Saturday, June 21, 2008

அன்றும்……...இன்றும்……….நம்மினம்

அம்மையோடும் அப்பனோடும்
அக்காள் தங்கையோடும்
அண்ணன் தம்பியோடும்
அண்டை அயலவரோடும்
அகமகிழ்ந்து வாழ்ந்தோம்

மாஞ்சோலை கிழியும் மைனாவும்
மணிப்புறாவும் மாடமாளிகைகளும்
ஆடும் மாடும் அன்னப்பறவையும்
அழகிய மயிலும் பாடும் குயிலோடும்
அகமகிழ்ந்து வாழ்ந்து வந்தோம்

தென்னையும் பனையும்
தேனும் கள்ளும் தென்றல்காற்றும்
தீன்சுவை தமிழும் திகட்டாத கரும்பும்
தின்பதற்கு மிதமிஞ்சிய உணவும்
தின்னையில் பயம் இல்லாமல்
தினம் படுத்துறங்கினோம்

வட்டநிலாவும் வயல்வெளிகளும்
வண்ணத்துபூச்சியும் வண்ண மலரோடும்
வாழைமரங்களோடும் வசதியான வீட்டோடும்
வசதிகள் பலபெற்று வறுமை எதுவும்மின்றி
வாழ்ந்தோம் அகமகிழ்ந்து வாழ்ந்தோம்.

மல்லிகை மலரும் மங்கைளோடும்
மனதிற்கினிய மழலைகளின் மொழிகளோடும்
மண்பானையில் தண்ணிவைத்து தாகம்தீர்த்து
மாமனுடனும் மச்சான் மச்சாளுடனும்
மானத்துடனும் மரியாதையுடன் மகிழ்ந்திருந்தோம்

காற்றும் கடலலைகளும் கட்டுமரங்களும்
வலைகளும் மீனும் வாடியகருவாடும்
வாடைகாற்றும் வசதியான வீடும்
கிணற்றுத் தவளையும் கீரியும்பாம்பும்
பானையும் நீரும் பாலும்சோறும்
தூங்கப் பாயுடன் பயமின்றி
வாழ்ந்தோம் அகமகிழ்ந்து வாழ்தோம்



இன்று

அந்தோ வந்தது பயங்கரவாதம்

அம்மை அப்பன் ஓரிடம்

அண்ணன் தம்பி ஓரிடம்

அக்காள் தங்கை வேறிடம்

அயல் அட்டங்கள் ஓரிடம்


ஆட்டுகுட்டி அருமையான

நாய்குட்டி அத்தனையும் இழந்தோம்

சொல்லொண்ணா துயரம் கொண்டோம்

சொந்தத்தையும் பந்தத்தையும்

சொத்தையும் இழந்தோம்

சோதனைகளையும் பல

வேதனைகளையும் கண்டோம்


எஞ்சியது எதுவும்மில்லை

எல்லாமே இழந்து விட்டோம்

இழப்பதற்கும் எனி ஒன்றுமில்லை

இறப்பவனின் எண்ணிக்கை ஏராளம்

இழவு வீடுகளின் எண்ணிகையும் தாராளம்

ஏன் என்றுகேப்பதற்கும் யாருமில்லை

ஏறுஎடுத்துப் பார்பதற்கும் ஒருவரில்லை

என்னெவென்று சொல்லி

அழுவதென்றே தெரியவில்லை

ஏன் இந்தபிறப்பு என்றே புரியவில்லை


மிதிவெடியும் கண்ணிவெடியும்

குண்டும் கொலையும்

குறைவின்றி விழும்பிணங்களும்

குவிந்துகிடக்க கான்கின்றோம்


பள்ளி சென்ற சிறுவனை

பாதிவழியில் காணவில்லை

பாவியொருவன் பலிகொடுக்கு கடத்திவிட்டான்

பிரபாகரன் பிள்ளைமட்டும் பிழைத்துவிட்டான்

பிறரின் பிள்ளைகளை பிணமாக்கிவிட்டான்

பிழைப்பதற்கும் பணம்சேர்த்துவிட்டான்

பயங்கரவாதத்தை பிரபாகரன் தோற்றிவித்தான்

பயந்தே பயந்தே தமிழன் வாழபழகிவிட்டான்


வறுமை எங்கும் நம்மினத்தை

வதைக்கக் கண்டோம்

வாழ பலவழிகள் இருந்தும்

வன்முறையால் வாழ்வைதனை

இழக்க கண்டோம்

என்று தணியும் இந்தபயங்கரவாதம்

என்று தீரும் நம்மினத்தின் சோகம்



நன்றி. கிபாஸ்கரன்

சுவிஸ்

No comments: