Sunday, June 15, 2008

கிளிநொச்சி தந்த அரசியல்வாதி!


சங்கத் தமிழ் வகுத்த ஐவகை நிலங்களில் மூவகை நிலங்களான மருதம். முல்லை, நெய்தல் கொண்டு விளங்கும் கிளிநொச்சி தோதல் தொகுதி 1960 ஆம் ஆண்டு சாவச்சேரி, பருத்தித்துறை ஆகிய இரண்டு தேர்தல் அதாகுதிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலப்பரப்புக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது. இத்தேர்தல் தொகுதி கண்ட முதலாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 1960 மார்ச் மாதம் நடைபெற்றது. தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சோசலிஸக்க கொள்கையுடைய லங்கா சமசமாஸ கட்சி வேட்பாளாக இருபத்தேழு வயது நிரம்பிய ஓர் இளைஞன் கிளிநொச்சித் தொகுதி மக்களுக்கு அறிமகமாகிறார். புத்தம் புதியவர். அகில இலங்கை அரசியல் சார்பில் போட்டியிடகின்றார். மீண்டும் அதே ஆண்டு ஜுலை மாதம் பொதுத் தேர்தல் ஒன்று. அதிலும் அதே இளைஞன் அதே கட்சி சாhபில் தேர்தலில் குதிக்கின்றார். பெற்ற வாக்குகளில் அதிகரிப்பு. ஆனால் தோல்விதான் மிஞ்சுகின்றது.

1965 மார்ச் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் நன்கு அறிமுகமானவராக களத்தில் அதே அரசியல் கட்சி சார்பில் போட்டியிடகின்றார். அனாலும் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நிலைக்கு இரண்டாம் இடத்தில் வாக்குகளின் எண்ணிக்கை அதகரித்து நிற்கிறது.

கரைச்சி கிராமசபை பட்டின சபையாக தரமுயர்கின்றது. முதலாவது தலைவராக மக்கள் மகுடம் சூட்டி 1968இல் அதே அரசியல் தொண்டனுக்கு வெற்றி திலகமிடகின்றனர். 1970ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரசியல் சூறாவளியாக மாற்றிய பாராளுமன்ற பொதுத்தேர்தல் அது. லங்கா சமசமாஜ கட்சியின் மொழிக்கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அதிலிருந்து விலகி 1966இல் தன்னை இணைத்துக்கொண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் இறங்குகிறார். கடுமையான போட்டி இலங்கையின் தமிழரசுக் கட்சியின் கோட்டையான கிளிநொச்சித் தொகுதியில் அதன் ஐனரஞ்சக அரசியல் பேச்சாளரான அடலேறு ஆலாலசுந்தரம் அவர்களை எதிர்த்து நிற்கின்றார். வெற்றிக்கனியைப் பறித்துக் கொள்கின்றார். கிளிநொச்சித் தொகுதியின் மூன்றாவது பாரளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இளைஞன் தான் வீரசிங்கம் ஆனந்தசங்கரி.

இக்கால கட்டத்தில்தான் இவரைத்தேடி பிரதி நிதிமந்திரி பதவி வந்தது. அவர் அதனை விரும்பியிருந்தால் அப்பதவியை ஏற்று அதன் சுகபோகங்களை. அந்தஸ்தை அனுபவித்திருக்கலாம். அனால் தன் இனத்தின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்தார்.

1971ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் தந்தை செல்வா அவர்கள் சமர்ப்பித்து ஆறு அம்சக்கோரிக்கையை ஆதரித்து வாதிட்ட 1972ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை அவர் சார்ந்த சக இரண்டு பாராளுமன்ற உறுப்பினாகள் அதரித்த வேளையிலும் கூட அதனை எதிர்த்து வாக்களித்து தமிழினத்தின் அரசியல் போராட்டத்துடன் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார். தந்தை செல்வா, தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் உருவாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார். இதன் மூலம் தனது சொந்தத் தொகுதியில் ஒரு முதல் தர அரசியல் எதிரியை அவரே உருவாக்கிக் கொண்டார்.

அக்கால கட்டத்தில் ஆட்சியிலிருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சராக விளங்கிய செல்லையா குமாரசூரியர் கிளிநொச்சித் தொகுதியை தத்தெடுத்துக் கொண்டு தனது எதிர் கால அரசியலுக்கு அடித்தளம் இடத்தொடங்கினார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளு மன்ற உறுப்பினர்களுக்குரிய கொரவத்தினை வழங்காது “சிற்” முறையில் வேலை வாய்ப்புக்களையும் மற்றும் சலுகைகளையும் அக்கால அரசாங்கம் வழங்கத் தொடங்கியமையால் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கியத்துவம் மக்களிடையே குறையத் தொடங்கியது. மக்கள் தம் தேவைகளுக்காக கட்சி அமைப்பாளாரார்களை மொய்க்கத் தொடங்கிய கால கட்டம் அது. அதிலும் கிளிநொச்சித் தொகுதியைப் பொறுத்தவரை அமைச்சரான செல்லையா குமாரசூரியரின் பிடி இறுகத் தொடங்கியது. அவரது அதிக்கம் சகல துறைகளிலும் வியாபித்து நின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் குடியரசு அரசியல் யாப்புற்கெதிராக சாத்வீகப் போராட்டங்களில் முன்னின்று உழைத்தார். தம் தொகுதி மக்களையும் அப்போராட்டங்களில் ஈடுபட்டு தமிழினத்தின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் தம்மை அர்பணிக்கவும் உற்சாகப்படுத்தினார். அதன் உச்சக் கட்டமாக 1975ஆம் ஆண்டு சட்ட மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது இவர் கைது செய்யப்பட்டு பயங்கர குற்றவாளியைப் போல் உடுத்த உடுப்புடனேயே தனி விமானத்தில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைக் கைதிகள் அணியும் உடையுடன் கொழும்பில் சிறை வைக்கப்பட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் மத்தியில் பரப்பி 1977ஆம் அண்டு ஜுலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக கிளிநொச்சித் தொகுதியில் சக்தி வாய்ந்த ஒரு அமைச்சரையும் இலங்கையின் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரையும் எதிர்த்து போட்டியிட்டு 11.600 மேலதிக வாக்குகளால் அமோக வெற்றி பெற்றார்.
1977 ஜுலை பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். இத்தேர்தல் மூலம் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமியிலான ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக் காக முற்றாகப் பயன்படுத்தினார்.

கிளிநொச்சித் தொகுதி தனி மாவட்டமாக்கியதால் தனியானதொரு மாவட்டச் செயலகம் அமைக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அனைத்துத் திணைக்கள மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டு செயற்பட்டு செயற்டத் தொடங்கியதால் அது புதுப் பொலிவு பெறத் தொடங்கியது.

1983ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொண்ட பாராளுமன்ற பதவி துறப்பு தீர்மானத்தாலும் இனக்கலவர பாதிப்பு மற்றும் வேறுபல காரணங்களாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த பலர் இந்தியாவில் தஞ்சம் புகவேண்டிய சூழ்நிலை தோன்றியது. இருந்த போதிலும் ஆனந்தசங்கரி சிறிது காலமே இந்தியாவில் வாழ்ந்தார். மிகக் குறுகிய காலத்தில் கொழும்பு திரும்பி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்க முற்பட்டார். பழம் பெரும் கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் ஒதுங்கியிருந்த வேளையில் தாமே துணிந்து செயலில் இறங்கி கட்சிப் பணிக்காக தம்மை முழுவதும் அர்பணித்தார்.1994ஆம் ஆண்டு பொதத் தேர்தலில் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் வகையில் கட்டியெழுப்பினார்.

சிரேஷ்ட துணைத்தலைவர் என்னும் பதவியை பெயரளவுக்கு வைத்துக் கொண்டு கட்சி தலைவராக பத்து ஆண்டுகள் செயலாற்றி கட்சியை வளர்த்தெடுத்தார். ஆயுதங்களின் துணையில்லாமல் ஐனநாயக வழியில் அஹிம்சை நெறியில் மக்கள் உள்ளங்களில் அரசியல் துணிவை ஏற்படுத்தி உள்ளுராட்சி மன்ற தோதலில் களம் இறஙங்கி யாழ்ப்பாணம் மாநகரசபைiயையும். வலிகாமம் வடக்கு பிரதேச சபையையும் கட்சியின் நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தார். யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர்கள் இருவர் தொடர்ந்து கொடூரமாக கொல்லப்பட்ட வேளையிலும் துணிந்து நின்று செயற்பட்டு மாநகரசபையை தம் கட்சி உறப்பினர்களைக் கொண்டு செயற்பட வைத்தார்.

2000ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 17 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரதிநிதித்துவப் படுத்திய கிளிநொச்சித் தொகுதி மக்களில் பெரும்பாலானோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத போதிலும் இவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய மக்களால் தேர்தெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும். மீண்டும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட ஆகக் கூடிய விருப்பு வாக்குகளாக 36000 வாக்ககளைப் பெற்று முதலாவது பாராளுமள்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார்

தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களின் மறைவைத் தொடர்ந்து பாரம்பரிய அரசியல் வரலாற்றுப் பின்னணியும், தமிழ் மக்களின் முக்கியமான ஜனநாயக அரசியல் சக்தியாக விளங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகக் கடந்த வருடம் ஜுலை மாதம் தேர்தெடுக்கப்பட்டார். ஆறுகள் ஒருபோதும் பின்னோக்கிப் பாய்வதில்லை. தலைமைத்துவம் அவ்வாறனதே. அது உள்வாங்கப்படவதில்லை. வெளிப்படுத்துவப்படுவது. மகாத்மா காந்தியின் தலைமைத்துவம் பரித்தியாகத்தில் உருவானது. பகட்டுக்களாலும், சாகசத்தாலும், உருவானதல்ல.

தலைமைத்துவம் மக்களின் இதய அடித் தளத்திலிருந்து பூஜிக்கப்படுவது. நிலையான தலைமைத்துவம் அர்ப்ணிப்பினாலும் தீhக்க தரிசனமான வழிகாட்டுதலினாலும் உருவாவதே. அவரது தலைமைத்துவம் குறகிய காலத்துள் சிலரது விமர்சனத்திற்குரிய ஒன்றாக அமைந்து விட்டமை அவரது செயற்பாட்டின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.
“காய்த்த மரம் தான் கல்லடி படும்” என ஊர் வழக்கில் கூறுவார்கள்.
எது எப்படியிருந்த போதிலும் ஆனந்த சங்கரியின் அரசியல். பொதுவாழ்வு பல தடைகள் சோதனைகளின் மத்தியில் வளர்ந்தது. அங்கு ரோஜா மலர்க்கூட்டங்கள் இருக்கவில்லை. முள்புதர்களின் நடுவிலேயே அது தொடருகின்றது.

அவரது பொதுவாழ்வு ஐம்பது ஆண்டுகளை நோக்கிய திசையில் தொருகிறது. அவர் தமது எழுபத்தைந்தாவது பிறந்ததின விழாவினை இன்று 15அம் திகதி கொண்டாடுகின்றார்.

(ஆனந்தசங்கரியின் எழுபத்தைந்தாவது பிறந்த தினத்தையொட்டி இக்கட்டுரை வெளிவருகிறது)

பழையூர் ஏ. பீ. ஜோர்ஜ்

No comments: