Thursday, June 26, 2008

முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் "அக்கா"

அண்மையில் கல்முனையில் நடைபெற்ற வல்லுறவுச் சம்பவமானது
மனிதமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி கிழக்கு
வாழ் பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் தாயாரின் வாக்கு மூலமும் "டெய்லி மிரர்"
பத்திரிகையில் வெளியாகி அதன்பின் இணையங்களிலும் தமிழ் மொழிபெயர்ப்பு பிரசுரமாகியிருந்தது. கிழக்கிற்கு சூரிய உதயம் என வாழ்த்துச் சொல்லி வரவேற்று பிள்ளையான் என்ற துரோகக்கும்பலுக்கு ஆராத்தி பிடித்துக் கொண்டிருந்த பெண்ணியவாதி (பேய்க்காட்டுவாதி) இராஜேஸ்வரிக்கு மேளதாளங்களுக்கு நடுவில் வெளியான மேற்படி செய்தி இடியாகிப் போனது.

அக்கா அதிரடி ஆனந்த சங்கரியாகவும் அரசபுழுகன் ரம்புக்வெலவாகவும்
மாறிவிட்டா. எங்கே கொலைகள் நடக்கிறதோஅங்கெல்லாம் எந்தவித
மறுகேள்வியோ விசாரணையோ இன்றி புலியின் தலையில் போட்டுப் பாசிசம் பேசும் அக்கா இவ்விடயத்தில் அதிகமாய் கரிசனையெடுத்து அதிரடி அறிக்கை வடித்து தனது நெருக்கத்துக்குரிய பிள்ளையானையும் மகிந்த மாத்தையாவையும் குளிர்ச்சிப்படுத்தியுள்ளார்.

லண்டனில் மருத்துவத்தாதி வேலைக்கு வந்த இந்த ராஜேஸ்வரி இலங்கையில் நடைபெறும் யுத்தத்தின் கொடுமையை துயரை எதையுமே ஒரு துளியும் உணராத அனுபவிக்காத ஒருவர். நதிக்கரை கடற்கரையென்று
நாவல் சிறுகதைகள் என ஏதோ தன்னால் இயன்றதை எழுதி வந்தார். எழுத்தில் தனது கவனத்தை இவர் செலுத்தியிருந்தால் சிலவேளை ஒரு சிறந்த எழுத்தாளராக வளர்ச்சி பெற்றிருக்கலாம். அல்லது தனது தொழிலில்
கவனத்தை செலுத்தித் தனது திறனை தமிழினத்துக்குத் தந்திருந்தால் ஒரு
பெண்ணின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்களாகிய நாம் பெருமையடைந்திருப்போம்.


ஆனால் பெண்ணியவாதி மனிதவுரிமைவாதியென தனக்குத்தானே
பெயரிட்டுக்கொண்டு அதற்கு முரணாக நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெண்ணியமென்றால் விவாகரத்துப்பெறுவது, கணவனை பொரியல் சட்டியால் அடித்துக் கலைப்பது எனப்பொருள் கொண்ட அக்காவிடம் அதிகமாக
எதிர்பார்த்தது எங்கள் தவறுதான். பெண்கள் சந்திப்பு இலக்கியச் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் இடைக்கிடை தன்னையும் ஈடுபடுத்தி பொழுது
போக்குப்பெண்ணியம் பேசி வந்தார்.

விடுதலைப் புலிகள் பற்றிய அல்லது தமிழீழவிடுதலைப் போராட்டம் பற்றிய எந்தவித புரிதல்களும் இல்லாமல் லண்டன் வாழ்வோடு தன்னை வேர்பதித்துக் கொண்ட இந்தப்போலிப் பெண்ணியவாதி கணவனை அடித்துத் துரத்திவிட்டு பொழுது போக்குவதற்கு களம் தேடினார். இவ்வேளையில் புலத்தில் மாற்றுக்கருத்தென்று பம்மாத்துப் பண்ணும் சிலருடன் கூட்டை ஏற்படுத்திக்கொண்டு பாசிசம் படுகொலையென்று புலம்பத் தொடங்கினார். இலக்கியத்தில் இருந்த ஆர்வத்தை பாசிசம் என்ற தனக்கே அர்த்தம் புரியாத சொல்லை அடிக்கடி பாவித்து அறிக்கைகள் கண்டனங்கள் எழுத ஆரம்பித்தார்.

தன்னையொரு கிழக்குமாகாண நலன் விரும்பியாகவும் கிழக்குமாகாணத்தின்
விடிவில் அக்கறை கொண்டவராகவும் காட்டிக்கொண்டு தனது அரசியல்
விளையாட்டுக்களை ஆரம்பித்தார். சமயம் பார்த்துக் காத்திருந்த பிரதேசவாதிகள்
சிலர் இவரது தொடர்பை உள்வாங்கி புலியெதிர்ப்புச் செய்வித்துக் கொண்டு
வந்தார்கள். விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து ஒரு பெரும் படையணியின்
தலைவன் தான் என்ற மிதப்பில் இருந்த கருணாவின் கோட்டைக்குள்
அக்காவின் காற்றுப்பட்டு கருணா குழுவைச் சேர்ந்த பலரை லண்டனுக்குள்
அழைத்துக் கொண்டார். கருணாவின் பிளவின் பின் அக்கா காட்டில்ஒரே
மழைதான்.

மேன்மைமிகு சனாதிபதி மகிந்தவையும் சந்தித்து ஏச்ஞ்ஙீகூழூக் போடும்
அளவுக்கு அரசதரப்புடன் அரசபணத்தில் தன்னை ஆளாக்கிக் கொண்டார்.
பிள்ளையான் அக்காவின் தாராள மனதைப் புரிந்து தனது கோட்டைக்குள்
அக்காவுக்கும் கொத்தளம் கொடுத்தான். பிள்ளையானுக்குப் பிடித்த
பிள்ளையானின் சகாக்களுக்குப் பிடித்ததெல்லாம் அக்காவுக்கும் பிடித்தது.

பிள்ளையான் முதலமைச்சராக அக்கா லண்டனிலிருந்து கிழக்கு மக்களின்
வாக்குக்களை பிள்ளையானுக்கு போடும்படி ஆலோசனை சொன்னது
மட்டுமன்றி கிழக்கின் சூரியன்பிள்ளையான் என ஒழுக்கம் கெட்ட
பிள்ளையானை உச்சத்தில் ஏற்றிக் குளிர்மையடைந்தார். இளம் பெண்களை
பிள்ளையான் குழுகடத்தவும் வல்லுறவு கொள்ளவும் பெண்ணியவாதியெனத்
தன்னை அடையாளம் காட்டியஅக்கா ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகினார்.

அங்கே புலிக்கொலை இங்கே புலிவதை என எவர் எவரோ செய்த
கொலைகளுக்கெல்லாம் புலிச்சாயம் அடித்து கண்டனங்கள் விட்டுக்
கொண்டிருந்த அக்காவின் தலையில் இடியாக அண்மையில் கல்முனச் சம்பவம்
வெளிவந்தது. இந்தப் போலி மனிதநேயவாதி மீது இவரை ஆதரித்தவர்களே
கேள்வி கேட்கும் அளவுக்கு விடயம் வெளிவந்துள்ளது.

புலி புலியென புலிக்காச்சலால் பீடிக்கப்பட்டிருந்த அக்கா அதிரடி ஆனந்த
சங்கரி,பொலிஸ் இன்ஸ்பெக்டர் மொகமட் ஐமேல், ஆனந்த விஜெயசுரிய என
தனது பொன்னான 25.ரோக்களையும் நேரத்தையும் செலவளித்து
தொலைபேசியெடுத்து கல்முனை விடயம் பற்றி கேட்ட போது அப்படியொரு
சம்பவமே நடக்கவில்லையெனவும் அறிக்கையொன்றை அவசரமாய்
வெளியிட்டுள்ளார்.

இதுவரை இவரது கண்டனங்களும் சாட்டுதலும் புலிபுலியென்ற போது
இப்படியொருபோதும் உண்மையா பொய்யா என்பதை அறிய ஒரு
சதத்தைத்தானும் செலவளிக்கவுமில்லை உண்மைகளை அறிய
முற்படவுமில்லை. அக்காவின் நெருக்கத்துக்குரிய பிள்ளையான் கும்பலினால்
நடாத்தப்பட்ட சம்பவத்தை அப்படியொன்றும் நடக்கவில்லையென்றும்,
தோற்றுப்போன கட்சியின் பத்திரிகையே டெய்லி மிரர்' எனவும் தனது
பிள்ளையானின்ஆட்சிமீது காழ்ப்புணர்வு கொண்டே நடக்காத பாலியற்
கொடுமையை நடந்ததாக டெய்லி மிரர் செய்தியாளர் ஜெமிலா நஜிபுதீன்' செய்தி
வெளியிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் ஜெமிலா
நஜிபுதீன் அவர்களைத் தேடும் பணியிலும் தனது அரசபரிவாரங்களை
இறக்கியுள்ளார்.

