Tuesday, July 22, 2008

மீண்டும் புலிகளுடன் சேர மாட்டேன் எனக் கருணா தெரிவித்துள்ளார்

முன்னாள் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதேச தலைவராக இருந்து சில வருடங்களின் முன்னர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற கருணா மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதாக சில தகவல்கள் வெளியாகி வருவதைத் தொடர்ந்து அண்மையில் சில வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் கிளப்பப்பட்ட சந்தேகங்கள் சம்பந்தமாக கருணா குறித்த ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப குறித்த வெளிநாட்டு ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ கூறியிருக்கும் கருத்துக்களில் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்படுவது போல அவர் மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், மேற்படியான வதந்திகளில் உண்மை கிடையாது எனவும் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் உறுதியாக கருணா கூறியதாக குறித்த ஊடகத்தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மேலும் கருணா சிறிலங்காவுக்கு நாடு திரும்பிய பின்னர் அந்த ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ புலிகள் இயக்கத்தில் மீண்டும் சேருவது பற்றிய தகவல்கள் பற்றி உறுதியாகத் தெரிவித்திருக்கும் கருத்தில் அவ்வாறு தான் மீண்டும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் கையாளாக மாறப் போவதில்லை எனக் கூறியதாக தெரிய வந்துள்ளது. கருணா ஐக்கிய இராச்சியத்தில் சிறையிலிருந்து விடுதலையான பின்னரும், மற்றும் சிறிலங்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரை பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். ஆயினும் கருணா பிரபாகரனோடு மீண்டும் சேரப்போவதாக ஒரு சில ஊடகங்களிலிருந்து சந்தேகத் தகவல்கள் வெளியாகிய பின்னரே கருணா மேற்படி தகவல்களை உறுதியாக மறுத்து மேற்படி கருத்துக்களை கூறியுள்ளார்.

No comments: