Saturday, June 21, 2008

திக்கு தெரியாத துப்பாக்கிகளுக்கு

திக்கு தெரியாத துப்பாக்கிகளுக்கு
தின்னக்கொடுத்தோம் எங்கள்
ஐனநாயக உரிமைகளை!....

தேசத்தின் விடுதலை என்றார்கள்...
தமிழீழ தாகம் என்றார்கள்.....
தாயகம் என்றார்கள்.....

புலிகள் சொன்ன தாகம்
தமிழர்களின் குருதியை
தமிழர்களே குடித்து சுவைத்தது...

சமாதானம் கனவாகியது...
கனவு கண்டு விழித்த தமிழர்கள்
ஓர் அரக்கன் கனவில் வந்ததாக
சொன்னார்கள்.....

தமிழர்கள்

சாம்பல் விரும்பி
சாம்ராச்சிய கனவு கண்ட
பிரபாகரனை கனவு கண்டனர்.....

அவன் சொன்னான்
கனவில் வந்து.....

எனக்கு வேண்டும் படுகொலை!
மக்களுக்கு ஏன் விடுதலை?...

No comments: