
நடிகை ஐஸ்வர்யாராய்க்கு திருமணத்திற்கு பிறகும் ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் இதன் படிப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் சாஸ் என்ற ஆலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரபல ஆலிவுட் நடிகர் மெரில் ஸ்ட்ரிப் நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யாராய் விபசார அழகியாக தோன்றுகிறார்.
இது பற்றி ஐஸ்வர்யாராய் கூறியதாவது:-
நான் சாஸ் படத்தில் விபசார அழகியாக நடிக்கிறேன். இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்.இந்த ஆண்டு நிறைய முன்னணி தயாரிப்பாளர்கள் என்னை நடிக்க அழைத்தனர். நான் ஆலிவுட் படம், ரோபோ படத்தில் நடிக்க இருப்பதால் மற்ற வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கும் இந்தி படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்துள்ளது. ரோபோவுக்கு பிறகு மணிரத்னம் படத்தில் நடிப்பேன். அதில் எனக்கு ஜோடியாக கணவர் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.
நான் எப்போதுமே ஒரே நேரத்தில் பல படங்களை ஒப்புக்கொள்வதில்லை. இதனால் பல குழப்பங்கள் ஏற்படும். நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய் விடும்.ரஜினியுடன் நடிக்கும் ரோபோ படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.
No comments:
Post a Comment