all posts
Monday, August 11, 2008
வன்னியை பிடிப்பதாக சிங்களவர்களை நம்பவைத்து தமிழர்களை வதைக்கும் அரசின் தார்மீகம்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இடதுசாரி முன்னணியின் அமைப்பு செயலாளரும் சப்ரகமூவ மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான சமில் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திக் கொண்டு பிரதேசங்களை கைப்பற்றும் படையினர் பாரிய இழப்புக்களை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளது. தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைய முனைந்தால் கடுமையான இழப்புக்களை சந்திக்க நேரிடுமெனத் தெரிவிக்கும் புலிகள், தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் விமானத் தாக்குதல்களை நடத்துகிறது. புலிகளின் நிலைகள் மீதுதாக்குதல் நடத்தப்பட்டதாக அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறு குழந்தை இறந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் காயமடைந்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேசரீதியில் புலிகளுக்கு சாதகமான தன்மையை உருவாக்கும். யுத்தத்தாலோ, தமிழ் மக்களை கொல்வதாலோ இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. எனவே, சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அரசியல் தீர்வைக் காண முயல வேண்டும். அதைவிடுத்து தான்தோன்றித்தனமாக அரசு தீர்மானங்களை மேற்கொள்வது நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும். தமிழ் மக்கள் நசுக்கப்படும் சூழ்நிலையில் சப்ரகமூவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில் தமிழ் மக்களுக்காக உண்மையிலேயே குரல் கொடுப்பவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் வாக்களித்து அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் வன்னியை கைப்பற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெறவே தமிழ் மக்கள் அழிக்கப்படுகின்றனர் என்று இடதுசாரி முன்னணி நாட்டின் நிலைப்பாட்டையும் தமிர்கள் என்ன செய்யவேண்டும் என்றும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் ஆனால் தமது உரிமையை தமிழர்கள் புறக்கனிப்பது சரியா?
Thursday, August 7, 2008
முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட பலர் காயம்
முல்லைத்தீவு நகரப்பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இராணுவத்தினர் நடத்திய கடுமையான எறிகணை தாக்குதலில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும், குழந்தையொன்று உடல் சிதறி மரணமாகியுள்ளதாகவும் முல்லை தீவு செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு வைத்தியசாலை உட்பட முக்கிய கட்டிடங்கள் பலவும், வீடுகள், பொது கட்டிடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளதாகவும் புலிகளின் குரல் வானொலி இன்ற காலை தெரிவித்துள்ளது, முல்லைத்தீவு வைத்தியசாலை சேதமடைந்திருப்பதனால், காயமடைந்தவர்களுக்கான உடனடி, அவசர முதலுதவி வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை வரையில் காயமடைந்தவர்கள் எவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படவில்லை என வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, காயமடைந்தவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்ற விபரத்தையும் புலிகளின் குரல் வானொலி வெளியிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளை, நடத்தப்பட்ட இந்த எறிகணை தாக்குதல்களினால் நிலைகுலைந்து போன பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு போக்கிடமின்றி சிதறியோடி அவலப்பட்டதாகவும் புலிகளின் குரல்; வானொலி தெரிவித்துள்ளது.
இந்தச்சம்பவம் பற்றிய முழுமையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
வெலிஓயா சிலோன் தியேட்டர் பண்ணைப் பகுதியில் இருந்து நேற்றுக்காலை ஐந்து முனைகளில் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், இந்த முன்னேற்ற முயற்சியை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், இறந்தவர்களின் 4 உடல்களையும் இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிஓயா பகுதியில் இருந்து முல்லைத்தீவு பிரதேசத்தை நோக்கிய முன்னேற்ற முயற்சியை இராணுவத்தினர் சிலோன் தியேட்டர் பண்ணைப் பகுதியில் இருந்தும் நேற்று ஆரம்பித்துள்ள வேளையிலேயே முல்லைத்தீவு நகரை நோக்கிய இந்த நள்ளிரவு நேர எறிகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வெலிஓயா பிரதேசத்தின் ஜனகபுர, கிரிஇப்பன்வௌ ஆகிய பகுதிகளில் இருந்தும் முல்லைத்தீவை நோக்கி இராணுவத்தினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும், இந்த முனையில் காட்டுப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க தொலைவிற்கு முன்னேறியிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இன்று காலை வரையில் காயமடைந்தவர்கள் எவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படவில்லை என வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, காயமடைந்தவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்ற விபரத்தையும் புலிகளின் குரல் வானொலி வெளியிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளை, நடத்தப்பட்ட இந்த எறிகணை தாக்குதல்களினால் நிலைகுலைந்து போன பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு போக்கிடமின்றி சிதறியோடி அவலப்பட்டதாகவும் புலிகளின் குரல்; வானொலி தெரிவித்துள்ளது.
இந்தச்சம்பவம் பற்றிய முழுமையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
வெலிஓயா சிலோன் தியேட்டர் பண்ணைப் பகுதியில் இருந்து நேற்றுக்காலை ஐந்து முனைகளில் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், இந்த முன்னேற்ற முயற்சியை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், இறந்தவர்களின் 4 உடல்களையும் இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிஓயா பகுதியில் இருந்து முல்லைத்தீவு பிரதேசத்தை நோக்கிய முன்னேற்ற முயற்சியை இராணுவத்தினர் சிலோன் தியேட்டர் பண்ணைப் பகுதியில் இருந்தும் நேற்று ஆரம்பித்துள்ள வேளையிலேயே முல்லைத்தீவு நகரை நோக்கிய இந்த நள்ளிரவு நேர எறிகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வெலிஓயா பிரதேசத்தின் ஜனகபுர, கிரிஇப்பன்வௌ ஆகிய பகுதிகளில் இருந்தும் முல்லைத்தீவை நோக்கி இராணுவத்தினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும், இந்த முனையில் காட்டுப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க தொலைவிற்கு முன்னேறியிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Thursday, July 24, 2008
வவுனிக்குளம் பிரதேசத்தில் 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தைப் படையினர் கைப்பற்றியுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வவுனிக்குளம் குளக்கட்டுப் பகுதி உட்பட்ட 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பகுதியை, பாண்டியன்குளத்தில் இருந்து முன்னேறிச் சென்ற படையினர் இன்றுகாலை 10 மணியளவில் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. மல்லாவியில் இருந்து தென்கிழக்காக 3 கிலோ மீற்றர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது,
செறிவான எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களி;ன் உதவியோடு முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் மூண்டதாகவும், இதன்போது குறைந்தது 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 7 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றிய படையினர், உழவு இயந்திரம் ஒன்று, 2 மோட்டார் சைக்கிள்கள் உட்பட வேறு பொருட்களையும் கைப்பற்றியிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டையொட்டி, இம்மாதம் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்தத்தைக் கைக்கொள்ளப் போவதாக 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் வெளியிட்ட போர்நிறுத்த அறிவித்தல் வெளியாகிய இரண்டு தினங்களில் வன்னிப்பிரதேசத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள வவுனிக்குளம் பகுதியை படையினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
செறிவான எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களி;ன் உதவியோடு முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் மூண்டதாகவும், இதன்போது குறைந்தது 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 7 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றிய படையினர், உழவு இயந்திரம் ஒன்று, 2 மோட்டார் சைக்கிள்கள் உட்பட வேறு பொருட்களையும் கைப்பற்றியிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டையொட்டி, இம்மாதம் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்தத்தைக் கைக்கொள்ளப் போவதாக 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் வெளியிட்ட போர்நிறுத்த அறிவித்தல் வெளியாகிய இரண்டு தினங்களில் வன்னிப்பிரதேசத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள வவுனிக்குளம் பகுதியை படையினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
Subscribe to:
Posts (Atom)