அக்காவின் தாராள மனதைப் புரிந்த பிள்ளையான் தனது கோட்டைக்குள்
அக்காவுக்கும் கொத்தளம் கொடுத்தான். பிள்ளையானுக்குப் பிடித்த
பிள்ளையானின் சகாக்களுக்குப் பிடித்த தெல்லாம் அக்காவுக்கும்
பிடித்தது. பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் புரிந்த
அதிரடிக்கூட்டத்தினரை அக்காவின் அரசாங்கம் கண்டுபிடித்து அவர்கள்
இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்படியாயின் அந்த
அதிரடிக்கூட்டம் யாரக்கோய்? வல்லுறவுக் குற்றம் புரிந்தோருக்கு வெறும்
இடமாற்றம் தான் தண்டனையா? இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
கிடைக்கும் நீதி இதுதானா ? சங்கரித்தாத்தா அக்காவுக்கு செப்பியவை
கற்பழிப்பென்றால் கதறியடித்துக் கொண்டு ஓலமிடும் தமிழ்ப் பத்திரிகைகளில்
இது பற்றி ஏதும் பெரிய செய்திகள் வந்ததாகத் எனக்கு தெரியாது என்றார் திரு
ஆனந்தசங்கரி' ஐயா செத்தவைக்கே வாக்குப்போடச் சொல்லி காசும் கடிதமும்
போட்டவர். உயிரோடிருப்பவர்களுக்கும் செத்தவர்களுக்கும் வித்தியாசம்
தெரியாத மாறாட்டத்திலிருந்து மீள்வதும் பின்னர் உறங்குவதுமாக இருக்க
எப்பிடியக்கோய் அவருக்கு இந்தப்பிரச்சனைகளெல்லாம் தெரியவரும் ?சரி
உங்கள் வாதப்படி பார்ப்போம் நீங்கள் சொன்ன அதிகாரிகளும் ஆனந்தசங்கரியும்
மக்களுடன் சேர்ந்தா பணியாற்றுகிறார்கள் ?காவலாளிகளுக்கு நடவிலும்
குளிரூட்டப்பட்ட அறைகளில் உங்களைப்போல சுழல் கதிரைகளில் சுழன்றபடி
சோம்பிக் கிடப்பவர்கள்.

என்னக்கோய் சொன்னீங்கள்? உடல் வியாபாரம்தான் விபச்சாரமல்ல
உண்மைகளை மறைத்து விடயங்களை விற்பதும்
விபச்சாரம்தான்.புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் நடக்கும் கொலைகளுக்குப் பணம்
கொடுத்துக் கொண்டு கொலைகளை நியாயப்படுத்திக் கொண்டு பெண்களின்
பாலியல் தொடர்பான ஒரு வரி பத்திரிகையில் வந்துவிட்டால் தமிழ்க் கற்பு
பற்றி ஓலம் போடுவதற்கு முன்னால் நடந்த விடயங்களுக்குப் பின்னிருக்கும்
உண்மைகளை அறிந்து விட்டு எழுதுவது கவுரவம்'(ராஜேஸ்வரி) நீங்கள்
செய்வது என்னக்கோய் ? கவுரவமாஅப்படியென்றால் என்ன எனக்கேட்கும்
நீங்கள்நியாயப்படுத்தும் பொய்யை எந்த வகையில் சேர்க்க?
பத்திரிகையாளர்களுக்கு இலங்கையில் உங்கள் பிள்ளையானும் மகிந்த
மாத்தையாவும் கொடுக்கும் பரிசுகளை நாமும் அறிந்தபடிதானிருக்கிறோம்.
எத்தனை பத்திரிகையாளர்களை உங்கள் அரசு கொன்று போட்டது ஞாபகமா ?
கொலைகளை யாருமே ஞஉயாயப் படுத்தியதில்லை ஆனால் நீங்கள் நடந்த
உண்மையை மறைக்க எத்தனை தரம் விபச்சாரம் செய்கிறீர்கள்? பணம்
வாங்கிக் கொல்வதற்கு நீங்களும் உங்கள் பிள்ளையானும் இருக்க இங்கு
யாரும் பணம் கொடுக்கவில்லையக்கோய்?.

பத்திரிகையாளர் ஜமீலா எழுதிய சீதா குடும்பத்தைத்தேடி உங்கள் அனுமார்கள் இலங்கை முழுவதும் வலைவிரித்து அலைவதாகவும் சொன்னீர்கள். உங்கள் அனுமார்களுக்கு இன்னும் சீதாக்கள் தேவைப்படுவார்கள். அவர்கள் தேவைகள் தீரஉங்கள் பதவி கைகூட நிச்சயம்
அனுமார்கள்வடிவில் உங்கள் ஆசீர்வாதம் அவர்களுக்குக்கிடைக்கும்.
பத்திரிகையாளர் ஜமீலாவுக்குக் கூட சீதா குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடுமை
நிகழாது என்பது நிச்சயமில்லா நிலைமையில் இலங்கையின் சனநாயகமும்
உங்கள் கிழக்குச்சூரியனும் அவன் படைகளும் இருக்க சீதா குடும்பம்
மட்டுமல்ல இன்னும் நிறையவே வெளிவராத உண்மைகள் கிழக்கில்
நடைபெறுகின்றன.

அவை வெளியில் சொல்லப்படுகின்ற போது உங்கள் பிள்ளையான் நிலை ? உங்கள் நிலையும் தான் ?

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

No comments: