
ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே பாடத்தில் ஒரே நேரத்தில் தாயும் மகளும் பட்டம் பெற்ற விநோத சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.
பேர்மிங்ஹாம் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான அம்ரத் போகல் (43 வயது), அவருடைய மகளான குர்பிறீத் (21 வயது) ஆகியோரே அஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஒரே சமயத்தில் விஞ்ஞானத்தில் இளமானி பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
இந்திய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தனது பெற்றோர் 1947 ஆம் ஆண்டு முதற்கொண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட போகல், தான் ஆசிய நாட்டு பெண் என்ற ரீதியில் பெருமையடைவதாக கூறினார்.
இந்தப் பட்டத்தைப் பெற தனது கணவரான ஜஸ்வந்தே ஊக்குவிப்பு வழங்கியதாகத் தெரிவித்த அவர், தனது கணவரின் தாயார் உத்தர பிரதேசத்தில் தற்போதும் வாழ்ந்து வருவதாகக் கூறினார்.
No comments:
Post a Comment