Saturday, June 21, 2008

சுனாமி

முல்லை தீவின் கடல் முகத்திரையை
முட்டிமோதி மேவி கிழித்துகொண்டு
சுனாமிவந்து சுழன்றடித்து சுற்றியிருந்த
சுற்றுபிரதேசம் முழுவதையும் சுடுகாடாக்கி விட்டு
தட்டிகேக்க ஆளில்லாமல் தன்னிச்சையாய்
தவித்து நின்ற உயிர்களை எல்லாம்
தன்னகத்தே உள்வாங்கி கொண்டு சென்றது

உற்றார் உறவினர் என்று ஒருவர் பாராமல்
மூச்சு விடுவதற்கே முழுநேரம் வைக்காமல்
முடிந்தவரை பிணமாய் சுனாமி அள்ளிச் சென்றது
முழுப் பிணத்தையும் முழுவதுமாய் அள்ளி
அடக்கம் செய்வதற்குள்…..

புலம்பெயர் நாடுகளில் புலிப் பினாமிகள்
புற்றுக்குள்ளிருந்து புதிதாய் முளைத்து புறப்பட்டு
புனர்வாழ்வுக் கழகமாய் புலர்நிவாரண நிதியென்றும்
புதுப்புது பெயர்களில் புலன் பெயர்ந்தோரிடம் புலம்பியழுது
வகைதொகையின்றி பணத்தை அள்ளி வாரி
சுளை சுளையாய் சுருட்டி கொண்டு போனது

தாயகஉறவென்று நினைத்து தவித்து நின்ற தமிழன்
தானமாய் கொடுத்தான் பணத்தை தயங்காமல்
தவித்த முயல் அடிப்பது போல் அடித்தார்கள்
அள்ளினார்கள் அள்ளினாhகள் காசை அள்ளினார்கள்
அதில் அரவாசியை ஆளுக்கு ஆள் பங்கிட்டுவிட்டு
அதில் மீதி காசை ஆயுதமாக்கி பெட்டிகளில் அடிக்கி
அனுப்பிவைத்தார்கள் அங்கே புலிகளுக்கு
அய்யோ பாவம் அனாதையாய் நம்மினம்
அழுது அழுது அரசாங்கத்திடம் வாங்கிய பணத்தையும்
அதுகளிடம்மிருந்து அபகரித்துவிட்டார்கள் படுபாவிகள்



பாதகம் செய்வோரை ஏறிமிதித்து வதம்செய்வோம் என்று
சபதம்எடுப்போம் சபதம்எடுப்போம் சபதம்எடுப்போம்

கி.பி பாஸ்கரன்

No comments: