தென்பகுதியில் குண்டுவெடிப்புகள் தொடருமானால் சிங்கள மக்கள் மத்தியிலான ஆத்திரத்தினை எவராலும் தடுக்க முடியாது போகும். இதனால் வன்முறைகள் தலைதூக்கும் அபாயம் உள்ளது. எனவே, அத்தகைய நிலை ஏற்படுவதற்கு முன்னர் குண்டு வெடிப்புக்களை தடுப்பதற்கு பொதுமக்களை பாதுகாப்பதற்கான சர்வகட்சி மகா சபை அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
குண்டு வெடிப்புக்களை தடுப்பதற்கான சர்வகட்சி மகா சபை அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையினை அரசாங்கத்திடமும் சர்வகட்சிகளிடமும் முன்வைக்கவுள்ளோம். எமது யோசனைகளை ஏற்றுக்கொண்டால் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க நாம் தயாராகவுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். கொள்ளுப்பிட்டி சீவியூவ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது: தென்பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வெடித்து மக்கள் உயிரிழப்பார்களானால் சிங்கள மக்கள் ஆத்திரமடைந்து அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தும் நிலை உருவாகும். அதன்போது எவராலும் இதனை தடுத்த நிறுத்த முடியாது போகும்.
எனவே, அதற்கு முன்பு குண்டு வெடிப்புக்களை தடுத்து நிறுத்த மக்களை பாதுகாப்பதற்கான சர்வகட்சி மகாசபையை ஏற்படுத்த வேண்டும். அந்த யோசனையையே இன்று முன்வைக்கின்றோம்.
எமது யோசனைகள் ஜனாதிபதி மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். மூன்று காரணங்களை முன்வைத்தே விடுதலைப் புலிகள் சிவில் மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான அழுத்தத்தை கொடுக்கச் செய்வது, படையினரை தென்பகுதிக்கு கொண்டு வரவைப்பது, கலவரத்தினை ஏற்படுத்துவது ஆகியவை காரணங்களாகும்.
ஏ9 பாதைக்கு மாற்றுப்பாதையை தெரிவு செய்துள்ள படையினர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் பின்னடைவையும் தோல்விகளையும் கண்டு வரும் விடுதலைப் புலிகள் தென்பகுதியில் குண்டுகளை வெடிக்க வைத்து சிவிலியன்களை கொலை செய்கின்றனர்.
இதன் மூலம் சிங்கள மக்களை ஆத்திரமடையச் செய்து அப்பாவித் தமிழ் மக்கள் மீதரன தாக்குதல்களை தூண்டி சர்வதேச தலையீடுகளை அதிகரிக்கச் செய்து படை நடவடிக்கைகளை தடுப்பதே நோக்கமாகும்.
இதில் ஒன்றேனும் வெற்றி பெறுமானால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடக்கப்படும். இதற்கு இடமளிக்க முடியாது. எனவே மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொய்யான அரசியல் தீர்வுக்காக சர்வகட்சி குழுவை தேசிய பாதுகாப்பையும், மக்களையும் பாதுகாப்பதற்காக சர்வகட்சி மகாசபையை அமைக்க ண்டுமென்ற யோசனையை ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் அனைத்து கட்சிகளிடமும் முன்வைக்கின்றோம். எமது யோசனைகள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment