புலிகள் இயக்க பயங்கரவாதிகள் மேற்கொண்டு வரும் குண்டுத்தாக்குதல்களுடன் அரச திணைக்களங்களில் பணியாற்றும் பொறியியலாளர்கள் போன்ற உயர்பதவி வகிப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அண்மையில் குண்டுவெடிப்பு சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 4 ஆம் திகதி வெள்ளவத்தைக்கும் தெகிவளைக்கும் இடைப்பட்ட புகையிரதப் பாதையில் சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது தொடர்பாக பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே இவ்வாறு பொறியியலாளர்களாகப் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்களும் புலிகளின் குண்டுவெடிப்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேற்படி வெள்ளவத்தைதெகிவளை புகையிரதப்பாதைக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சதீசன் பாலசுப்பிரமணியம் எனப்படும் நபரையும் குண்டு வெடிப்புக்கு உதவி வழங்கியவர்கள் எனக் கருதப்படும் தமிழ் இனத்தைச் சேர்ந்த இரண்டு தேசிய பொறியியலாளர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இவர்களில் சதீசன் பாலசுப்பிரமணியம் எனப்படுபவர் குறித்த குண்டு வெடிப்பின் பின்னர் மனைவியுடன் கிளிநொச்சிக்குத் தப்பியோடிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே வவுனியா ஈரப்பெரிய குளம் பாதுகாப்பு தடைமுகாம் பகுதியில் வைத்து 4ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார் என சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரும் மனைவியும் பின்னர் விசாரணைகளுக்காக கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர் கொழும்பு உலக வர்த்தக மத்திய நிலையத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் வத்தளையில் வசித்து வந்த இந்த நபருக்கும் தெகிவளை புகையிரதப்பாதை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்ததாக பொலிஸ் புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் அந்தக் கிளைமோர் குண்டு வெடிப்பை நடத்திவிட்டு தப்பியோடுகையில் அவரைப்பிடிக்க முச்சக்கரவண்டி சாரதியொருவர் முயற்சித்த பொழுது அவர் கைப்பை ஒன்றை விட்டுச் சென்றார் எனவும் அதிலிருந்த நாட்குறிப்பு புத்தகத்திலுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே மேற்படி இரண்டு பொறியியலாளர்களும் வெள்ளவத்தையில் அவர்களின் வசிப்பிடத்தில் வைத்துச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மேற்படி இரண்டு பொறியியலாளர்களும் ராஜகிரிய பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் என்பது தெரியவந்துள்ளதாகவும் இவர்களுக்கும் புலிகள் இயக்க பிரபல நபராகிய குறித்த சதீசன் பாலசுப்பிரமணியத்துக்கும் இடையில் நீண்டகாலம் தொடர்புகள் இருந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து மேலும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கச் சந்தேக நபர் பாலசுப்பிரமணியம் கடந்த காலங்களில் பலதடவை சிங்கப்பூர் சென்று வந்துள்ளார் என்பது விசாரணைகளின்போது தெரிந்துள்ளதாகவும், கிடைத்த தகவல்களிலிருந்து இவர் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப: 06/06/2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment