ஆசிய மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த முன்னணிப் பத்திரிகைகள் தரப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கேற்ப ஆசியாவின் ஏழு முக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்காக ஸ்ரீலங்கா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அவர்களின் பூரண ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வேண்டிய ஆதரவையும் உதவிகளையும் தமது நாடுகள் வழங்குமெனவும் உறுதியளித்துள்ளனர்.
அண்மையில் சீனா, இந்தியா, பாகிஸ்தான், மியன்மார் (பர்மா), மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ் ஆகிய முன்னணி ஆசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம சிங்கப்பூரில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை நிகழ்வுகளின்போதே குறித்த நாடுகளின் பாதுகாப்பு அமைச்சுகளின் ஸ்ரீலங்காவுக்கான உறுதியான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஆசிய மற்றும் மத்தியகிழக்கு ஊடகங்கள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு சிங்கப்பூரில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தின் மனிதத்தன்மையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக மேற்படி முக்கிய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டுமன்றி உலகின் ஏனைய முக்கிய உலக நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் இந்த வகையில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம புலிகள் இயக்கத்துக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் இராஜதந்திர ரீதியில் வெற்றிபெற்றுள்ளார் எனவும் மேலும் குறித்த வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லங்காதீப வெளிநாட்டு செய்திச்சேவை பகுதி: 08.06.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment