Showing posts with label நகைச்சுவைகள். Show all posts
Showing posts with label நகைச்சுவைகள். Show all posts

Tuesday, June 10, 2008

இன்டர்வியூ

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

Friday, June 6, 2008

மகிந்தவுக்கு பிரபாகரன் சவால்

மாலைநேரம் மகிந்த தனது அலவலகத்தில் இருந்தபோது
தொலைபேசி அழைத்தது.



"ஹலோ மிஸ்டர் ராஜபக்ஷ” கனத்த குரலில் ஒருவர் பேசினார்.
நான் பிரபாகரன் பேசுகிறேன். நான் உங்களை அழைத்ததன்
காரணம் நான் உத்தியோகபூர்வமாக யுத்தப்பிரகடனம் ஒன்றை
உங்களுடன் செய்துகொள்கிறேன்.

நல்லது பிரபாகரன் இது நிச்சயமாக முக்கியமான செய்தி.
சொல்லுங்கள் உங்களிடம் இராணுவ பலம் எவ்வளவு.

பிரபாகரன் கணக்கு பார்க்கின்றார். நான் எனது நண்பன் எனது
அயலவர் விடுதலைச் சிறுத்தைகள் முழுக் கிராமத்திலுமுள்ள
ஜுனியர் கிறிக்கட் குழு எல்லாமாகச் சேர்த்தால் எட்டு இராணுவம்
உள்ளது.

ராஜபக்ஷ பெருமூச்சு விட்டு விட்டு சொல்லுகிறார்.பிரபாகரன் நான்
உமக்குச் சொல்லுறன் ஒரு மில்லியன் ஆண்கள் உள்ள
இராணுவம் என் ஆணைக்காக காத்திருக்கின்றது.

பிரபாகரன் சொல்கிறார் ஓகே நான் திரும்ப போன் பண்ணுகிறேன்.

மறுநாள் பிரபாகரன் போனில் அழைக்கிறார். சரி மிஸ்டர் ராஜபக்க்ஷ யுத்தம் இன்னும் அமுலில் தான் உள்ளது. நாங்கள் மேலும்
சில உபகரணங்களைப் பெற்றுக் கொண்டுள்ளோம்.

ராஜபக்ஷ கேட்கிறார் மிஸ்டர் பிரபாகரன் என்ன உபகரணங்
களைப் பெற்றுள்ளீர்கள்.

பிரபாகரன் சொல்கிறார் என்னிடம் இரண்டு நெல்லு வெட்டும்
கொம்பைன் இயந்திரங்களும் புல்டோசர், ட்ராக்டர் எல்லாம்
வைகோவின் பண்ணையிலிருந்து பெற்றுக் கொண்டுள்ளோம்.

மீண்டும் பெருமூச்சுடன் ராஜபக்க்ஷ சொல்கிறார், பிரபாகரன் நான்
உமக்குச் சொல்கிறன் என்னிடம் ஐம்பதாயிரம் சீன டாங்கிகளும்
இரண்டாயிரம் இஸ்ரேல் தயாரிப்பு கண்ணிவெடிகளும் பத்தாயிரம்
சீனத்தயாரிப்பு கவச வாகனங்களும் அத்தோடு நான் உம்மோடு
கடைசியாக கதைத்ததை விட இப்பொழுது ஒன்றரை மில்லியன்
இராணுவமாக அதிகரிகக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் சொல்கிறார் நான் இன்னும் உறுதியுடனிருக்கிறேன்.
திரும்பவும் போன் பண்ணுகிறேன்.

மறுநாள் மீண்டும் பிரபாகரன் ராஜபக்ஷவை போனில் அழைக்கிறார்.
மிஸ்டர் ராஜபக்ஷ யுத்தம் இன்னும் அமுலில்தான் உள்ளது. நாங்
கள் ஆகாயமார்க்கமாக தாக்கும் வசதிகளைப் பெற்றுக்கொண்டுள்
ளோம். இரண்டு றைபிள்களுடன் பயிர்களுக்கு கிருமிநாசினி தெளிக்
கும் கருவியுடன்கூடிய விமானமும் அத்துடன் நெடுமாறனின்
ஹொக்கி விளையாட்டு ரீமும் எம்முடன் இணைந்துள்ளன.

மீண்டும் பெருமூச்சுடன் ராஜபக்க்ஷ சொல்கிறார்.
நான் உமக்கு கட்டாயமாகச சொல்லவேண்டும் மிஸ்டர் பிரபாகரன்
என்னிடம் நாலாயிரம் கிபிர் குண்டுவீச்சு விமானங்களும்
எண்ணாயிரம் பாகிஸ்தானித் தயாரிப்பு அதிரடித் தாக்குதல்
நடத்தக்கூடிய விமானங்களும் அத்துடன் கதிர் உதவியுடன்
தாக்கக் கூடிய ஆகாய மார்க்கத் தாக்குதல் ஏவுகணைகளும்
இந்தியாவினால் வழங்கப் பட்டுள்ளன. அதுமட்டுமல்ல நான்
உம்முடன் கடைசியாக கூறியதைவிட இரண்டு மில்லியனாக
இராணுவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த பிரபாகரன் மிஸ்டர் ராஜபக்க்ஷ நான் திரும்ப
போன் எடுக்கிறேன் என்றார்.

பிரபாகரன் மீண்டும் போனில் அழைக்கிறார்.
சரி மிஸ்டர் ராஜபக்க்ஷ நான் சொல்வதையிட்டு மன்னிக்கவும். நான்
யுத்தத்தை வாபஸ் பெறுகின்றேன்.

இதைக்கேட்கும் போது வருத்தமாக உள்ளது ராஜபக்க்ஷ கூறினார்.
இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன மிஸ்டர் பிரபாகரன்

பிரபாகரன் கூறினார். நாங்கள் கலந்தாலோசித்து முடிவு செய்துள்
ளோம். இரண்டு மில்லியன் போர்க் கைதிகளை வைத்துச் சமாளிக்க எங்களால் முடியாது.

Tuesday, June 3, 2008

பிரித்தானிய தமிழன்

கொழும்பிலுள்ள வீதியொன்றில் ஒருவர் நடந்த சென்று கொண்டிருக்கும்
போது ஒரு வெறிநாயொன்று ஒரு சிறுமியொருவரைத் தாக்கிக்கொண்டிருப்
பதைக் கண்டார்.

உடனே அவர் அந்த வெறிநாயின் தலையில் தடியால் தாக்கி
சிறுமியைக் காப்பாற்றி விட்டார். உடனே அந்தச் சிறுமியின் தாயார்
வேகமாக அவரிடம் சென்று தன் மகளை நாயிடமிருந்து காப்பாற்றியதற்
காக அவருக்கு நன்றி சொல்லி தன்னுடன் கூடவே வந்த ஜேவிபி
பாராளுமன்ற உறுப்பினரையும் அந்தச் சிறுமியின் தாயார் அறிமுகப்படுத்
தி வைத்தார்.

உடனே அந்த ஜேவிபி எம்பி அந்த நபரைப் புகழ்ந்து நன்றி சொல்லி நீர்
ஒரு ஹீரோ நாளை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக கொழும்பு
வாசி சிறுமியின் உயிரைக் காப்பாற்றினார் என் வரும் என்றார்.

ஆனால் சிறுமியின் உயிரைக் காத்த அந்த நபரோ நான் கொழும்பு
வாசியல்ல என்றார்.

ஓ அப்படியானால் துணிவுள்ள இலங்கைப் பிரஜை சிறுமியின் உயிரைக்
காப்பாத்தினார் என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வரும் என்று
ஜேவிபி எம்பி மீண்டும் கூறினார்.

மறுபடியும் அந்த நபர் நான் இலங்கைப் பிரஜையுமல்ல என்று கூறினார்.

அப்போ நீர் யார் என்று ஜேவிபி எம்பி கேட்டார்.

நான் ஒரு பிரித்தானியத் தமிழன் என்று அந்த நபர் பதிலளித்தார்.

மறுநாள் பத்திரிகைகளில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ்ப் பயங்
கரவாதி ஒருவர் இலங்கை நாயொன்றைக் கொன்றுவிட்டார்
என்று
தலைப்புச் செய்தி இருந்தது.

இணையத்திலிருந்து பெறப்பட்டது

பிரபாகரனுடன்,பொட்டம்மான்,தமிழேந்தி

பிரபாகரனுடன்,பொட்டம்மான்,தமிழேந்தி மூவரும் பிரபாகரனுடைய பங்கருக்
கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மேலால் வாத்துக்கள்
கூட்டம் கூட்டமாக பறந்து செல்கின்றன. இந்தப் பறவைகளைச் சுடும்படி
பொட்டம்மானுக்கு பிரபாகரன் உத்தரவிடுகிறார்;.

உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தனது ஏகே 47 துப்பாக்
கியை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை நோக்
கி சுடுகின்றார். துப்பாக்கிக் குண்டுகள் பறவைகளைத் தாக்கவில்லை.

இப்பொழுது நீ சுடு என்று தமிழேந்திக்கு உத்தரவிடுகிறார் பிரபாகரன்.
நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி பறவைக்கூட்டத்தை நோக்கிச் சுடுகிறார்.
பொட்டம்மான் போலவே தமிழேந்தியின் துப்பாக்கிக் குண்டுகள்
பறவைகள் மேல் படவில்லை.

ஆத்திரமடைந்த பிரபாகரன் இங்கு எல்லாவற்றையும் நான்தான் செய்
யவேண்டும் என்று கூறிக்கொண்டு தனது துப்பாக்கியை எடுத்து பறந்து
கொண்டிருக்கும் பறவைகளை நோக்கி ஐந்து வேட்டுக்களைத் தீர்க்
கிறார். இருந்தும் ஒரு பறவைகூட குண்டு பட்டு விழவில்லை.

அங்கு நிசப்தம் உண்டாயிற்று. திடீரென்று தமிழேந்தி எழுந்து நின்று
அட கடவுளே என்ன அதிசயம் அங்கே பாருங்கள் இறந்துபோன
பறவைகள் வானத்தில் பறந்து கொண்டிருக்கின்றன என்றார்.

இணையத்திலிருந்து பெறப்பட்டது

வன்னியில் உள்ள முதியவர்

வன்னியில் தனியாக வாழ்ந்து வரும் முதியவர் தனது தோட்டத்தில் பயிர்
களை நடுவதற்கு நிலத்தைக் கிளற யாரும் இல்லை என்று கொழும்பில்
வசிக்கும் தன் மகனுக்குக் கடிதம் எழுதினார்.

அதற்கு மகனோ தயவு செய்து தோட்டத்தைக் கொத்திக் கிளற வேண்
டாம் தான் அங்கு துப்பாக்கிகளையும் கிளேமோர் கண்டுகளையும்
புதைத்து வைத்திருப்பதாக தனது தகப்பனாருக்கு பதில் எழுதினார்.
மறுநாள் காலை 4 மணயளவில் பொட்டம்மானின் உளவுத்துறையினர்
பலர் அங்கு வந்து முதியவரின் தோட்டப்பகுதி முழுவதையும் கிண்டிக்
கிளறினர். இருந்தும் பொட்டம்மானின் உளவுத்துறையினர் எந்த ஆயுதங்
களையும் கண்டெ டுக்கவில்லை. குழம்பிப்போன பெரியவர் நடந்ததைப்
பற்றி தனது கொழும்பிலுள்ள மகனுக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
அப்பா நீங்கள் இனி மரக்கறிகளை பயிரிடலாம் என்று மகனிடமிருந்து
பதில் வந்தது.

இணையத்தில் இருந்து பெறப்பட்டது