Sunday, June 22, 2008
கொழும்பு வந்துள்ள இந்திய உயரதிகாரிகள் குழுவினர் தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் சந்திப்பு
நேற்றுமுன்தினம் கொழும்பு வருகை தந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன், இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத், பிரதி தூதுவர் மாணிக்கம், இந்தியாவின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதி திருமூர்த்தி ஆகியோரடங்கிய குழுவினரை தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் நேற்று முற்பகல் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, வடக்கு-கிழக்கு நிலைமைகள், யுத்த நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது தமிழ்த்தரப்பு அரசியல் தலைமைகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மையே நிலைமைகளை மோசமடையச் செய்துள்ளதென்பதை இந்திய உயரதிகாரிகள் குழு சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment